ள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமாக மரணமடைந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக, ஆளும் தி.மு.க. அரசின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கடந்த 24ஆம் தேதி காவல்துறை தலைமையகமான டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தியது.

srimathi

Advertisment

"டி.ஜி.பி. அலுவலக முற்றுகை' என போராட்ட அறிவிப்பு வந்தவுடன் காவல்துறை அதை சீரியஸாக எடுத்துக்கொண்டது. யாரெல் லாம் போராட்டத்திற்கு வருவார்கள், அவர்களை எங்கே தடுத்து நிறுத்தலாம் என தமிழகம் முழுவதும் போலீசார் திட்டமிட்டு வேலை செய்தனர். ஸ்ரீமதி வீடமைந்துள்ள கனியாமூர் ஸ்ரீமதி விவகாரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்த மாதர் சங்கத் தோழர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டார்கள்.

ஆனால், ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் கொரில்லா தாக்குதல் முறையில் டி.ஜி.பி. ஆபீஸ் முன்பு திரண்டார்கள். அவர்களைக் கஷ்டப்பட்டு போலீசார் அகற்றிக் கொண்டிருந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அந்த வழியே தலைமைச் செய லகத்துக்கு செல்ல, அவரது கண் முன்பே மாதர் சங்கத் தோழர்கள் காவல் துறையால் பந்தாடப்பட்ட நிகழ்வு நடந்தது. அதைப் பார்த்துக்கொண்டே முதல்வர் கோட்டையை நோக்கிச் சென்றார்.

முதல்வர் போனபிறகு டி.ஜி.பி. அலுவலகத் துக்கு அருகே ஸ்ரீமதியின் அம்மா செல்வி, தோழர் உ.வாசுகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, தோழர் வாலன்டீனா, தோழர் ராதிகா போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதர் சங்கத் தோழர்கள் போலீசார் எதிர்பாராத வண்ணம் திரண்டு போலீசாருக்கு கண்ணாமூச்சி காட்டினார்கள்.

Advertisment

"நீதி வழங்கு... நீதி வழங்கு! ஸ்ரீ மதிக்கு நீதி வழங்கு!' "ஸ்ரீமதி வழக்கில் தொடர்புடைய குற்ற வாளிகளை... போக்சோ சட்டத்தில் கைது செய்!' "தமிழக அரசே காவல் துறையே! நியாயமான விசாரணை நடத்து!'’என கோஷமிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தாய்மார்களை அடித்து, உதைத்து காவல்துறை இழுத்துச் சென்று மண்டபத்தில் அடைத்தது. ஸ்ரீமதி மரணத்தில் தமிழக போலீசார் நடத்தும் விசாரணை நியாயமாக நடைபெற வில்லை. ஸ்ரீமதியின் பெற்றோர் எழுப்பும் நியாய மான சந்தேகங்களுக்கு பதில் இல்லை என போராட் டத்துக்கு நடுவே பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் உ..வாசுகி கூறினார்.

srimathi

இதுபற்றி நம்மிடம் பேசிய மாதர்சங்க தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் பாலபாரதி "சமீபத்தில் மாதர் சங்க மாநாடு நடந்தது. ஒவ்வொரு மாநில மாநாட்டிலும் மன உறுதிமிக்க பெண்கள் தங்களுக்கு இந்த சமூகம் இழைக்கும் அநீதியை எதிர்த்து எப்படிப் போராடுவார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்களை நாங்கள் பேச வைத்தோம். ஒரு மாநில மாநாட்டில், சிதம்பரத்தில் காவல்துறையால் பாலியல் வன்முறைக்குள்ளான சிதம்பரம் பத்மினி தனது அனுபவங்களை விவரித்துப் பேசி ஒட்டுமொத்த மாநாட்டையே கலங்கவைத்தார். அதுபோல இந்தமுறை ஸ்ரீமதி அம்மா செல்வி தனது போராட்ட அனுபவங்களையும், தனது மகள் ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் விரிவாகப் பேசினார். அப்பொழுது மாதர்சங்கம் ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டது. காவல் துறையின் விசாரணை பாரபட்சமாக நடைபெறு கிறது. ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார் என சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போக்கு அமைந்துள் ளது என்பதால், காவல்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று மாதர் சங்கம் முடி வெடுத்தது. உடனே காவல்துறை மாதர் சங்கத்தை தொடர்பு கொண்டு, டி.ஜி.பி. ஆபீஸ் அலுவலக முற்றுகை என்பதை மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டது. அதற்கு, முடியாது என மாதர்சங்கம் பதில் அளித்தது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாதர் சங்கத்தை அழைத்துப் பேசினார். மாதர் சங்கத் தோழர்கள் ராதிகா, வாலண்டீனா, பிரமிளா உடன் நானும் டி.ஜி.பி.யை சந்தித்துப் பேசினோம். நாங்கள் ஸ்ரீமதி கொலையில் பல சந்தேகங்களை டி.ஜி.பி.யிடம் எடுத்து வைத்தோம். ஸ்ரீமதி நள்ளிரவில் இறந்திருக்கிறார். ஆனால், அதிகாலை ஆறரை மணிக்குத்தான் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலைக் கடிதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஸ்ரீமதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசாரோ, போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்களோ எந்த அறிக்கையையும் கொடுக்கவில்லை. பதினேழு வயது சிறுமியின் மர்ம மரணம் போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என மாதர் சங்கம் எழுப்பிய புகார்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, “"நீங்கள் வந்ததினால் உங்களுக்குச் சாதகமாக நான் பேச முடியாது'’என்ற பதிலை மட்டும் தந்தார். அவரிடம் பேசிய பிறகு போராட்டம் வேகமாக நடைபெற்றது. "அடுத்த கட்டமாக என்ன செய்வது என மாதர்சங்கம் ஆலோசித்து வருகிறது''” என்றார் பாலபாரதி.

முதல்வரின் பார்வையில் பட்ட மாதர்சங்க போராட்டம், ஸ்ரீமதி விசயத்தில் போலீசாரின் அணுகுமுறையை மாற்றுமா? என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. அடுத்த கட்டமாக நீதி மன்றத்தை நாடி ஸ்ரீமதி விசயத்தில் நீதி வேண்டி களம்காண இந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

சுந்தர் சிவலிங்கம்