பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதலில் கைதாகி சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரை ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ் குமார், கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் போலீஸ் வேனில் அழைத்து வந்து, கோவை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்திவிட்டு சேலம் திரும்பும்போது கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி கைதிகளை உற வினர்களுடன் பேசவைத்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்னர்.

விசாரணையின்போது 7 பேரும், "அய்யா... ஒரு மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தோம்...'' என ஏழு பேருமே ஒரே மாதிரி சொல்ல, "என்னய்யா சொல்றீங்க....?'' என விசாரணை அதிகாரிகள் வியப்பாய் கேட்டுள்ளனர்.

ff

"ஆமாங்கய்யா... கோவை நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு உணவு கொடுக்கவேண்டும் என கைதிகளின் உறவினர்கள் எங்களிடம் கேட்டார்கள். "நீண்ட நாட்களாக எங்கள் மகன்கள் மட்டன் பிரியாணி சாப்பிடவில்லை . அவர்கள் ஏக்கமாக இருக்கிறார்கள். உங்களுக்கும் எங்கள் வீட்டில் இருந்து தயாரித்த மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம்' என்று உறவினர்கள் சொன்னார்கள்.

Advertisment

நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொரு ளும் குற்றவாளிகளின் உறவினர்கள் வாங்கக் கூடாது என ரூல் இருப்பதால் நாங்கள் மறுத்து விட்டோம். நீலாம்பூர் பைபாஸ் சாலை வரை எங்களின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்தார் கள். நாங்கள் வண்டியை நிறுத்தியதும் எங்க ளிடம் பிரியாணியை கொடுத்தார்கள். பின்னர் கைதிகளுடன் உறவினர்களைப் பேச வைத்தோம். 7 நிமிட நேரம் மட்டுமே இந்தப் பேச்சு நடந்தது. பிறகு, பிரியாணி பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அனைவருமே வேனில் வைத்து சாப் பிட்டு கொண்டே வந்தோம்'' என்றிருக்கிறார்கள்.

"யோவ்... பொண்ணைப் பெத்தவங்க எல்லாம் இவனுகளுக்கெல்லாம் என்ன தண்டனை கிடைக்கும்னு எதிர்பார்த்து இருக்கறாங்க. அவனுககிட்ட போய் வாங்கித் தின்னுருக்கீங் களேய்யா? வெட்கமேயில்லையாயா உங்களுக்கு? உங்க வீட்டிலே பொம்பளைங்க இல்லையா? போலீஸோட மானத்தையே வாங்கிட்டீங் களேய்யா'' என விசாரணை அதிகாரிகள் கோபமாகியிருக்கிறார்கள்.

போலீசாரின் பிரியாணி சமாச்சாரத்துடன், விசாரணை அதிகாரிகள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் கோடாவிடம் விசாரணை அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

Advertisment