"ஹலோ தலைவரே, அடிக்கடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்படும் நிலையில், போன ஆட்சியில் செல்வாக்காக இருந்த அதிகாரிகள் இப்பவும் வெயிட்டா இருப்பதை கோட்டை வட்டாரம் கூர்ந்து கவனிக்குது.''”

"ஆமாம்பா...''”

"கடந்த 13-ந் தேதி 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு போடப்பட்ட டிரான்ஸ்பர் ஆர்டர்களைப் பொருத்தவரை, எடப்பாடியால் கன்ஃபர்டு ஐ.ஏ.எஸ். ஆக்கப்பட்டு கூட்டுறவுத்துறையில் வெயிட்டாக இருந்த அவரது உறவினர் கார்மேகம், இப்ப எடப்பாடியின் சேலம் மாவட்டத்திலேயே கலெக்டராக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் 2011 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக நடந்துகொண்டார்னு விமர்சிக்கப்பட்ட அப்போதைய தமிழகத் தேர்தல் அதிகாரியான சந்தீப் சக்சேனா, அதன் பிறகு ஒன்றிய அரசின் பணிக்குப் போய்ட்டார். அவரை மாநில அரசுப் பணிக்கு கொண்டு வந்து, பொதுப்பணித்துறை செயலாளராக்கியிருக்கு தி.மு.க. அரசு.''”

rang

Advertisment

"நானும் கேள்விப்பட்டேம்ப்பா...''”

"மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினரான செந்தில்ராஜ், தூத்துக்குடி கலெக்டராக இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் இவர் மாற்றப்படுவார்னு பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அங்கேயேதான் தொடருறாரு. அதே விஜயபாஸ்கரோட புதுக்கோட்டை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரியை, பவர்ஃபுல் போஸ்டிங்கான பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் போட்டிருக்காங்க.''

"தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியா முன்னாள் தி.மு.க. எம்பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டிருக்காரே?''

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.சுப்பையாவின் மகனான ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க சார்பில் நாகை தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.பி.யானவர். 2014-ல் ஜெயிக்க முடியலை. 2019ல் தி.மு.க .கூட்டணியில் கம்யூனிஸ்ட் டுக்கு நாகை தொகுதி ஒதுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பதவியும் விஜயனுக்கு இல்லாத நிலையில், மாநில விவசாய அணிச் செயலாளராக்கியது தி.மு.க தலைமை. இப்ப மாநில அமைச்சர் பதவிக்கு இணை யான, டெல்லி பிரதிநிதி பதவி வழங்கப்பட்டிருக்கு. இது தி.மு.க.வில் உள்ள தேவேந்திர குல வேளாளர் தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கு.''”

"முதல்வர் ஸ்டாலினின் முதல் டெல்லி விசிட் செய்தி வெளியானதுமே பிரதமர் தரப்பிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸாமே?''”

"ஆமாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகளோடு 16-ந் தேதி இரவு டெல்லிக்குச் சென்றார். அவருக்கு முன்னதாகவே டெல்லி சென்றிருந்த சீனியர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள், ஸ்டாலினுக்கான வரவேற்பு ஏற்பாடுகளை கவனிச்சிக்கிட்டாங்க. பிரதமரை சந்திக்கச் செல்லும் புரோகிராமுக்காக, ஸ்டாலினை அழைத்து வர குண்டு துளைக்காத நவீன காரை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு பண்ணியிருந்தது. ஒன்றிய. அரசால் மிகவும் மதிக்கப்படும் மூத்த தலைவர்களை, இப்படி குண்டு துளைக்காத காரில் அழைப்பது பிரதமர் அலுவலக வழக்கமாம். இதன்மூலம், ஸ்டாலின்மீது, தான் வைத்திருக்கும் மதிப்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருக் கார்னு டெல்லித் தரப்பு சொல்லுது.''”

"பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள் சென்னை கோட்டையில் ஸ்டாலினை சந்திச்சாரே?''’

rr"ஆமாங்க தலைவரே, டெல்லியில் பிரதமரை சந்திக்கும்போது, 7 பேர் விடுதலை குறித்து மோடி யிடம் ஸ்டாலின் விவாதிப்பார் என்ற செய்தி வெளி யானதால், பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம் மாள், முதல்வர் ஸ்டாலினை 16-ந் தேதி கோட்டை யில் சந்திச்சார். அப்ப, என் மகனுக்கு பரோல் கிடைக்க உதவி செய்ததற்கு ரொம்பவும் நன்றிங்கய்யா. அவனது உடல் நலம் சீராகும் வரையில் பரோலை நீட்டித்துக் கொடுக்கணும். ஏழுபேர் விடுதலைக்கும் நீங்கதான் முயற்சி எடுக்கணும். உங்களால்தான் அதைச் செய்யமுடியும்னு உருக்கமாக அவர் வேண்டுகோள் வச்சிருக்கார். அதைகேட்ட ஸ்டாலின், இனி நல்லது நடக்கும்னு நம்பிக்கை யோட இருங்கன்னு நம்பிக்கையூட்டி இருக்காரு.''”

"பதவி வேண்டாம்னு வீம்பு காட்டி வந்த ஓ.பி.எஸ்., அ.தி.மு.க.வின் சட்டமன்றத் துணைத் தலைவரா ஆயிட்டாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, எடப்பாடி கையாண்ட டெக்னிக்தான், இந்த மாயத்தை நிகழ்த்தியிருக்குதுன்னு அ.தி.மு.க. சீனியர்கள் சொல்றாங்க. 21-ந் தேதி சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், 14-ந் தேதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க் கள் கூட்டம் பரபரப்பா கூடுச்சு. அப்ப, சட்டமன்றத்துக்கு கட்சியின் துணைத் தலைவரா நீங்க பதவி ஏத்துக்கணும்னு ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி வேண்டுகோள் வச்சார். அதுக்கு ஓ,.பி.எஸ்., அதில் எனக்கு விருப்பம் இல்லைன்னு மறுத்தார். உடனே எடப்பாடி, "அண்ணே, உங்க தலைமையில்தான் கட்சி இருக்கு. நான் அதில் உங்களுக்கு உதவியா இருக்கேன். அதேபோல, சட்டமன்றத்தில் எனக்கு உதவியாக நீங்க இருக்கணும்'னு உருக்கமாப் பேசியிருக்கார். அதோட நிறுத்தாம, "உங்களுக்கு விருப்பமில்லைன்னா சொல்லுங்க... இப்பவே நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரிசைன் பண்ணிடுறேன். நான் உங்களுக்கு உதவியா துணைத்தலைவரா இருக்கேன்'னு சொன்னாராம்.''’

r

"ம்....''”

"அதுக்கப்புறம்தான் துணைத் தலைவரா இருக்க ஓ.பி.எஸ். ஒத்துக்கிட்டாராம். அதேபோல கட்சிக் கொறடாவாக வேலுமணியைத் தேர்வு செய்யலாமான்னு எடப்பாடி கேட்க, ஓ.பி. எஸ்.சோ அதை மறுத்து, மனோஜ் பாண்டியனை நியமிக்கலாம்னு சொன்னார். உடனே கோவை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து, மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் ஜெயிக்க வைத்தவர் வேலுமணி. அதேபோல யாரேனும் செய்திருக்கிறீர்களான்னு ஏக காலத்தில் குரல் கொடுக்க, வேறுவழியில்லாமல் ஓ.பி.எஸ். அமைதியாயிட்டாராம். அதனையடுத்துதான் துணைக் கொறடாவாக அரக்கோணம் ரவி, சட்டமன்ற குழுவின் பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டி ருக்காங்க.''”

"அதுசரிப்பா, ஊரக வளர்ச்சித் துறையில் பரபரப்பு தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, ஊரக வளர்ச்சித் துறையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்கிற முக்கிய பதவி இருக்கிறது. இதில் இணை இயக்குநர் கேடரில் இருப்பவர்களே இதுவரை இருந்து வந்தனர். தற்போது இந்த பதவியில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரிகளை 10 மாவட்டங்களுக்கு நியமித்திருக்கிறார்கள். இது சரியான நடவடிக்கை என பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த பதவியில் இருந்த இணை இயக்குநர்களுக்குப் புதிய பணியிடங்களை ஒதுக்க முடியாமல் இருக்கிறதாம். அவர்களை எந்த பணியில் அமர்த்தலாம் என்று ஆலோசிக் கிறார்களாம். இதற்கிடையே, இந்தத் துறையின் இயக்குநராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமி, சமீபத்தில் மாற்றப்பட்டு, நாகை கலெக்டராக இருந்த பிரவீன் பி.நாயர் நியமிக்கப்பட்டி ருக்கிறார். அவர் பொறுப்பை ஏற்பதற்குள்ளேயே, புதிய பணியிடங்களைக் கண்டறிந்து இணை இயக்குநர்களை அதில் நியமித்துவிடணும்னு துடிச்சாராம் பழனிச்சாமி.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. வான உதயநிதி ஸ்டாலின், தன் தொகுதியில் இருக்கும் மக்களுக்கு வீடு வீடாகப் போய், தனது சார்பில் மளிகைப் பொருட்களை கொரோனா நிவாரணமா கொடுக்கிறார். ஒவ்வொரு தெருவிலும் உள்ள பிரச்சினைகளை கவனிக்கிறார். ஆனா, அவர் தொகுதியில் உள்ள கட்சியின் பகுதிச் செயலாளர் ஒருவரால புதுப் பிரச்சினையாம். வசூல் மன்னன்னு ஏற்கனவே பேர் உள்ள அந்த பகுதிச் செயலாளர், கிருஷ்ணாம்பேட்டை மயான காண்ட்ராக்டரிடம் அடாவடியா 10 லட்ச ரூபாய் மாமூல் வாங்கியிருக்கிறாராம்.''

_______________________

நக்கீரன் செய்தி! அமைச்சர் நடவடிக்கையால் காப்பாற்றப்பட்ட பள்ளி!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வரும் சீதா கிங்ஸ்டன் பள்ளியை மூடப்போவதாக அறிவிப்புகள் வெளிவந்தது. பெற்றோர்கள் கடுமையான போராட்டங்களும் நடத்தினார்கள். இது பற்றி நக்கீரனில் விரிவாக வெளியிட்டிருந்தோம்.

இதைத்தொடர்ந்து முதல்வரின் ஆணைக் கிணங்க இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக தலையிட்டு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில் நிலத்தில் செயல்பட்டுவரும் பள்ளியை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்தார். பள்ளி யின் சாவியை தலைமை ஆசிரியர் நிர்மலாவிடம் ஒப்படைத்தார். நெகிழ்ச்சியோடு சாவியை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இதுபோலவே "சமயபுரம் கோவி லை கவனிக்குமா அறநிலையத்துறை' என்ற நக்கீரன் செய்தியைக் கவனித்து, நேரில் சென்று பார்வையிட்டு, ஆவன செய்திருக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர். முறைகேடுகள் எதுவுமில்லை என இணை ஆணையர் கல்யாணி விளக்கமளித்தார்.

-சேகுவேரா