மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பா.ஜ.க.வின் அடிப்படை சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களைக் கைப்பற்றுவதிலும், தங்கள் கொள்கையை அரசின் செயல்திட்டங்களில் புகுத்துவதி லும் தீவிரம் காட்டிவருகிறார்கள். பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்துத்வா கருத்துக்களை இடம்பெறச் செய்வது, மகாத்மா காந்திக்கு மாற்றாக சாவர்க்கரை முன்னிலைப்படுத்துவது, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மத வேற்றுமை உணர்வுகளைத் தூண்டும்விதமாக கருத்துக்களைத் தொடர்ச்சியாகப் பேசிவருவது எனப் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் ஆட்சிப் பணிகளில் (ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். பதவி களில்) ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ள கருத்து நாடு முழுவதும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5-ம் தேதி, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, “"இந்தியாவின் அரசுத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் பா.ஜ.க.வுக்கு இல்லை. நாட்டை மனுதர்ம காலத் துக்கு எடுத்துச் செல்வதே அவர் களின் நோக்கம். மேலும், 2016-ம் ஆண்டில் மட்டும் 626 ஆர்.எஸ். எஸ். தொண்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளாக நாடு முழுவதும் பணியாற்றிவரு கிறார்கள். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?'' என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல் பாடு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி சொல்லும் கருத்து முற்றிலும் சரியே. நாட்டின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிபெற்ற நபர்களைப் புகுத்துவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தை கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை'' என் கிறார். "உத்தரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப் பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டிய லில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவான தாகும். இதர ரயில்வேயில் தேர்வு செய் யப்பட்டவர்களை தெற்கு ரயில்வே யில் நியமிப்பது சட்டவிரோதமாகும்.
இதுபோன்ற முறைகேடான நியமனம், இங்கிருக்கும் தமிழர்களின் வேலை வாய்ப்பைப் பாதிப்பதோடு, ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்ப தாக இருக்கிறது'' என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் மூலம் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அதன்பிறகு, அந்த நியமனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகப் பதில் வந்திருக்கிறது. அதேபோல, அஞ்சல் துறையில் பணம் நிரப்பும் படிவங் களில் தமிழை எடுத்துவிட்டு இந்தி யைப் புகுத்தியதற்கு எதிராகவும் இவர் கண்டனம் தெரிவித்ததையடுத்து அதையும் நிறுத்திவைத்துள்ளனர்.''
இவ்விவகாரம் தொடர்பாக, திராவிட மற்றும் தமிழ் அமைப்பினர் களின் கருத்துக்களைக் கேட்டோம். தமிழ் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த கதிர்நில வன், "தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் உள்ளனர். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்கள் வட நாட்டவர்களின் கைகளுக்குப் போய்விட் டது. அரசியலில் யாரை கொண்டுவரவேண் டும் என்ற முடிவெடுக்கும் அளவுக்கு சென்று விட்டார்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வானதிக்கு இந்தியில் ஓட்டு கேட்கும் நிலைக் குப் போய்விட்டது. வடஇந்தியர்களின் படையெடுப்பின் பின்னணியில் இந்தியைப் புகுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே 1956 மொழிவழி மாநில பிரிப்பிற்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த வடநாட்டவர்கள் வெளியேற வேண்டும் என்றும், தமிழ்நாட்டு பொதுத்துறை வேலைகளைத் தமிழருக்கே கொடுக்கவேண்டும் என்றும், வருகிற 22-ம் தேதி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பாக தமிழகத் தலைமைச் செயலகத்தின் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்'' என்றார்.
தமிழ் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பேரறிவாளன் நம்மிடம், "மோடி இப்ப டம்மி சார். ஆட்சி நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். எடுத்துக்கொண்டுள்ளது. குமாரசாமி சொல்வதுபோல் தென்னிந்தியாவைக் குறிவைத்துவிட்டார்கள். உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிப்பதில் தமிழகத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்கள். இந்தி மொழி திணிப்பு என்று ஆரம்பித்து, தமிழகத்தின் அடை யாளங்களை எடுத்துவிட்டு தேசிய அடையாளங்களை வைப்பது, அதற்கு எதிர்ப்பு வந்தால் கடவுள்களை முன்னிறுத்துவது என்று தொடங்கி, தமிழகத்தின் அனைத்து அடையாளங்களையும் அழிக்கத் தொடங்கிருக்கிறார்கள். அப்படித்தான் மதுரை ரயில்வே நிலைய முகப்பில் 2017-வரை இருந்த, பாண்டிய மன்னனின் சின்னமான மூன்று மீன்கள் உள்ள வெங்கலச் சிலையை அகற்றிவிட்டு, பல்வேறு தமிழ் தேசிய மற்றும் திராவிட இயக்கங்களின் எதிர்ப்புகளுக்கிடையிலும், அங்கே பீடம் அமைத்து, தேசியக் கொடியை நட்டுவைத்தார்கள். அடுத்து, ரயில் நிலையத்தின் முகப்பை கோயில் வாயிலாக மாற்றினார்கள். அடுத்து, மதுரையிலிருந்து புறப்படும் பாண்டியன், வைகை போன்ற தமிழ் பெயர்கள் அடங்கிய விரைவு ரயில் வண்டிகளின் பெயர்களை எடுத்துவிட்டார்கள். அனைத்து வண்டிகளுக்கும் வடநாட்டுப் பெயர்களே உள்ளன.
பெரியார் பேருந்து நிலைய பெயரை, மீனாட்சி பேருந்து நிலையம் என்று மாற்றுவதற்கு இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வினரும் குரல் கொடுத்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்னர், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்து, பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயரை பொறிக்கச் செய்ததும் எதிர்ப்பாளர்கள் அடங்கிப்போனார்கள். அடுத்து, ஒன்றிய அரசால் கட்டப்பட்டுவரும் மிகநீண்ட 7 கிலோமீட்டர் பாலத்தில் 225 தூண்களிலும், வட நாட்டுத் தேசியத் தலைவர்கள் மற்றும் சாமி சிலைகளை வைக்கப்போகிறோம் என்று ஒவ்வொரு தூண்களிலும் சாமி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். முதலில் மீனாட்சி சிலையை நிறு வியவர்கள், அடுத்து வட நாட்டு ராமர் சிலையும் அடக்கம் என்கிறார்கள். அனைத்தையும் காவிமயமாக்கும் முயற்சி எங்கே முடியுமென்று தெரியவில்லை'' என்றார்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நேரு நம்மிடம், "நான் பி.எஸ்.என்.எல்.லில் இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரியாக உள்ளேன். இங்கு வேலை செய்யும் அனைவரும், இந்தியில் முதல் படிநிலை படித்தாலே சம்பள உயர்வு உண்டு. தனியாக இந்தி கற்க இரண்டு மணி நேரம் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதேசமயத்தில், நான் தமிழில் முனைவர் பட்டம் வாங்கி அதைச் சம்பள உயர்வுக்கும், பதவி உயர்வுக்கும் அனுப்பினால் அது திருப்பி அனுப்பப்பட்டது. இதே நிலை, அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சல், இரயில்வே துறைகளிலும் உண்டு. நம்மிடையே தேவையற்ற முரண்பாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இந்தி ஆதிக்கத்துக்கும், திணிப்புக்கும் எதிராக ஓரணியில் நிற்கவேண் டிய காலமிது. மதுரை மாநகராட்சித் தேர்தலில் வடநாட்டு சேட்டுகள் கைகளில் 10 வார்டுகள் வரை சென்றிருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாடு தமிழருக்கே என்று இறங்கினால்தான் இதற்கு முடிவுகட்ட முடியும்'' என்றார்.
ஆட்சிப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் குறித்த கேள்வி எழுவதை, யூ.பி.எஸ்.சி. தேர்வு முறை களில் நேரடி அனுபவமுள்ள கல்வியாளர் பாலா முன் வைத்தோம். அவர் கூறுகையில், "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள். இத்துறையில் பணியாற்றுபவர் கள், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்ந்தவர்களாக, அந்த இயக்கத்தின் சித்தாந்தத்தைச் செயல் படுத்த முனைபவர்களாக இருந்தால் அது மதச்சார்பின்மைக்கும், யூ.பி.எஸ்.சி. பணிக்கான கோட்பாட்டுக்கும் எதிராகவே அமையும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, "சம்ஹல்ப்' (Samkalp) என்ற அகாடமியை ஐ.ஏ.எஸ். கோச்சிங்குக்காக கடந்த 34 ஆண்டுகளாக டெல்லியில் நடத்திக்கொண்டிருக்கிறது. டெல்லி தவிர இன்னும் சில நகரங்களிலும் அந்த அகாடமி செயல்பட்டுவருகிறது. அந்த அகாடமியில் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த சீனியர் ரிட்டையர்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை வைத்து அவர்கள் பயிற்சியளிக் கிறார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமுள்ள அதிகாரிகளை முக்கிய பதவிகளில் திணிக்கும் கோட்பாட்டோடு செயல்படுகிறார்கள். அங்கே பயிலும் மாண வர்களிடத்தில் உரையாற்றக் கூடியவர்கள் யாரென்று பார்த்தால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளாக இருக் கிறார்கள்.
கடந்த, 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததையடுத்த மூன்றாண்டுகளை மட்டுமே கவனத்தில் கொண்டால், அப்போது நடந்த யு.பி.எஸ்.சி தேர்வுகளில் மொத்தம் 3413 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்றவர்களில் 2007 பேர், கிட்டத்தட்ட 60% பேர் "சம்ஹல்ப்' அகாடமியிலிருந்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இப்படித் தேர்ச்சி பெறக்கூடியவர் கள், எந்த மாநிலத்தின் பொறுப்பு களுக்குச் சென்றாலும், அந்த மாநில ஆட்சியின் கொள்கையை நிர்ணயிக் கும் இடத்தில் இருந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணிக்கும் முயற்சியில்தான் இருப்பார்கள். அதற்கான ஆலோ சனையைத்தான் வழங்குவார்கள்.
ஆட்சிப்பணி அதிகாரத்திற்கு வருபவர்களில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களை வடி கட்டுவதற்கான செயல்திட்டத் தையும் யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் புகுத்தப் பார்க்கிறார்கள். உதாரண மாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள், சராசரியாக 28 வயதில் தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று பணிக்கு வருகிறார்கள். எனவே அவர்களை வடிகட்டும் நோக்கில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமுள்ள ஆலோசனைக் கமிட்டிகள், யு.பி.எஸ்.சி. தேர்வுத் தகுதிக்கான வயது வரம்பை 27-க்குள் நிர்ணயிக்க வேண்டு மென்று கூறுகிறார்கள். இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் களை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள். பிரதமர் மோடியின் அமைச்ச ரவையில் இருக்கக்கூடிய 91 துறைகளில் செகரட்டரி களாக ஒரு ஓ.பி.சி. பிரிவினர்கூட கிடையாது. 75 துறைகளில் அடிஷனல் செகரட்டரிகளாக ஓ.பி.சி. பிரிவினர் கிடையாது. 265 ஜாய்ன்ட் செகரட்டரிகளில் 13 பேர் தான் ஓ.பி.சி. பிரிவினர் உள்ளனர்.
மருத்துவம், அணு சக்தித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள ஜாய்ன்ட் செகரட்டரி, டைரக்டர் போன்ற பதவிகளுக்கு வல்லுநர்கள் தேவைப்பட்டால், லேட் டரல் என்ட்ரி என்ற பெயரில் தனியார் மூலமாக அவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இப்படி மாற்று வழியில் நிர்வாகத்துக்குள் அதிகாரிகளைக் கொண்டு வருவதன் மூலம் அவர்களின் சித்தாந்தமும் நுழைக்கப்படு கிறது. யூ.பி.எஸ்.சி. தேர்வில், மெய்ன்ஸ் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும் இன்டர்வியூவில் மதிப்பெண்களைக் குறைப்பதன்மூலம், தங்கள் சிந்தாந் தத்துக்கு ஒத்துவராதவர்களை வடிகட்டும் போக்கும் இருக்கிறது" என்று தெரிவித்தார். நம்முடைய சந்ததிகளின் வேலைவாய்ப்பையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் காக்க விரும்பினால், ஆட்சிப்பணி அதிகாரங் களைப் பிடிப்பதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியம் என்பது தெரியவருகிறது.