அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், கட்சியில் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொள்ள அடுத்தகட்ட நட வடிக்கைகளைத் தொடங்கியிருக் கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமானது கிடையாது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு.
அ.தி.மு.க.வின் பொதுக்குழு பஞ்சாயத்தில் எடப்பாடிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். செய்த மேல்முறையீட்டு வழக்கில், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பினை உறுதிசெய்து சமீபத்தில் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக இருப்பதை ஓ.பி.எஸ்.சும் அவரது தரப்பினரும் ஏற்க மறுத்து வருகிறார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட ஓ.பி.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள் பலரும் தீர்ப்பினை வரிக்கு வரி ஆராய்ந்துள்ளனர்.
ஓ.பி.எஸ். ஆதரவாளரும் வழக்கறிஞரு மான பெங்களூரு புகழேந்தி, "உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பில் பொதுக்குழு நடத்தப்பட்டது சரி என்கிற ரீதியில்தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர, பொதுக்குழுவின் தீர்மானங்கள் செல்லும் என சொல்லப்படவில்லை. தீர்மானங்களை பொறுத்தவரை சிவில் வழக்குகளின் முடிவு களில் தெரிந்துகொள்ளுங்கள் என நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார் கள். இடைக்கால பொதுச்செயலாள ராக எடப்பாடி தேர்வு செய்யப்பட் டது குறித்தும் உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. பொதுக்குழு நடந் தது செல்லும் என் பதைத் தவிர வேறு எந்த உரிமையையும் எடப்பாடிக்கு சாதகமாக சொல்லவில்லை. அதனால் எடப்பாடியிடம் அ.தி.மு.க. சென்றுள்ளதாக சொல்வது தவறு. ஆனால், அப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை உரு வாக்குகிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள். அந்த பிம்பத்தை நாங்கள் உடைத்தெறி வோம்''’என்கிறார் மிக உறுதியாக.
இது குறித்து எடப்பாடி தரப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமியிடம் கேட்டபோது,’"ஓ.பி.எஸ்.ஸிடம் சரியான ஆலோசகர்கள் யாரும் இல்லாததால்தான், உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இருக்கும் நிலையிலும் அதனை ஏற்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த தவிப்பு, அவர்களை தவறான கருத்துக்களை சொல்லவைக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும்; தனிநீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்ததை எதிர்த்துதான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார் ஓ.பி.எஸ். எந்த பொருள் குறித்து மேல்முறையீடு செய்யப்படுகிறதோ அதற்கு மட்டும்தான் தீர்ப்பு சொல்லப்படும்.
அந்த வகையில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 2-ந் தேதி அளித்த தீர்ப் பினை நாங்கள் உறுதி செய்கிறோம் என அழுத்தமாகச் சொல்லியிருக் கிறார்கள். செப்டம்பர் 2-ந் தேதி கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பது, சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு. இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பானது, ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்பதுதான். ஆக, இரண்டு நீதிபதிகள் கொடுத்த இந்தத் தீர்ப்பைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுக்குழு செல்லும் என்றாலே அந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் தீர்மானங்களும் செல்லும் என்றுதான் அர்த்தம்!
இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அந்தத் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை ஓ.பி.எஸ்.ஸும் அவரது ஆதரவு வழக்கறிஞர் களும் மறந்துவிடுகிறார்கள். அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கே சாதகமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அ.தி.மு.க. ஒற்றைத் தலைமையில் இயங்குவதை இனி யாராலும் தடுக்கமுடியாது. எந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்தாரோ, அந்த வழக்கில் ஓ.பி.எஸ்.ஸுக்கு தோல்வி கிடைத்துள்ளது. தங்களுக்குக் கிடைத்த தோல்வியை மறைக்கவும், இனி தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதாலும் ஏற்பட்ட விரக்தியில்தான் ஓ.பி.எஸ்.ஸும் அவரது ஆதரவாளர்களும் எடப்பாடிக்கு தீர்ப்பு சாதகமாகயில்லை என புலம்புகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணை யத்தில் எங்களுக்கு எதிராக ஓ.பி. எஸ். முறையிடுவார். ஆனால், அங் கேயும் ஓ.பி.எஸ்.ஸுக்கு தோல்வி தான் கிடைக்கும். அதற்கு முன்னு தாரணமாக, சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து கட்சி யாருக்கு சொந்தம் என்கிற பிரச்சனையில் ஏக்நாத் ஷிண்டே விடம் தான் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் பெரும்பான் மை இருக்கிறது எனச் சொல்லி கட்சியும் சின்னமும் அவர் தரப்புக்கே சொந்த மென ஒதுக்கி ஷிண்டே தலைமையை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக் கிறது. அதே பாணியில்தான் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். ஏனெனில், பெரும்பான்மை எங்களிடம் இருக்கிறது'' என்கிறார் அதிரடியாக.
இந்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸை பற்றி அலட்டிக்கொள்ளாமல் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. உச்சநீதிமன்றத் தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், அந்தத் தாக்கம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காக, ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுவதும் இந்த மாதம் 5, 6, 7 மற்றும் 10, 11, 12 ஆகிய 6 நாட்களுக்கு நடத்து கிறார். இந்தக் கூட்டத்தை பிரமாண்டப்படுத்த அ.தி.மு.க. பெரும்தலைகளால் முன்னெடுக்கப் படுகிறது. சென்னையில் முதல்நாள் பொதுக் கூட்டத்தை துவக்கி வைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து, பொதுக்குழு தீர்மானத்தின்படி, அ.தி.மு.க.வில் பொதுச்செய லாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி யை அறிவிக்கவும் எடப்பாடி திட்ட மிட்டுள்ளார்.
அந்தத் தேர்தல் மூலம் பொதுச்செய லாளரானதும்தான் எடப்பாடியின் உண்மை யான முகத்தை ஓ.பி.எஸ்.ஸும் பா.ஜ.க.வும் பார்க்கப்போகிறார்கள் என்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள். இதனை எந்தவகையில் தடுக்கப்போகிறார் என்பதில்தான் ஓ.பி.எஸ்.ஸின் ராஜதந்திரம் இருக்கப் போகிறது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு.