stalin100

மிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பேற்று, நூறு நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில்... மக்களிடம் இந்த அரசாங்கம் பெற்ற மதிப்பெண் என்னவென்பதை அறிய நாம் களமிறங்கியபோது, கருத்து மழையைக் கொட்டித் தீர்த்தனர். மகிழ்ச்சி, நன்றி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆதங்கம் என அனைத்தும் வெளிப்பட்டன.

வள்ளிநாயகம் : "சிலிண்டருக்கு 100 ரூபா குறைப்போம்னாங்க. பெட்ரோல், டீசல் வரியை குறைப்போம்னாங்க. டாஸ்மாக்க மூடுவோம்னாங்க. நீட் தேர்வு ரத்துன்னாங்க. தி.மு.க. அறிக்கைல சொன்னது எதுவும் நடக்கல.

stt

Advertisment

சரஸ்வதி: "கண்பார்வை சரியில்ல. 200 ரூவா சம்பளத்துல சமையல் வேலைக்கு போயி பாடுபடுறேம்யா. எனக்கு மூணு புள்ளைங்க. உதவித்தொகை கேட்டு மனு குடுத்தேன். வி.ஏ.ஓ. நாலு தடவ வந்து விசாரிச்சிட்டு போனாரு. உதவித்தொகை கிடைச்சபாடில்ல. ஆட்சி மாறி என்ன பிரயோஜனம்? அதிகாரிங்க மாறலியே?

சேகம்மாள்: "இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு குடுத்தேம்யா. "ஒங்களுக்கு மகன் இருக்கான், மனுவ நிராகரிச்சிட் டோம்'னு காரணம் சொல்லுதாக. ரெண்டு புள்ள இருக்கிற மீரானுக்கு குருக்கள்பட்டில இலவச வீட்டு மனைப்பட்டா குடுத்திருக்காக. ஏன் இந்த பாரபட்சம்?

சந்திரகலா: "தி.மு.க. ஆட்சிக்கு வரணும். ஸ்டாலின் முதல்வராகணும்கிற எதிர்பார்ப்பு ஆண்களைவிட பெண்கள்கிட்டதான் அதிகமா இருந்துச்சு. இந்த 100 நாள் ஆட்சியில பெண்களுக்கு இலவச பஸ்ங்கிறது மட்டும்தான் ஆறுதலா இருக்கு. இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய்ங்கிறது எப்ப கிடைக்குமோ? மத்தபடி கவலை தர்ற மாதிரி எதுவும் பெரிசா நடக்கல.

Advertisment

ssss

மேகலா: "எங்க வீட்ல ரெண்டு பிள்ளைங்க படிக்கிறாங்க. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்தாயிரும்னு சொன்னாங்க. இப்ப என்னடான்னா.. நீட் தேர்வுக்கு படிக்க அரசாங்கம் வசதி செய்து கொடுக்கும்கிறாங்க. ஓட்டு போட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றலைன்னா ஏமாற்றம்தானே?

முருகானந்தம்: "தமிழர்களோட உணர்வு களுக்கு மதிப்பளிச்சு நடக்குது தி.மு.க. ஆட்சி. தமிழ்ல அர்ச்சனை பண்ணுறது... கோயில் நிலங்களை மீட்டெடுத்தது... அந்த நிலத்துல கல்லூரிகள் திறப்போம்னு சொல்லுறதெல்லாம் வேற லெவல். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத தலைமையை பார்க்கிறப்ப மக்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை வருது. எப்படி பார்த்தாலும், இந்த நூறு நாள் ஆட்சிக்கு 100-க்கு 80 மார்க் தாராளமா போடலாம்.

கருப்பாயி "தினமும் 10 கி.மீ. தொலைவுல இருந்து காய்கறி வாங்கிட்டு வந்து விற்கிறேன். வர்ற லாபத்துல பாதி பஸ்ஸுக்கே செலவாயிட்டு இருந்துச்சு. இப்ப அந்த பாரத்த இறக்கி வச்சுட்டாரு புண்ணியவான் ஸ்டாலின். அப்படியே அரிசி கார்டுக்கு ரூ.1000 தந்துட்டாருன்னா, என் பேரப்புள்ள காலம் வரைக்கும் வாழ்க்கைய தைரியமா ஓட்டிருவேன்.

சரோஜா: "தி.மு.க. ஆட்சின்னாலே ரவுடியிசம் தலைவிரிச்சாடும்னு கேள்விப் பட்டிருக்கேன். இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கல. இனிமேயும் அப்படி நடக்காம பார்த்துக்கணும்.

ராஜேந்திரன்: "கொரோனா தொற்று கட்டுக்குள்ள வந்து பல மாவட்டங்கள்ல இப்ப இறப்பு பெரிசா இல்ல. இதுவே ஒரு நல்ல முயற்சிதான். அதேமாதிரி, தென்மாவட்டத்துல ஸ்டெர்லைட் விவகாரத்துல அரசோட அணுகுமுறை நிம்மதியை தந்திருக்கு. மாநிலத்துல விரும்பாத திட்டங்களை புகுத்த நினைக்கிற மத்திய அரசு மீது எதிர்ப்புணர்வு வரணும்னு, ஒன்றிய அரசுங்கிற ஒற்றைச் சொல் மூலம், தமிழக மக்களை ஒன்றிணைத்த முதலமைச்சரோட அதிரடி சூப்பரா இருக்கு.

ss

கலா: "எப்படி வேணும்னாலும் கொள்ளையடிக்கலாம் போல. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை மின்சாரக் கட்டணம்னா.. அது சுமையா இருக்கும். மாதம்தோறும் மின்கட்டணம் செலுத்துற நடைமுறையை ஏற்படுத்துவோம்னு தி.மு.க. வாக்கு கொடுத்துச்சு. ஆட்சிக்கு வந்தபிறகு, மின்சார கணக்கே எடுக்குறதில்ல. திடுமென கணக்கெடுத்து 16 மடங்கு கூடுதலா வசூலிக்கிறாங்க. முன்னாடி, ரெண்டு மாசத்துல குறைவான கட்டணம் கட்டிட்டு வந்த நான், இந்த தடவை ரூ.1600 கட்ட வேண்டியதாச்சு. இதுல புகார் தெரிவிக்கிறதுக்கு நம்பர் வேறு. போதும்ப்பா உங்க பொங்கச் சோறு.

அசார்: "கவர்மெண்ட் ஸ்கூல்ல மாணவர் சேர்க்கைக்கு டி.சி. அவசியமில்லைங்கிற அரசோட உத்தரவுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு. பொருளாதார நெருக்கடில இருந்து மக்களை மீட்டிருக்கு. ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளையும் வாழ வச்சிருக்கு. படிப்படியா அரசுப் பள்ளிகளை மூடும் அபாய சூழல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கு.

தமிழ்ச்செல்வன்: "எந்த துறைக்கு போனாலும் மக்களை அலைக்கழிப்பதும் பணம் கேட்கிறதும் தொடர்ந்துட்டே இருக்கு. அரசு ஊழியர்கள் மூணு வருஷம் முடிஞ்சும்கூட, தொடர்ந்து அவங்கவங்க மாவட் டத்துக்குள்ளேயே பணியிடங் களை மாற்றிக்கிட்டு, அவங்கள வளர்த்துக்கிறதுல ஆர்வம் காட்டுறாங்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்யுறது இல்ல. இந்த மாதிரி அதிகாரிகளை களை எடுத்தால்தான், மக்களுக்கு அரசாங்கம் மேல ஒரு நம்பிக்கை வரும். தி.மு.க. ஆட்சிக்கு வந்துட் டாலே கந்துவட்டி தலைதூக் கும்னு சொல்லுவாங்க. அங்கங்கே கந்துவட்டிக்காரங்க தலைதூக்க ஆரம்பிச்சிட்டாங்க. மொதல்ல இதை ஒடுக்கணும். கொரோனா காலத்துல வாங்கிய கடனை கட்ட முடியாம மக்கள் தவிக்கிறாங்க. அதைச் சாதகமாக்கிட்டு, வங்கிக ளும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களும், கடன் வாங்குனவங்க சொத்துகளை அடிமாட்டு விலைக்கு விற்று கடனை அடைக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணுறாங்க. இந்த விஷயத்துல அரசாங்கம் கவனம் செலுத்தி மக்களைக் காப்பாத்தணும்.

காயத்ரி: "நிலக்கோட்டையை பொறுத்தமட்டி லும் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூ வியாபாரத்த நம்பித்தான் வாழுது. இங்கே தோட்டம், காடுகள்ல விளையக்கூடிய பூக்களை நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு ஆண்கள்தான் கொண்டு வருவாங்க. அப்ப, பஸ் செலவே 50 ரூபா ஆயிரும். இப்ப பெண்களுக்கு பஸ்ல இலவசம்கிறதுனால, பூ மார்க்கெட்டுக்கு பெண்கள் பூ கொண்டு வர்றாங்க. அதுவும், ஒரு நாளைல ரெண்டு மூணு தடவை வந்துட்டு போயிட்டு, கொஞ்சம் கொஞ்சமா பூ கொண்டுவந்து விற்கிறாங்க. இதுனால, மாசத்துக்கு மூவாயிரம்வரை மிச்சமாகுது.

சசிகுமார்: "அரச மரத்தை சுற்றி வந்தால் பிள்ளை பிறக்கும்கிற நம்பிக்கை இருக்கு. அதுக் காக, அரச மரத்தை ஒருமுறை சுற்றிவிட்டு, அடிவயிற்றை தடவிப் பார்த்தால் எப்படி? எந்தவொரு அரசாங்கத்தாலும் அறிவிச்ச திட் டங்கள் எல்லாத்தயும் ஒரே நேரத்துல நிறை வேற்ற முடியாது. மக்களுக்கு நம்பிக்கையும், ஆட்சி மேல எதிர்பார்ப்பும் கூடியிருக்கு. அடுத்து வர்ற பட்ஜெட்டுக்கு பிறகு, தேர்தல் நேரத்துல சொன்னத எல்லாம் ஸ்டாலின் செய் வாருங்கிற நம்பிக்கை இருக்கு. இதுல, காலம் தாழ்த்தி மக்களை அவர் ஏமாற்றிவிடக்கூடாது.

தி.மு.க. ஆட்சி குறித்த நடுநிலையாளர் களின் பார்வை இது...

"தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் தானே கடந்திருக்கின்றன? இன்னும் 57 மாதங் கள் இருக்கின்றனவே? 100 நாள் ஆட்சியில், ஆட்சியாளர்கள் சரியான திசையில் பயணித் தாலும், நல்லாட்சி; சிறந்த முதல்வர்’ என அவ சரப்பட்டு சான்றளித்துவிட முடியாது. வெள்ளை அறிக்கை தமிழக அரசின் நிதி நிலையை வெளிச் சம்போட்டுக் காட்டியிருக்கிறது. மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் எகிறிக் கிடக் கின்றன. தி.மு.க. அரசாங்கம் என்ன சாதிக்கப் போகிறதோ? போகப்போகத்தானே தெரியும்?'

-ராம்கி, சக்தி, அண்ணல், மணிகண்டன், நாகேந்திரன், ராம்குமார்