ஈரோட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது மின்கட்டணத்தை கட் டாமல் இருந்துள்ளார். இதை யடுத்து அவர் தனது சகோதர ரிடம் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தைக் கட்டச் சொல்லியிருக்கிறார். அவரது சகோதரரும் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தைக் கட்டியுள்ளார்.
இந்நிலையில் ஒருசில நாட் களுக்குப் பிறகு அந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் செல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள் ளது. அந்த மெசேஜை ஆசிரியை திறந்து பார்த்தபோது அதில் "நீங்கள் மின்சாரக் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் கட் டாததால் பைன் போடப்பட்டி ருக்கிறது. இன்று இரவுடன் உங்க ளது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என்று இருந் தது. இதைத்தொடர்ந்து அந்த மெசேஜ் வந்த நம்பரை ஆசிரியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் "உங்கள் வீட்டின் மின் இணைப்பைத் துண்டிக்கா மல் இருக்கவேண்டும் என்றால் நாங்கள் உங்கள் வாட்ஸ் அப்புக்கு ஒரு அப்ளிகேஷனை அனுப்பிவைக் கிறோம். அந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்'' என்றார்.
இதை நம்பிய அந்த ஓய்வு பெற்ற ஆசிரியை, அந்த அப்ளி கேஷனை தனது செல்போனில் டவுன்லோடு செய்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அதில் பத்து ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்று சொல்லப்பட, இதையடுத்து ஆசிரியை அந்த அப்ளிகேஷனில் சென்று 10 ரூபாய் கூகுள் பே மூலம் கட்டியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு ஓ. டி. பி. நம்பர் வர, அந்த ஓ.டி.பி. நம்பரை ஆசிரியை அந்த அப்ளிகேஷனில் பகிர்ந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 2,46,000 எடுக்கப்பட்டதாக வந்த தக வலைக்கண்டு ஆசிரியை அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் ஆசிரியை.
அதன் பேரில் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஜெய சுதா வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறும்போது,
"தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் பல்வேறு நவீன திருட்டுகள், மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் யாரும் முன்பின் முகம்தெரியாத நபர்களிடமிருந்து வரும் போனை நம்பி ஏமாற வேண்டாம். அதேபோல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி கரமாக வரும் விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம். 5 ஜி சேவை வந்துள்ள நிலையில், மோசடிக் கும்பல், "உங்கள் போன் எண்ணை 5ஜி சேவைக்கு மாற்றவேண்டும். உங்களைப் பற்றிய விவரங்களைக் கூறுங் கள்' என்று போன் செய்தால் நம்பி ஏமாறவேண்டாம். தற்போது சில நாட்களாக இதுபோன்ற மோசடி அதிக அளவில் நடந்துவருகிறது'' என்கிறார்கள்.