உலகமே உற்றுக்கவனித்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று, இரண்டாவது முறை யாக அமெரிக்க அதிபராகிறார். இந்த தேர்தலை அமெரிக்கர் களைப் போலவே இந்தியர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த் ததற்கு காரணம், டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பாகக் களமிறங்கிய கமலா ஹாரிஸ், இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர் என்ப தாகும்! முதலில், அதிபர் ஜோ பைடனே போட்டியில் கள மிறங்கியிருந்தார். ஆனால், வேட்பாளர்களுக்கிடைப்பட்ட விவாத நிகழ்ச்சிகளில், ஜோ பைடன் தனது வயது முதிர்வு காரணமாக சற்றுத் தடுமாறியது அவருக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அதையடுத்து ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்கினார்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கேற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும். இதனை எலக்டோரல் காலேஜ் என்று அழைக்கிறார் கள். நெவாடா மாகாணத்தில் மிகக்குறைவாக மூன்று உறுப் பினர்களும், கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக 55 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இப்படியாக 50 மாகாணங்களி லும் சேர்ந்து மொத்தம் 538 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே 270 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுபவரே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற் றது. மறுநாளில் வாக்கு எண் ணிக்கை தொடங்கியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவதற்காக இந்தியாவிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜையெல்லாம் நடத்தப் பட்டது. ஏற்கெனவே இங்கிலாந் தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தலைமைப் பொறுப்புக்கு வந்ததுபோல், அமெரிக்காவிலும் நடக்குமென்று இந்தியர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸைவிட இரு மடங்கு முன்னிலையில் வலுவாக இருந்தார். ஆனால் போகப்போக, ட்ரம்பின் வாக்குகளை நெருக்கி கமலா ஹாரிஸும் முன்னேறிய தால் பரபரப்பு தொற்றியது. எனினும் இறுதியில் ட்ரம்ப் வெற்றிபெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக வெற்றிபெற்றிருந்த ட்ரம்ப், தற்போதும் இன்னொரு பெண் வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, துப்பாக்கிச்சூட்டிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார் ட்ரம்ப்.
வெற்றிபெற்றபின் ஃப்ளோ ரிடாவின் பாம் பீச்சிலுள்ள மேடையில் உரையாற்றிய ட்ரம்ப், "கடந்த 4 ஆண்டுகளாக நிலவிய பிரிவினையை பின்னுக்குத் தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது, நாம் அனைவரும் ஒன்றிணை வதற்காக நேரம்'' என்று குறிப் பிட்டார். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்குமான போரில், லெபனான், ஈரான் களமிறங்கியுள்ள நிலையில், ட்ரம்பின் இரண்டாவது இன் னிங்ஸ் எப்படியிருக்குமென்ற பரபரப்பு தொற்றியுள்ளது. "இந்தியா-அமெரிக்கா இடை யிலான உறவை வலுப்படுத்த உங்களோடு இணைந்து செயல் பட ஆவலுடன் உள்ளேன்'' என்று மோடி வாழ்த்தியுள்ளார்!