யிலாடுதுறை மாவட்டத்தில் 122 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை கொட்டியிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒரே இரவில் 44 சென்டிமீட்டர் பொழிந்து சீர்காழி தாலுகாவையே தனித்தீவாக மாற்றியிருக்கிறது மழை.

rain

வங்கக்கடலில் உருவான காற்றழுத் தம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக கடைமடைப் பகுதியாகவும், கடலோரப் பகுதியாகவும் இருந்துவரும் சீர்காழி தாலுகா, திரும்பிய திசையெல் லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்பு பகுதி களிலும்கூட இப்போது நிலைமை தலைகீழாக மாறி பொதுமக்களை அவதிப்பட வைத்திருக்கிறது.

சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள் ளிடம், திருப்பங்கூர், மகேந்திரபள்ளி, ஆச்சாள்புரம், நல்லூர், நல்லவிநாயக புரம், ஆரப்பள்ளம் என நூற்றுக்கும் அதிகமான கிராமங்களில் வடிகால் வசதி யின்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. சீர்காழியை கடந்துசெல்லும் உப்பனாற்றின் கரை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், சூரக்காடு உள்ளிட்ட கிராமங்களை தண்ணீர் முற்றுகையிட்டது. அப்பகுதி மக்கள் உயிர் பயத்தில், உடைமைகளைக் கூட எடுக்காமல் பதறித் துடித்து இரவோடு இரவாக மேடான பகுதி களில் தஞ்சம் அடைந்தனர்.

Advertisment

சீர்காழி சட்டநாதர் கோயில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி அம்மன் கோயில் உள் ளிட்ட பல்வேறு கோயில்களிலும் மழைநீர் குளம்போல நிரம்பியுள்ளது. கனமழைக்கு இடையே வீசிய சூறைக் காற்றால் மீனவர்களின் படகுகள் சேத மடைந்துள்ளன. சாலைகளிலும், மின் கம்பங்களிலும் மரங்கள் சாய்ந்து மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப் பட்டன. இதனால் குடிதண்ணீருக் குக்கூட மக்கள் தள்ளாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

rr

Advertisment

திருமுல்லைவாசல் பழையார் கடற்கரை சாலையில் தொடுவாய் என்கிற கிராமத்தில் பாலம் உள் வாங்கி சாலையை முற்றிலுமாக துண்டித்தது. அப்போது பால் ஏற்றிச்சென்ற மினிவேன் பாலத்தின் நடுவே சிக்கித் தொங்கியது. பிறகு அந்த வாகனத்தை மீட்டனர். இத னால் அந்த சாலையின் போக்கு வரத்து முற்றிலுமாக துண்டிக்கப் பட்டது. அதேபோல கொள்ளிட கரையோரம் உள்ள புதுமண்ணியார் உள்ளிட்ட நான்கு வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களை முழ்கடித்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள், "முக்கியமான சில வடி கால்களை தேர்வு செய்து, மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரைச் செடி களை அப்புறபடுத்த ஆட்சியரிட மும், பொதுப்பணித்துறை அதிகாரி களிடமும் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் முன்னெச்ச ரிக்கையோடு இருக்கிறோம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலையை மட்டுமே செய்துவரும் மாவட்ட ஆட்சியர், இதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அத னால்தான் இவ்வளவு பாதிப்பு. விவசாயத்தில் பாதிப்படைந்த எங்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். உயர் அதிகாரிகளை அனுப்பி விரைந்து இந்த பணிகளை தொடங்க வேண்டும்''’என்றார்கள் காட்டமாய்.

rr

அங்குள்ள நிலைமையை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அதி காரிகளையும் அமைச்சர்களையும் அனுப்பி துரித மீட்புப் பணியைச் செய்திட உத்தரவிட்டிருக்கிறார். கொள்ளிடக்கரையில் உள்ள ஆரப் பள்ளம் சாமிக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் "ஒருவருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே இரவில் கொட்டி தீர்த்திடுச்சு. மூன்று போகம் விளைந்த நிலங்கள், இப்ப கடல்நீர் புகுந்து உப்பாகிவிட்டது. மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால், நாங்களும் சாகுபடியை முன்கூட்டியே துவங்கிட்டோம். 60 நாள் பயிராகிடுச்சு. அண்டா, குண்டாவை அடகுவச்சி தேவையான உரமும் போட்டு முடிச்சிட்டோம். இப்ப உரம் போட்ட பயிர்கள் முழுவதும் தண்ணீரில் முழுகி துர்நாற்றம் அடிக்குது. ஏக்கருக்கு 26 ஆயிரம் ரூபாய்வரை செலவு செஞ்சுட்டோம். இனி செலவு செய்யவும் சக்தி இல்ல. 2017-ல் இருந்து 2022 வரையில் இன்சூரன்ஸ் கட்டியிருக்கோம், ஒரு ரூபாய்கூட கிடைக்கல''’என்கிறார்கள் கவலையுடன்

ஆச்சாள்புரம் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த பெண்களோ, "ஒவ்வொரு முறையும் மழை வரும்போதெல்லாம் கடமடையான எங்கள் பகுதி பாதிப்பது வழக்கமாகிடுச்சி. குடிசை கட்டினால் அதுவும் மழைக்காலத்தில் அடிச்சிக்கிட்டுப் போயிடுது. வாங்கிய குழு கடனை வட்டியோட கட்டி, புதுக் கடன் வாங்கி குடிசை கட்றதிலேயே காலம் முடிஞ்சிடுது. கொள்ளிடம் கரையிலதான் இருந்தோம். நிம்மதியா தூங்கி ஒரு மாதமாகுது''’என்கிறார்கள்.

சூரக்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி உள்ளிட்ட பெண்களோ, "இப்படியொரு மழைய எங்க வயசுக்குப் பார்த்தில்ல. கஜா புயல் உட்பட எத்தனையோ புயல் மழையைப் பார்த்திருக்கோம். இந்த மழை எங்களை மிரட்டிடிச்சி. உப்பனாறு உடைப்பெடுத்த தில் தண்ணீர் சூழ்ந்துருச்சு, புள்ளைங்க பூராபேரும் தூங்குதுங்க. கரண்ட் வேற இல்ல. எந்தத் திசையில் போறதுன்னே புரியாம கட்டுன துணியோட பிள்ளை களை மட்டும் தூக்கிக்கிட்டு, ஆடு மாடுகளை விட்டுட்டு மேடான பகுதிக்கு வந்தோம். பள்ளிக்கூடத்தில் எங்க ளைத் தங்க வச்சாங்க. அந்த பள்ளிக்கூடம் ஏற்கனவே ஒழுகி தண்ணியாக் கிடந்துச்சி. இதுல கொசுத் தொல்லை வேற. குளிரில் தூக்கமே இல்லாமத் தவிக் கிறோம். அதிகாரிகள் கடமைக்கு வந்து பார்க்கி றாங்களே தவிர முழு அக்கறையோட எதுவும் செய்யலை. கிராம நிர்வாக அதிகாரிகளைக் கூட நாங்களாத் தேடிப்போயி பாதிப்புகளைச் சொல்லவேண்டிய நிலை இருக்குது'' என்கிறார்கள் கண்ணீருடன்.

rr

வைத்தீஸ்வரன் கோவில் விவசாயி ஒருவர் கூறுகையில், "மழையைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை. முறையான ஆற்றுப் பாசன, வடிகால் பாசன, வசதி சரியா இல்லை. போதாக் குறைக்கு இந்த டெல்டா மாவட்டத்தில் அதிகாரிகளும், அரசியல்வாதி களும் ஊழல் பெருச்சாளிகளா மாறி, நீர் ஆதா ரங்களை எல்லாம் உடைப்பெடுக்க வச்சிட் டாங்க. தமிழக அரசு சரியில்லை என பொத்தாம் பொதுவாக கூறுவது சரியாக இருக் காது. அதிகாரிகள் சரியில்லை என்பதுதான் சரியான உண்மை. உதாரணமாக மயிலாடு துறை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் சாதாரண ஏழையாக வேலையில் சேர்ந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோடி ரூபாய் மதிப்பில் வீட்டையும், நிலத்தையும், பிளாட்டு களையும் வாங்கிக் குவிச்சி வச்சிருக்கார். ஆக ஒவ்வொரு ஆண்டும் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதத்திற்குக் கூட பணிகள் நடக்கலை. மீதியை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பங்குபோட்டுக் கொள்றாங்க. அதிகாரிகளைத் திருத்தினாலே நீர்நிலைகளை முழுமையாக மீட்டுவிடலாம். இதில் தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி, இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் எந்தெந்த பணிகள் நடந்திருக்குன்னு ஆய்வு செய்தாலே அதிகாரி களின் முழு வண்டவாளமும் தெரிந்துவிடும். அதோடு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெறும் விளம்பரப் பிரியராகவும், வருமானப் பிரியராகவும் இருக்குறாரேயொழிய, செயல் பாடுகளில் எதுவுமில்லை''’என்கிறார் எரிச்சலாய்.

மழைப் பாதிப்பைப் பார்வையிட்டுவரும் அமைச்சர்கள் மெய்யநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர், "வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட் டோம். பெரும்பாலான இடங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது, நிறைய சேதங்கள் ஏற்பட்டுள் ளது. 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, துரிதமான பணிகளைச் செய்து வருகிறோம்''’ என்கிறார்கள். ஆனாலும் மழை நீர் ஏற்படுத்திய, கண்ணீர் மழை இன்னும் அந்தப் பகுதியில் நின்றபாடில்லை.

-க.செல்வகுமார்