பல மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக சத்தமில்லாமல் வருவாய்த் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். அதாவது, தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தாலும், மக்களிடம் அது சேர்வதில்லை. மக்கள் அந்த நிதி ஒதுக்கீடுக்காக வருவாய்த்துறையின் உயரதிகாரியைப் பார்த்து, "மனு என்னாச்சு?'' என்றால், "அவரப் பாத்தீங்களா? பார்த்துவிட்டு வாங்க... வேலை ஆகும்'' என்கின்ற நிலை ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் காணக் கிடைக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தின் ஒன்பது வட்டங்களுள் ஒன்றான சிவகங்கை வட்டத்தில் 67 வருவாய் கிராமங்களும், சிவகங்கை, மதகுப்பட்டி, ஒக்கூர், பெரிய கோட்டை மற்றும் தமறாக்கி என 5 உள்வட்டங் களும் உள்ளன. இங்குள்ள தாலுகா அலுவலகத் தில் வருவாய்த்துறையினரால் பரிந்துரைக்கப் பட்டவர்களைப் பார்த்தால் தான் உடனடியாக 'காரியம்' நடக்கும். அந்தளவிற்கு 'புரோக்கர்கள்' பிடியி-ருக்கிறது சிவகங்கை தாலுகா அலுவலகம்.
"ரேசன் கார்டு, சாதிச்சான்று, வருமானச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட சான்றுகளைப் பெறுவதற்கு அங்குள்ள புரோக்கர்களிடம் கொடுப்பதைக் கொடுத்தால்தான் வேலை நடை பெறுகிறது. இல்லையென்றால் பல்வேறு கார ணங்களைக் கூறி காலத்தைக் கடத்திவருகின்றனர். சாதிச்சான்று, வருமானச் சான்று குறிப்பிட்ட காலத்தில் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர். அதேபோல், ஆதரவற்ற விதவைச்சான்று வாங்கவரும் பெண்களிடம் செல்போன் எண்களைப் பெற்று பா-யல் சில்மிஷத்திலும் சில புரோக்கர்கள் ஈடுபடுகின்றனர்'' என்கின்றார் வருவாய்த்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரி ஒருவர்.
சகாயம் என்பவரோ, "சிவகங்கை தாலுகா ஆபீஸ்ல எல்லா வேலையும் புரோக்கர்கள் மூல மாத்தான் நடக்குது. இப்பகுதியிலுள்ள மக்கள் எல்லாரும் தினக்கூ- பாக்குறவங்க. சான்றிதழுக் காக வேலைய விட்டுட்டு அலைய முடியாததால புரோக்கர்களுக்கு பணத்தை கொடுத்தாக வேண்டியிருக்கு. இந்த மெத்தனப் போக்கினால் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில பெரிய விரிசல் ஏற்படுது. ஒரு சாதாரண சர்ட்டிபி கேட் வாங்குவதற்கு குறைந்தது 500 ரூபாயிலருந்து 1000 ரூபாய் வரைக்கும் பிடுங்குறாங்க. இதனை சரிசெய்யலைன்னா இந்த வெறுப்பு ஆட்சிக்கு எதிராத்தான் மாறும்'' என்கிறார்.
அனைத்து கோப்புகளும் துணை வட்டாட்சியர் மூலம்தான் வட்டாட்சியரிடம் செல்லும். ஆனால் அதையெல்லாம் பரிந்துரை செய்ய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அதற்கும்கீழ் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் கிராம நிர்வாக உதவியாளராக உள்ளவர்கள் தான் அந்தந்த கிராமத்திலுள்ள பிரச்சனைகளை, மக்களின் கோரிக்கைகளை, கிராம நிர்வாக அலு வலர் மூலம் எடுத்துக்கூறுவார்கள். இதுதான் நடைமுறை. பொதுமக்கள் அணுகும் பட்டா மாறுதல் சான்றிதழ்களுக்கு தொகை நிர்ணயிப்ப தும், தொகைகளைப் பெற்றுக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர், வரு வாய் ஆய்வாளர் தொடங்கி துணை வட்டாட்சியர்வரை பகிர்ந்து கொடுப்பதும் இவர் களது தலையாய பணியாக இருக்கிறது. பெரும்பாலும் வசதியானவர்கள், ஆளுங் கட்சியினர் சென்றால் காரி யம் உடனடியாக நடக்கிறது. எதிர்க்கட்சியினர் அலுவலகத்தை அணுகாமல், வருவாய் அலுவலர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு ஜிபே மூலமாகவே சத்தமில் லாமல் தங்கள் காரியத்தை சாதித்துவிடுகிறார்கள்.
சிவகங்கை பள்ளித்தெருவை சேர்ந்த சிவராமகிருஷ்ணனோ, "கொட்டக்குடி கீழ்பாத்தி கிராமத்தில் 7.8 சென்ட் இடம் 2009-ல் என்னுடைய உறவினர் வாங்கியிருந்தாங்க. அந்த இடத்திற்கு 2024-ல பட்டா வாங்கறதுக்காக சென்றிருந்தேன். ஆன்லைன்ல பட்டா அப்ளை பண்ணேன். அப்ளை பண்ண கொஞ்ச நாள் கழிச்சு ட்ராப்ட்மேன் கூப்பிட்டு, உங்க இடத் துக்கு 5.8 சென்ட் அளவுக்குதான் எஃப்.எம்.பி.ல இருக்கு.. வேணும்னா அதுக்கு மட்டும் பட்டா வாங்குங்கன்னு சொன்னாரு. 7.8 சென்ட் இடத்துக்கு பதிலா 5.8 சென்ட் இடத்துக்கு மட்டும் எப்டி சார் வாங்குறதுன்னு கேட்டேன். ஆனா எனக்கு முன்னாடி பல பேரு புரோக்கர் கிட்ட போயி காசக்குடுத்து பட்டா வாங்கிட் டாங்க'' என்றார்.
"தி.மு.க. அரசு, மகளிருக்கு வழங்கிவரும் கலைஞர் உரிமைத்தொகை காரணமாக நம்பிக்கையோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. ஒரு சட்டமன்றத் தொகுதியில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு அது கிடைத்துக்கொண்டிருக்கிறது. தங்களுக்கு கிடைக்காதவர்கள் தாலுகா அலுவலகத்தை அணுகினால், அவர்களது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு பல புரோக்கர்கள் கதையளக் கிறார்கள். இதில், ஒரு தாசில்தார், ஒரு பெண் ணிடம் குடும்பம் நடத்தியது வீடியோவாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கிராம நிர்வாக உதவியாளராகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி நியமனம் செய்யப் பட்டவர்கள், தங்களது கிராம நிர்வாக அலுவல கத்தில் பணிபுரியாமல், வட்டாட்சியர் அலுவல கங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அப்படியா னால் இவர்களுக்குப் பதிலாக அங்கே பணி புரிபவர்கள் யாரென ஆட்சியருக்கு தெரிவ தில்லை. இம்மாவட்டம் முழுக்க விவசாய நிலப் பகுதி, மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டுவரு கிறது. கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி வட் டாட்சியர் வரை, விவசாயமற்ற நிலம் என்பதற் கான சான்றிதழை முறைகேடாக புரோக்கர்கள் மூலமாக வழங்குகிறார்கள்'' என்கிறார் சமூக ஆர்வலரான முத்துக்குமாரசுவாமி. புரோக்கர் களை ஒழித்து வருவாய்த்துறையை இறுக்கி னால் மட்டுமே தி.மு.க.வுக்கு மீண்டும் வெற்றி சாத்தியமாகும்!
-நா.ஆதித்யா
படங்கள்: விவேக்