உதகை நகராட்சியை 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த தற்கு பின்னால் பொதுப் பிரிவு ஆக்கியது. அதற்கு பின்னால் 3 தடவை பொதுத் தொகுதியாய் இருக்க வேண்டிய உதகையை 2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஊட்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வான புத்திசந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனதும், நகராட்சியில் தன்னை எதிர்க்க யாரும் இருக்கக்கூடாது. ஊட்டி நகராட்சி சுற்றுலாத் தளங்கள் நிறைந்து செல்வம் கொழிப்பதால், தன் சொல் பேச்சைக் கேட்கும் ஆளே நகராட்சி தலைவராக வேண்டும் என்பதால், நகராட்சியை திரும்பவும் பட்டியலின தொகுதியாக ஆகச் செய்து, அதில் பி.ஜே.பியில் இருந்து அப்போதுதான் கட்சிக்குள் வந்த சத்தியபாமாவை நகராட்சி தலைவி ஆக்கினார்.
2016-ல் உள்ளாட்சி தேர்தலே நடைபெறாததால், இந்த 2022-ல் நடக்கும் உள்ளாட்சியில் பட்டியலின தொகுதி மீண்டும் பொதுத் தொகுதியாக மாறி விடும் ...என்று தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உற்சாகமாய் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதில்... அ.தி.மு.க.வில் முன்னாள் நகரச் செயலாளரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான கோபாலகிருஷ்ணன் மட்டுமே பெரிய பலமாய் இருக்கிறார். எஸ்.கே.ஜி சுரேசும் போட்டியில் இருக்கிறார்.
ஒருவேளை பட்டியலின பெண் சேர்மனுக்கு உரியதாக இருந்தால் நகராட்சி தலைவியாக இருந்த சத்தியபாமாவும், கவுன்சிலராய் இருந்த கீதாவுமே போட்டியில் நிற்பார்கள். தி.மு.க.வில் பொதுத் தொகுதியாய் இருந்தால் மா.செயலாளர் முபாரக்கின் ஆதரவாளரும், முன்னாள் நகரச் செயலாளருமாய் இருந்த ரவிகுமார் சீட் கேட்கக்கூடும். ஆனால் ஊட்டி மார்க்கெட்டில் கடைகளை வைத்திருப்போரிடம் 65 லட்ச ரூபாய் வரை பணம் வசூலித்தது, மார்க்கெட்டையே மூடியது.. என கெட்ட பெயர்கள் ரவிகுமாரை சுற்றி பனி மூட்டம் போல படர்ந்திருக்கிறது. ஆனால் இப்போதைய தி.மு.க உதகை நகரச் செயலாளரான ஜார்ஜ்... மூடிய மார்க்கெட்டை வியாபாரிகள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி திறக்க வைத்தது, கொரொனோ தொற்று ஏற்பட்டபோது, தன் சொந்த செலவில், முகக் கவசங்கள், காய்கறிகள், அரிசி, மளிகை சாமான்கள் இப்போதுவரை கொடுத்துக் கொண்டிருப்பது... என நகராட்சி மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் உதகைத் தொகுதியில் ஊட்டி நகராட்சியில் தி.மு.க. செய்த பணிகளின் மூலம், காங்கிரஸ் கட்சியின் கணேஷை ஜெயிக்க வைத்ததும்கூட ஜார்ஜுக்குள்ள முக்கியத்துவத்தைக் கூட்டு கிறது. இதனோடு, வனத்துறை மினிஸ்டர் ராமச்சந்திரன், எம்.பி. ஆ.ராசா ஆகியோரும் ஜார்ஜை முன்னிலைப்படுத்துவதும் அவருக்கு ப்ளஸ்தான்.
பி.ஜே.பி, காங்கிரஸ், நா.த.க, ம.நீ.ம., போன்றவை சரியான வேட்பாளர்களை உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் கை விரித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள்.