லுவலகத்தின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அந்தக் காட்சி, செயல் அலுவலரின் சில்மிஷத்தை அம்பலப்படுத்தி, நடவடிக்கைக்கு தள்ளியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக கோபிநாத் பணிபுரிந்து வருகிறார். பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த சுமதிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்தநாள் என்பதால் அதிகாரி என்ற முறையில் கோபிநாத்துக்கு ஸ்வீட் கொடுத்திருக்கிறார். அப்பொழுது கோபிநாத் திடீரென சுமதியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். அந்த வீடியோ காட்சி தற்பொழுது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவியது.

gg

இந்த விஷயம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி காதுக்கு எட்டவே உடனே மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜனை விசாரிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பேரூராட்சியின் செயல் அலுவல ரான கோபிநாத்தை மாவட்ட கலெக்டர் விஜய லட்சுமி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார்

Advertisment

""கலெக்டரின் உத்தரவின் பேரில் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகம் சென்று சமூகவலைத் தளத்தில் பரவி வரும் வீடியோ காட்சி குறித்து ஊழியர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தியதன் மூலம், அந்த தற்காலிக பெண் பணியாளரிடம் செயல் அலுவலர் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டதன் பேரில்தான் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதோடு அந்த பெண் ஊழிரையும் வேலையை விட்டு நீக்கி விட்டோம். அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா மூலம் பதிவான அந்த வீடியோ எப்படி வெளியே வந்தது என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம்'' என்றார் பேரூராட்சிகளின் இணை இயக்குனரான குருராஜன்.

இது சம்பந்தமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செயல் அலுவலரான கோபிநாத் திடம் கேட்டபோது, ""துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருவதால் கருத்து சொல்ல விரும்பவில்லை'' என்று கூறினார்.

இது சம்பந்தமாக நாம் மேலும் விசாரணை யில் இறங்கிய போது, தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் ஜோதிமணி, வேடசந்தூர் மக்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கி இருக்கிறார் அதில் செயல் அலுவலரான கோபிநாத் கலந்துகொண் டதை மனதில் வைத்துதான், ஆளுங்கட்சியினர் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் என்ற பேச்சும் பரவலாக உள்ளது. மாநில அளவிலான செயல் அலுவலர் சங்கத்தில் கோபிநாத் செயலாளராக இருப்பதும் அவர் மீதான நடவடிக்கையை வேகப்படுத்தியிருக்கிறது.

Advertisment

இந்த பிரச்சனை வருவதற்கு முதல் நாள்தான் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பதவி உயர்வு கோபிநாத்துக்கு வந்தது. அதன்மூலம் வேறு ஊருக்கு சிறப்பு நிலை அதிகாரியாக போக இருந்த நிலையில், சில்மிஷ வீடியோ வெளியிடப் பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-சக்தி