டலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர். வடலூரிலுள்ள எஸ்.டி சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரு கிறார். கடந்த 24ஆம் தேதி மாலை, பள்ளித் திடலில் வட்டு எறியும் பயிற்சியும், அதே திடலின் மறு முனையில் ஈட்டி எறிதல் பயிற்சி யும் நடந்துள்ளது. மற்றொரு மாணவன் ஈட்டி எறிந்தபோது எதிர்பாராத விதமாக கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த கிஷோரை மீட்டு, பாண்டிச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கைவிரிக்க, அங்கி ருந்து விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிஷோர் மாற்றப்பட்டார்.

st

29ஆம் தேதி கிஷோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத் துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகன் மூளைச் சாவு அடைந்ததை கேள்விப்பட்ட அவ ரது தாய் சிவாகாமி, மன உளைச்சலில் விஷம் குடித்து தற் கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில், மருத் துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர், சிகிச்சை பலனளிக்கா மல், 30ஆம் தேதி மதியம் உயிரிழந் தார். மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வடலூர் காவல் நிலைய போலீசார், பள்ளி நிர்வாகி மற் றும் ஆசிரியர்களிடம் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்

உயிரிழந்த மாணவரின் தந்தை திருமுருகன், "பள்ளியி லுள்ள சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் பயிற்சியை, போதிய பாதுகாப்பில்லாமல் ஒரே இடத்தில் வழங்கியதுதான் உயிரிழப்புக்கு காரணம். எங்கள் குடும்பத்தையே மகன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வீணாகியதே'' எனக் கதறியழுதது அனை வரையும் கண்கலங்கவைத்தது.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மாதவன், "தனியார் பள்ளிகள் போதிய இட வசதியில்லாமல், அதை மறைத்து காசு கொடுத்து அனுமதியைப் பெற்றுவிடுகிறார்கள். போதிய வசதியில்லாமல், ஈட்டி எறிதல் போன்ற பயிற்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத் தில் தமிழக அரசு உரிய விசா ரணை நடத்தவேண்டும். உயிரிழந்த கிஷோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்'' என்றார்.

கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், "நான் நேரில் விசாரணை மேற்கொண்டேன். விளையாட்டு மைதானம் ஈட்டி எறியும் போட்டி நடத்துமளவுக்கு இல்லை. உடற்கல்வி ஆசிரியர் இல்லாமல் கணக்கு ஆசிரியையை வைத்து விளையாட்டை நடத்தி யுள்ளனர். இதுகுறித்து துறைரீதி யான விசாரணை நடைபெறும்'' என்றார். பள்ளியின் நிர்வாகி பிரவீனோ, "சம்பவம் நடை பெறும்போது அங்கு இல்லை. இதுபற்றி எனக்கு தெரியாது'' என சுருக்கமாக பேச்சை முடித்துக் கொண்டார்.

தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் குறித்த நேர்மையான ஆய்வு அவசியமென்பதையே இச்சம்ப வம் காட்டுகிறது.

Advertisment

-தாஸ்