"வலிமை' திரைப்படத் தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் "ஏகே 61' படத்தில் நடித்துவருகிறார் அஜித். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளி வந்தன. இப்படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து மீண்டும் ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில்... அஜித்துக்கு வில்ல னாக ஜான் கொக்கென் நடிக்க வுள்ளதாகக் கூறப்படுகிறது. "கே.ஜி.எஃப்' வரிசை படங்கள் மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "சார்பட்டா பரம் பரை' உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான இவர், தீவிர அஜித் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஏ.கே.61' படத்தில் இவர் இணைந்துள்ளது குறித்து விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முத்திரை பதிப்பாரா சாய் பல்லவி?
"டான்' படத்தைத் தொடர்ந்து "அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் "எஸ்.கே. 20' படத்தில் தற்போது நடித்துவருகிறார். இதனைத்தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை "ரங்கூன்'
பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
அதன்படி இப்படத்தில் சிவகார்த்தி கேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். "பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சாய்பல்லவி, தமிழில் "மாரி 2' "என்.ஜி.கே.' "தியா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழலில், சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தெலுங்கைப் போலத் தமிழிலும் இவர் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் ஸ்டார்களுடன் கீர்த்திசுரேஷ்!
கீர்த்திசுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான "சாணிக்காயிதம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக தெலுங்கின் முன்னணி நடிகர் ராம்சரணுக்கு ஜோடி யாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சிரஞ்சீவி, மகேஷ்பாபு, நானி எனத் தெலுங்கின் டாப் ஸ்டார் களுடன் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்த மாகியுள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"ஆர்.சி 15' என அழைக்கப்படும் இப்படத்தில் ராம் சரணுக்கு இரட்டை வேடம். அதில் கிராமத்து இளைஞனாக அவர் நடிக்கும் ஒரு ரோலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்திசுரேஷ் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளாராம். ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி யும் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து பொலிடிக்கல் திரில்லர் பாணியில் இப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
எதிர்பார்ப்பில் வி.தா.வ.2
கடந்த 2010-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் ‘"விண்ணைத்தாண்டி வருவாயா'’. இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முறையாக கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்றினார். படத்தின் முழு ஆல்பமும் எவர்கிரீன் ஹிட்டானது. படமும் இளைஞர்கள் கொண்டாடும் க்ளாஸிக் படங்களின் வரிசையில் இணைந்தது.
10 ஆண்டுகளைக் கடந்தாலும் தற்போதும் இப்படத்திற்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேபோல இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் எப்போதும் ரசிகர்களிடம் உண்டு. இப்படி நீண்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அட்டகாசமான ஒரு தகவலைக் கொடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் கௌதம் மேனன். அதன்படி, "விண்ணைத்தாண்டி வருவாயா-2' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறதாம். கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசப்போகும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கௌதம் மேனன் கூறியிருக்கிறார்.
-எம்.கே.