""ஹலோ தலைவரே, தமிழர்களின் உணர்வைத் தட்டியெழுப்பும் திராவிடத் தலைவர்களின் பெயர்களே, தமிழகத்தில் தென்படக் கூடாதுன்னு மோடி தலைமையிலான மத்திய அரசு நினைக்குது.''’’
""ஆமாம்பா, பெரியார் ஈ.வெ.ரா. சாலைங்கிற பெயரே, அவங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி இருந்ததைப் பற்றி போன முறையே பேசியிருந்தோமே?''
""ஆமாங்க தலைவரே, சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலைக்கு, 1979ல் வைக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலைங்கிற பெயரை, எடப்பாடி அரசு, சத்தமில்லாமல் ‘கிராண்ட் வெஸ்ட் ட்ரங்க் ரோடு-ன்னு பெயர் மாற்றம் செய்தது. இதுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்புச்சு. மு.க.ஸ்டாலின் சொன்னதன் பேரில், தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ மூவரும் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சனை சந்தித்து, ஸ்டாலினின் கண்டனக் கடிதத்தைக் கொடுக்க, இதைப் பார்த்த ராஜீவ் ரஞ்சன், அந்த சாலைக்குப் பழையபடி பெரியார் பெயரே இருக்கும்ன்னு சொல்லி அனுப்பினார். ஆனால், இதில் கொஞ்சமும் உண்மை இல்லையாம்.''’’
""அப்படியா?''’’
""ஆமாங்க தலைவரே, இதைப்போலவே, மெரினா சாலைக்கு சூட்டப்பட்ட காமராஜர் பெயரும், மௌண்ட் ரோட்டுக்கு சூட்டப்பட்ட அண்ணா பெயரும், கிராண்ட் நார்தர்ன் டிரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடுனு, நெடுஞ்சலைத் துறை ரெக்கார்டுகளில் உள்ள பழைய காயலான் கடைப் பெயர்களையே பயன்படுத்த நினைக்குது. பெரியார், காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயரைச் சூட்டிய திராவிட அரசுகள், அந்தப் பெயர்களை மத்திய நெடுஞ்சாலைத்துறையில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதைத் தங்களுக்குச் சாதகமாக பா.ஜ.க. பயன்படுத்திக்க நினைக்குது.''’’
""இந்தப் பெயர் மாற்றத் தின் பின்னால் பண்பாட்டு அழிப்புடன், ஒரு மெஹா ஊழலும் மறைந்திருக்கு தாமே?''’’
""சாலை விவகாரம் பற்றி விசாரித்தபோது, இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள், நெடுஞ் சாலைத் துறை அதிகாரி கள்தான் என்கிற உண்மை தெரியவந்திருக்கு. நெடுஞ் சாலைத் துறையில், சென்னைக் கோட்டப் பொறியாளராக சரவண செல்வனும், சென்னை வட்டத்தின் சூப்பிரடெண்ட் இன்ஜினியராக இளங்கோவும் இருக்கிறார்கள். இந்த இரண்டு பிரிவுகளும் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் கீழ் இருக்குது. இதன் தலைமைப் பொறியாளராக இருப்பவரின் பெயர் சாந்தி. இவர்களின் கூட்டு முயற்சியில்தான் சாலைப் பெயரை மாற்றும் வேலையே தொடங்கியிருக்கு.''’’
""’எப்படி?'' ’’
""தேர்தல் நேரத்தில், மற்ற துறை அதிகாரிகள் பல்வேறுவிதத்திலும் நிதியை ஒதுக்கி, இஷ்டத்துக்கும் விளையாண்ட மாதிரி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி களும் ஊழலுக்கு வழி தேடினாங்க. அப்ப, அதுக்கு வசதியா, வெவ்வேறு இடங்களில் சாலைகளின் பெயரை ஒளிரும் போர்டுகளாக வைக்க முடி வெடுத்தாங்க. இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் துறை சார்பா அனுமதி கேட்கப் பட்டபோது, சாலைகளின் பெயர்ப் பலகைகளைப் புதிதாக வைப்பதில் மகிழ்ச்சி. ஆனால் தமிழகத்தின் தேசிய நெடுஞ் சாலைகளுக்கு, திராவிடத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி இருக்காங்க. அந்தப் பெயர்கள் இல்லாதபடி கவனமாப் பார்த்துக்கங்கன்னு சொன்னாராம்.''’’
""ஓ ...''’’
""இதைத்தொடர்ந்து சாலைப் பெயர்களை ஒளிரும் போர்டுகளாக வைக்க, ரூ. 3.5 கோடிக்கு திட்டங்கள் தயாரிச் சிருக்காங்க. இது தொடர்பான கோப்புகளை கோட்டப் பொறியாளர் சரவண செல்வன் தயாரிக்க, அதற்குத் தலைமைப் பொறியாளர் சாந்தி ஒப்புதல் கொடுக்க, அந்த கோப்புகள் துறையின் செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ்.சிடம் போயிருக்கு. அவர், தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சனிடம் அனுமதி வாங்கியிருக்கார். இதைத்தொடர்ந்து, பேருக்கு டெண்டர் விடப்பட்டு, போர்டுகளுக்காக ரூ. 1.5 கோடியை மட்டும் செலவு செய்திருக்காங்க. மீதமுள்ள 2 கோடி ரூபாயை, கோட்டப் பொறியாளர் முதல், துறையின் மேலிடம் வரை பகிர்ந்துக்கிட்டாங்களாம். இப்படித்தான் பெரியார் ஈ.வெ.ரா. சாலைங்கிற பெயர் மாற்றப்பட்டு, ரெக்கார்டுகளில் இருந்த ’கிராண்ட் வெஸ்ட் ட்ரங்க் ரோடு-ங்கிற பெயர் பொறிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம் எடப்பாடிக்குத் தெரிந்தும் அவரும் டெல்லிக்கு அனுசரணையாக அமைதியாயிட்டாராம்.''’’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைவெளி இருந்தால் வெளிநாடு சென்று வருவது மு.க.ஸ்டாலின் வழக்கம். இது கொரோனா காலம் என்பதால் தமிழ்நாட்டுக்குள்ளேயே ரிலாக்ஸ் ஏரியாவை செலக்ட் பண்ணி, ஃப்ளைட்டில் மதுரைக்கு வந்து, அங்கிருந்து கொடைக்கானலில் உள்ள ரிசார்ட்டுக்கு போயிருக்கிறார். குடும்பத்தினரும் கூட இருக்கும் நிலையில், அங்கிருந்தபடியே கட்சி நிர்வாகிகளோடு ஆலோசிக்கும் ஸ்டாலின், மே 2-க்குப் பிறகு செய்யவேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்திருக்கிறார். இதில், அமைச்சரவைப் பட்டியல் குறித்த ஆலோசனைதான் தீவிரமா நடந்திருக்கு.''’’