(90) எனக்கும் அந்த ஆசை இருக்கு...!
சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ரெண்டு மூணு பேர் கள் சிறந்து விளங்குறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. சும்மாவெல்லாம் வந்து நகைச்சுவையில கோலோச்சிட முடியாது. தனித்திறமையும், ஸ்கிரிப்ட்டில் செலுத்துற கவனமும்தான் அவங்க சிறப்பா ஷைன் பண்ண காரணம்.
இப்படிப்பட்டவங்கள்ல ஒருத்தர் சந்தானம்.
சினிமா உலகத்துல ஒரு கட்டத்துல... ‘சந்தானம் இல் லாம படமே எடுக்க முடி யாது’ என்கிற சூழ்நிலையே வந்தது.
சந்தானத்துகிட்ட எனக்குப் பிடிச்சது என் னன்னா... ’சென்ஸிபிள் கியூமர்னு சொல்லுவாங்க இல்லியா... அந்த திறமை இருந்தது. சினிமாவுக்கு வந்த புதுசுல கவுண்டமணியோட சாயல் சந்தானம் நடிப்பில இருந்தது வாஸ்தவம்தான். ஆனா... நாளடைவில் அதை மாத்தி, தனக்குனு ஒரு தனி பாணியோட... தனி நபர் காமெடியா சும்மா பிச்சு உதறினார். ‘"ஒரு கல் ஒரு கண் ணாடி' படத்துல "கலகலப்பு' டத்துலயெல்லாம் பார்த் தீங்கன்னா... சந்தானம் காமெடி அருமையா இருக்கும்.
சந்தானம் கூட நான் நிறைய படங்கள் சேர்ந்து நடிச்சிருக்கேன்.
அண்ணே... இந்த டயலாக்க நீங்க பேசுங்க. அப்பத்தான் நல்லா இருக்கும்”என விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை யும், ஸீன்ல கூட இருக்கவக் களும் கவனம் பெறணும்னு உதவுற அந்த ஹெல்பிங் டெண்டன்ஸி அவர் கிட்ட உண்டு.
உணமையி லேயே அது ரொம்ப பெரிய விஷயம்.
சந்தானம் எனக்கு வைக்கிற நிக் நேம்... பட்டப் பெயர்கள்லாம் ரொம்ப ரீச் ஆகும். காலேஜ் பசங்க தங்களுக்குள்ள ஒருத்தர ஒருத்தர் வாரிக்கிறதுக்கு சந்தானம் எனக்கு வச்ச நிக் நேம அதிகம் பயன் படுத்துவாங்க.
காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி’
பீடிலருந்து தான் புகை வரும். புகைலருந்து பீடி வருதே’
கேபிள் வயர் அறுந்த மாதிரி’
-இப்படியெல்லாம் ரொம்ப பெக்குலியரா என்னை காமெடி காட்சிகள்ல கலாய்ப்பார் சந்தானம்.
ரொம்ப நாளைக்கப்புறம், இப்ப சந்தானத்தொட நடிச்சிருக்கேன். அதே எனர்ஜிடிக்கோட, குறையாத வேகத்தோட இருக்கார் சந்தானம். எனக்கு ரொம்ப பிடிச்ச தயாரிப்பு நிறுவன மான கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறாங்க இந்தப் படத்தை. இடையிலே சீரியஸாவே ஆடி யன்ஸ் பார்த்த சந்தானமா இல்லாம, பழைய சந்தானத் தை ரசிக்கும் வாய்ப்பா இந்தப் படம் நிச்சயம் இருக்கும். ‘கம் பேக் ஆஃப் சந்தானம்’ அப்படி சொல்ற மாதிரி இருக் கும். ஏன்னா கதை அப்படி.
என்னைப் பார்க்கும் போது என் அபிமானிகள் கேட்கிற கேள்வி.... என்னன்னா...
என்ன சார்... நீங்க பெரிய டைரக் டர்... நடிப்பு, டைரக்ஷன்ரெண்டுலயுமே சீனியர். ஆனா... சந்தானம் உங்களை ரொம்ப வார்ற மாதிரி படங்கள்ல்ல இருக்கு. இதை எப்படி சகிச்சுக்கிறீங்க? எங்களுக்கு கஷ்டமா இருக்கு சார்”
இப்படிக் கேட்பாங்க.
அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன்....
சந்தானம் என்னைத் திட்டல. அந்தப் படத்துக் கதைல வர்ற கேரக்டர்கள்ல நானும் ஒருத்தன். அதுல ஒரு கேரக்டரா வர்ற சந்தானம் என்னை கலாய்க்கிறார். அதாவது... ஒரு கேரக்டரை இன்னொரு கேரக்டர் கலாய்க்குறாதாத் தான் பார்க்கணும். ‘மனோ பாலாவ சந்தானம் கலாய்க்கிறதா’பார்க்கக் கூடாது.
வடிவேலு, விவேக் கூட நடிக்கைல உண்டான, உண்டாகுற மனநிறைவு சந்தானம் கூடவும் நடிக்கும்போது இருக்கு. எங்க காமெடி காம்பினேஷன் நீண்டநாட்களுக்கு ரசிக்கும்படியா இருக்கா இல்லையா? லாங் டூரேசன்ல ஜெயிச்சுக்கிட்டிருக்க காமெடியா இருக்கே... அதை ரசிங்க. ‘கலகலப்பு’ பட காமெடியவெல்லாம் இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.
சந்தானம் கூட நடிக்கிறது எனக்கு மீண்டும் மீண்டும் சந்தோஷத்தையே தரும்.
சமீபத்துல ஒரு கொண்டாட்டம் நடத்தினாங்க. ‘யோகிபாபு சினிமாவுக்கு வந்து 14 வருஷம் ஆகிடுச்சு’ என்பதற்கான விழா அது. உண்மை என்னன்னா... யோகிபாபு ஜெயிச்ச 14 வருஷத்த கணக்கு வச்சு கொண்டாடியிருக்காங்க. ஆனா... அதுக்கு முன்ன... ஆறு வருஷமா பல போராட்டங்கள், கஷ்டங்களைக் கடந்து, சின்னத்திரையில் ‘லொள்ளு சபா’ உட்பட சில நிகழ்ச்சிகள்ல நடிச்சு கஷ்டப்பட்டு முன்னேறினாரு.
நம்ம படத்துல யோகிபாபு நடிச்சா... அந்தப் படம் காப்பாத்தப்படும், நம்ம படத்துல காமெடி ட்ராக்ல யோகிபாபு நடிச்சா அந்த காமெடி நின்னு ஜெயிக் கும்’ அப்படினு படம் எடுக்குறவங்க நம்பிக்கை வைக்கிற லெவலுக்கு தன்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்காரு யோகிபாபு.
அந்தக் காலத்துலருந்து சிலர் இண்டியூஸுவல் காமெடில முத்திரை பதிச்சாங்க. அப்படிப் பட்ட தனிமனித காமெடியில் தனிச்சு நிக்கிறாரு யோகிபாபு.
இப்ப வந்த ‘லவ் டுடே’வுல பாருங்க... ஒரு ஸீன்ல பேரை அள்ளிப் போட்டுக்கிட்டு போய்ட் டாரு.
பேரு எடுக்கிறது முக்கிய மில்ல... அதை தக்க வச்சுக்கவும் செய்றாரு யோகிபாபு.
செட் அஸிஸ்டெண்ட்டா சூரி வேலை பார்த்துக்கிட்டிருந்த காலத்திலருந்தே தெரியும். ஆனா தன்னை முன்னெடுத்துச் செல்ல ரொம்ப முயற்சிகள் செஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கார். அதிலும் சிவகார்த்தி கேயனும், சூரியும் சேர்ந்தா காமெடி செமயா இருக்கும்.
ஸீன்ல மட்டுமில்ல... ஷூட்டிங் ஸ்பாட்ல உட்கார்ந்திருக்கையில இவிய்ங்க அள்ளித் தெளிக்கிற காமெடி சும்மா பிய்ச்சு எறியும். கேட்கிறவய்ங்க சிரிச்சு உருளணும்.
வெற்றிமாறன் ஒரு பெரிய டைரக்டர். அவரு சூரிய கதை நாயகனா வச்சு படம் பண்றதுன்னா... சூரி எந்தளவுக்கு தன்னோட திறமையை வளர்த்திருக்கணும். இந்தப் படத்துல விஜய்சேதுபதியும் நடிக்கிறார். ஆனாலும் கதை நாயகன் சூரி தான். வெற்றிமாறன் என்கிட்ட இந்த கதையோட லைன் சொன்னார். ரொம்ப நல்லா இருந்தது. இந்தப் படத்தில் நானும் ஒரு ஸீன்ல நடிச்சிருக்கேன்.
மண்வாசனை மிளிரக்கூடிய ஒரு அருமை யான நடிகர் சிங்கம்புலி. பேஸிக்கா அவர் ஒரு ரைட்டராவும் இருக்கிறதுனால டைரக்டர் என்ன சொல்றார்ங்கிறத உள்வாங்கி, அதை எப்படி பிரஸண்ட் பண்ணினா நல்லா இருக்கும்னு, யோசிச்சு நடிப்பார்.
இப்ப நான் சொன்ன காமெடி நடிகர்கள்லாம் குணச்சித்திர கேரக்டர்லயும் பிரமாதம் பண்ணுவாங்க. எனக்கு குணச்சித்திர கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு.
ஆனா... எல்லாரும் என்னை காமெடியனாவே பார்க்குறாங்களே.....
(பறவை விரிக்கும் சிறகை)