அ.தி.மு.க. முன்னாள் அமைச் சர்கள் விஜய பாஸ்கர், வேலு மணி ஆகியோ ருக்குச் சொந்த மான நாற்பத்தி நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 13-ந் தேதி (செவ்வாய்) சோதனை நடத்தினார்கள்.
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கிராமப் புற பஞ்சாயத்துக்களில் உள்ள சாதாரண மின் விளக்குகளை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக எல்.ஈ.டி. மின்விளக்குகளைப் பொருத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை திருவள்ளூர் -ஊத்துக் கோட்டையில் மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகனான ஐசரிகணேஷ் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி அளித்தார். இந்த இரண்டு திட்டங்களிலும் ஊழல் நடைபெற்றது என லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுடன் பேசினோம். அவர்கள் பல அதிர்ச்சிகரமான தகவல்களைச் சொன்னார்கள். நாங்கள் மூன்று முறை எஸ்.பி.வேலுமணியின் இடங்களில் சோதனை நடத்தினோம். இதுவரை அவர்மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு என தொடரப்பட்ட இரண்டாவது வழக்கு ஆகியவற் றில் நூற்றி இருபது இடங்களில் சோதனை நடத்தி னோம். இந்த முறை 31 இடங்களில் சோதனை செய்தோம். இப்படி 150-க்கும் மேற்பட்ட எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான இடங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
இம்முறை நடைபெற்ற சோதனைகளில் முன்பு நாங்கள் பார்த்தது போல இல்லை. அதிர்ச்சி கரமாக இருந்தது. பாலமுருகன் எலக்ட்ரிக்கல் என்கிற நிறுவனம் மொத்தமாக தமிழகம் முழு வதும் சப்ளை செய்யப்பட்ட எட்டு லட்சம் எல்.ஈ.டி. விளக்குகளை சப்ளை செய்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் முகவரியை டெண்டர் டாக்குமெண்டுகளில் இருந்து எடுத்துக் கொண்டு அதைச் சோதனை செய்யச் சென்றோம். அந்த முகவரியில் பாலமுருகன் எலக்ட்ரிக்கல் ஷோ ரூம் இல்லை. பாலமுருகன் ஜெராக்ஸ் கடைதான் இருந் தது. அவர்கள் நிலம் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யும் தொழிலைச் செய்து வந்தார்கள்.
இதுபற்றி நாங்கள் அவர்களிடம் கேட்ட போது, "எங்களுக்கும் எல்.ஈ.டி.விளக்குகளை சப்ளை செய்த டெண்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்தக் கடையின் உரிமையாளர் அமைச்சர் வேலுமணியின் சாதியைச் சார்ந்தவர். அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதி சங்கத் தலைவரான முன்னாள் கோவை உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதிக்கு நெருக்கமானவர். எனவே, அவர் பேரைப் பயன்படுத்தி ஜெராக்ஸ் கடை முகவரியில் டெண்டர் எடுத்து தமிழகம் முழுவதும் மூன்று லட்சம் எல்.ஈ.டி. விளக்குகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன''” என்றார்கள்.
நாங்கள் அந்த ஜெராக்ஸ் கடையில் காலை எட்டு மணி முதல் மாலை வரை உட்கார்ந்து விட்டு திரும்பினோம். அது போலவே இந்த டெண்டரில் குறிப்பிடப் பட்ட பல நிறுவனங்களின் அலுவலகங்கள் எல்லாம் பத்துக்குப் பத்து அறைகளாகத் தான் இருந்தன. சுமார் எழுபத்தி ஆறு கோடி ஊழல் என இது தொடர்பாக முதலில் புகார் கொடுத்த, தற்போதைய சபா நாயகர் அப்பாவு கூறுகின்றார்.
மேலும், 2019, 20 ஆண்டுகளில் தமிழக அரசு எல்.ஈ.டி விளக்குகளை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. 300 ரூபாய் மதிக்கக்கூடிய எல்.ஈ.டி. விளக்குகள் நாலாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களில் பரீட்சார்த்தமாக நடத்திய விசாரணைகளில் மட்டும் ரூபாய் 74 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள் ளது என புகார் கொடுத்தார் அப்பாவு.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்பாக கவர்னரிடம் கொடுத்த ஊழல் பட்டியலிலும் இந்த எல்.ஈ.டி. பல்புகள் விவகாரம் இடம் பெற்றது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கந்தசாமி ஐ.பி.எஸ். இந்த ஊழலைப் பற்றி விரிவாக விசாரணை செய்தார். 2015 ஆண்டு முதல் 2018 வரை தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்ட எட்டு லட்சம் எல்.ஈ.டி. விளக்குகளில் ரூபாய் ஐநூறு கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள் ளது என கண்டுபிடித்தார். அதை ஒட்டி 31 இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதில் ஆறு கம்பெனிகள் வேலுமணியின் நேரடிப் பினாமி கம்பெனிகள்.
ஏற்கெனவே வேலுமணிக்கு எதிராக தொடுக்கப்பட்ட மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இடம்பெற்ற கே.சி.பி. என்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் களான சந்திரசேகர் மற்றும் சந்திரப்பிரகாஷ் ஆகியோர் இந்த ரெய்டிலும் சோதனைக்குள் ளாக்கப்பட்டார்கள். இது தவிர சபரி எலக்ட்ரிக் கல் ராதாகிருஷ்ணன், முருகன் எலக்ட்ரிக்கல் பரசுராமன், ஆர்.கே.எம். எலக்ட்ரிக்கல் மணி வண்ணன், ஓரியண்ட் எலக்ட்ரிக்கல் விஜயகுமார் ஆகியோரது இடங்களும் ரெய்டுக்குள்ளாக்கப் பட்டன. அதில் ஒன்பது இடங்கள் சென்னை யிலும் பதினாலு இடங்கள் திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு என தமிழ்நாடு முழுவதும் ரெய்டு நடத்தப்பட்டது. எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் தனது தாயாருக்குச் சொந்தமான நகைகளை போலீசார் கொண்டு சென்றதாக வேலுமணி கூறினார். அந்த நகை மட்டும் 1 கிலோ 228 கிராம். சாதாரண மில் தொழிலாளியாக இருந்த வேலுமணியின் தந்தையாரான பழனிச்சாமியின் மனைவியான அவரது தாயாருக்கு எப்படி கிலோகணக்கில் நகைகள் வந்தது என கேட்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப் போலீசார். அத்துடன் பழைய சோதனைகளில் சிக்காத 316 ஆவணங்கள் சிக்கியுள்ளது வேலுமணி தரப்பை கதிகலங்க வைத்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி, பத்து கார்கள், இரண்டு வங்கி லாக்கர்கள் என வேலுமணி வகையறாக்களிடமிருந்து அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப் போலீசார்.
விஜயபாஸ்கருக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு நடத்தும்போது ஒரு முக்கியமான ஆவணம் லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்குக் கிடைத்துள்ளது. ஊத்துக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு 2019-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதிதான் ஐசரி கணேஷ் விண்ணப்பித்தார். அடுத்த 25 நாட்களுக்குள் அவருக்கு மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 250 படுக்கைகள், அது முழுவதும் நோயாளிகள், அறுவை சிகிச்சை அரங்குகள், இரத்த வங்கி, புற நோயாளிப் பிரிவு ஆகியவை அந்த மருத்துவமனையில் இருக்கிறது என ஐசரி கணேஷ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்த அதேநாளில் அரசு சார்பில் ஒரு சோதனை நடத்தி அறிக்கை பெற்றதாக அந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசு 2020 நவம்பர் 22 தேதி அன்று நடத்திய சோதனையில் இவையெல்லாம் பொய், திரைப்பட பாணியில் நோயாளிகளாக நடிகர் கள் படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதையெல்லாம் வைத்து அந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்த டாக்டர் வசந்தகுமார் உட்பட பல டாக்டர்கள் வீடுகள் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டன. இந்த ரெய்டிலும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சோதனைகளுக்கு சில அதிகாரிகள் தடையாக இருந்தார்கள். அதையும் மீறி கந்தசாமி நேரடியாக முதல்வரிடம் பேசி அனுமதி பெற்று சோதனை நடத்தியுள்ளார் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப் போலீசார்.
அதே பாணியில் எடப்பாடி மீது சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்வதற்கான அனுமதியை லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுள்ளது. விரைவில் எடப்பாடி வீட்டில் ரெய்டு மேளம் ஒலிக்கும் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.