சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, 20-க்கும் மேலான அதிருப்தி எம்.எல்.ஏ.க் களுடன் அசாமுக்குச் சென்றுள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியுடன் சிவசேனா ஆட்சியமைத்ததில் கடுப்பிலிருந்த பா.ஜ.க. இந்தத் திடீர் திருப் பத்தால் உற்சாக மாகியுள்ளது.

பா.ஜ.க. தங்களை கூட்ட ணிக்குப் பயன்படுத் திக்கொண்டு மகாராஷ் டிராவில் கட்சியை வளர்த் துக்கொள்வதோடு, அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கையும் அளிக்காததால் வெகுண்டெழுந்த சிவசேனா, 2019 தேர்தல் முடிவுக்குப்பின் புதியதொரு முடிவை எடுத்தது. பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்காமல், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸின் துணையுடன் ஆட்சியமைத்தது.

mm

Advertisment

ஆட்சிக்கு வந்தபின் சிவ சேனா தன் இந்துத்துவப் போக்கில் ஒரு மாற்றம் செய்துகொண்டு, தொடர்ந்து பா.ஜ.க. அரசை விமர் சித்து வந்தது. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் சிவசேனா நிறுத்திய சஞ்சய் பவார் தோற்ற தோடு, சட்டமேலவைத் தேர்தலிலும் காங்கிரஸ் நிறுத்திய சந்திரகாந்த் ஹன்டோர் தோல்வி யடைந்து பா.ஜ.க. ஆதரவுபெற்ற வேட்பாளர் ஜெயித்தார். இது சிவசேனாவை திகைப்படைய வைத்தது. அந்த அதிர்ச்சி மாறுவதற்குமுன் சிவசேனாவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே கிட்டத்தட்ட 20-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் மகாராஷ்டிராவை விட்டு இடம்பெயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்சிக்கு வந்தபிறகு மகாராஷ்டிர அரசு எதிர்கொள்ளும் மிகப்பெரிய இக்கட்டு இது.

என்ன பிரச்சினை?

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏக்நாத் ஷிண்டே. நான்குமுறை சிவசேனா சார்பில் சட்டமன்ற உறுப்பினரானவர். இதுவரை கட்சிக்கு தீவிர விசுவாசியாகச் செயல்பட்டு வந்தவர். சிவசேனா நிறுவனரான பால்தாக்கரேவுக்கு நெருக்கமானவர். ஷிண்டேவின் ஆதரவாளர்கள், “"ஷிண்டே சமீபகாலமாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டு வந்தார். கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போதும், சமீபத்திய கட்சிக் கொள்கை கள் உருவாக்கத்தின்போதும் ஷிண்டே கணக்கில் கொள்ளப்படவில்லை. நடந்துமுடிந்த மும்பை, தானே நகராட்சித் தேர்தலில் சிவசேனா போட்டி யிடவேண்டுமென விரும்பினார். கட்சியோ அவரது யோசனையைப் புறக்கணித்தது. இத்தகைய நடவடிக்கைகளால் அவர் புண்பட்டுப் போயிருந் தார்'” என்கிறார்கள்.

மாறாக, கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர் களோ, "ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவிமேல் ஒரு கண் இருந்தது. சந்தர்ப்பம் பார்த்து கட்சி விரோதச் செயலில் இறங்கியிருக்கிறார்'' என்கிறார் கள். கட்சி ஆடிப் போயிருக்கும் நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், “"இது அவர்களின் உட்கட்சிப் பிரச்சினை. சிவசேனாவுக்கு நாங்கள் துணை நிற்போம்''” என்றிருக்கிறார்.

விவகாரம் கொதிநிலையை எட்டுவதுவரை, வாயே திறக்காமல் இருந்த ஏக்நாத் ஷிண்டே, அவரது ட்விட்டர் பக்கத்தில், “"நாங்கள் பால் தாக்கரேயின் தீவிர ஆதரவாளர்கள். அவர்தான் எங்களுக்கு இந்துத்வாவைக் கற்பித்தார். அரசியல் ஆதாயங்களுக்காக அவர் கற்பித்ததற்கு எதிராக நடந்துகொள்ள மாட்டோம்''’என பதிவிட்டிருக்கி றார். ஆனால் இந்தப் பதிவுக்கு எப்படி வேண்டு மானாலும் அர்த்தம் சொல்லலாம். சிவசேனாவுக்கு துரோகம் செய்யமாட்டோம் என்றும், அசல் இந்துத்வா கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்கப் போகிறோம் என்றும் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம்.

முதலில் ஷிண்டே குஜராத்துக்குச் சென்ற தாகச் சொல்லப்பட்ட நிலையில், ஷிண்டேவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் அசாம் மாநிலம் கௌகாத்தியிலுள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்ட லுக்குச் சென்றது உறுதியாகியுள்ளது. அவர்கள் வருவதற்கு சற்றுமுன்னர் அந்த ஹோட்டலுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா வந்துசென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களை வரவேற்று அழைத்துச்சென்ற, அசாம் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான சுஷாந்தா போர்கோ ஹெய்ன், “"எத்தனை எம்.எல்.ஏ.க்கள் என்று நான் எண்ணவில்லை''’என ஊடகங்களின் கேள்வி களுக்குப் பதிலளித்திருக்கிறார்.

mm

Advertisment

இதற்கிடையில் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான சஞ்சய் ரவுத், “"சில சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஷ்டிராவில் இல்லையென் பதும் சிலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை யென்பதும் உண்மைதான். தவறான புரிதலே இதற்குக் காரணம். அவர்களைத் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தி வருகிறோம்'' என்கிறார்.

ஷிண்டே கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டிருக்கிறார். மற்றவர்களை சமாதானப்படுத்தி கட்சிக்கு திரும்ப அழைக்க வியூகங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. அது எவ்வளவுதூரம் செல்லுபடியாகும்?

ஷிண்டே தன் தரப்பில் நாற்பது எம்.எல்.ஏ.க் கள் வரை இருப்பதாகச் சொல்கிறார். அது உண்மை என்ற பட்சத்தில் ஷிண்டேயின் ஆதரவுடன் பா.ஜ.க. எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடும். கட்சித் தாவல் தடைச்சட்டத்தில் சிக்காமல் எம்.எல்.ஏ.க்கள் அணி மாற 37 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டேவுக்குத் தேவை.

"நாங்கள் வேறு கட்சிக்குப் போவதென்கிற பேச்சே இல்லை. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் அணுகுமுறை சரியில்லை''’என ஷிண்டே புகார் வாசித்ததாகக் கூறப்படுகிறது. நிலவரம் இக்கட்டான நிலையிலிருக்க மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ்தாக்கரே இருவரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், சிவசேனா ஆட்சி முடிவுக்கு வந்து பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறது. அல்லது சிவசேனா ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கப்போகிறது. இதுதான் இப்போதைய மகாராஷ்டிர நிலவரம்.