ண்ணூர் மாவட்டம் தலச்சேரியை அடுத்த நாதாபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த மஞ்சு, மகிளா காங்கிரசின் மா.செ. ஆகவும் இருந்துவந்தார். இவர் வீடியோகாலில் ஒருவருடன் பேசியபடியே தன் உடைகளை நீக்கிக் காட்டும் வீடியோ வாட்ஸ்அப் குரூப்பில் பகிரப்பட்டு வந்தது.

இது கேரள அரசியல் கட்சியினரிடத்தில் பரபரப்பை ஏற்படுத்த... உடனே மஞ்சு தன்னுடைய கட்சிப் பதவி, பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய தலச்சேரி சைபர் க்ரைம் போலீசாருக்கு விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைத்தன.

vv

Advertisment

இதையடுத்து தீவிர விசாரணை நடத்திவரும் சைபர் க்ரைம் போலீஸின் சோர்ஸ் ஒருவருடன் நாம் பேசினோம்... "காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடியோ அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட வில்லை. அவருக்குத் தெரிந்தேதான் வீடியோ காலின் மறுமுனையில் இருந்தவர் அதை பதிவு செய்திருக்கிறார். இவரைப்போல் பல பெண்களின் வீடியோக்கள் வைரலாகியிருக்கிறது.

வடமாநிலங்களிலிருந்து பலர் இங்கு வந்து வட்டித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பா.ஜ.க.வின் பின்புலமுள்ள சேட்டுகள். இவர்கள் லோக்கலில் உள்ளவர்களை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் பெண்களை குறிவைத்து வட்டிக்கு பணம் கொடுக்கிறார்கள். அந்த வகையில் பணம் வாங்கிக் கொண்டு வட்டியை ஒழுங்காகக் கொடுக்க வில்லையென்றால் அந்த வட்டியைக் கழிக்கும் விதமாக அழகான பெண்கள் சேட்டின் வீடியோகாலில் போய் முழு நிர்வாணமாக தங்களை வெளிப்படுத்தினால் குறிப்பிட்ட வட்டியைக் கழித்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

vv

Advertisment

காங்கிரஸ் பெண் பிரமுகர் மஞ்சு, குஜராத்தைச் சேர்ந்த சேட்டிடம் 5 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து 3 மாதம் வட்டி கொடுக்காததால் அந்த பெண்ணின் புகைப் படத்தைப் பார்த்ததும் அந்த சேட் வட்டி வசூல்செய்பவன் மூலம் அஞ்சுவை ஆபாசமாக வீடியோ காலில் வரச்சொல்லியிருக்கிறார். முதலில் தயங்கிய மஞ்சு பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு வீடியோகால்தானே... நேரடியாக படுக்கையறைக்கு அழைக்கவில்லையல்லவா என வீடியோ காலில் சென்றிருக்கிறார்.

அந்த வீடியோவை ரசித்து செல்போனில் ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்துகொண்ட சேட், அதன்பிறகு கொடுத்த பணத்தையும் அதற்கான வட்டியையும் கேட்டுள்ளார். பணத்தை உடனே செட்டில் பண்ணவில்லை என்றால் அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு வட்டி வேண்டாம்னு வீடியோ காலில் வரச்சொல்லிவிட்டு இப்ப வட்டியையும் முதலையும் சேர்த்துக் கேட்டால் எப்படி? என்னால் வட்டி தரமுடியாது அசல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன் என்றிருக்கிறாள். அதற்குச் சம்மதிக்காத சேட், தொடர்ந்து மிரட்டியதால், "நான் போலீசில் புகார் கொடுப்பேன்' என்றிருக்கிறார் மஞ்சு.

vvஇதனால் ஆத்திரமடைந்த சேட் அந்த வீடியோவை வெளியிட்டு வைரலாக்கிவிட்டார். இதேபோல் அந்த சேட் இன்னும் பல பெண்களிடமும் இந்த மாதிரி சல்லாபப் புத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளார். அவரைப் பற்றியும் அவருக்கு உடந்தையாக இருந் தவர் குறித்தும் விசாரித்து வருகிறோம்'' என்றார் அந்த சைபர் க்ரைம் சோர்ஸ்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த நண்பரான இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் இதுபோல் கேரளத்தில் வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்திருக்கிறதா என பேசினோம். "கேரளாவில் மட்டு மல்ல… தமிழ்நாட்டிலும் இப்படி நடக்கிறது. வடமாநிலங்களிலிருந்து இங்கு வியாபாரிகளாக இருக்கும் சேட்டுகளில் பெரும்பாலானோர் வட்டித் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பணம் கொடுப் பதற்கும் வட்டி வசூல் செய்து கொடுப்பதற்கும் இங் குள்ளவர்களைப் பயன் படுத்துகிறார்கள். பணம் வாங்கிய பிறகு கஷ்டத்தில் வட்டியும் முதலும் கொடுக்க முடியாமல் இழுத்தடிக்கும் பெண்களை இந்த மாதிரி தங்களின் வலையில் சிக்கவைத்து பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டும்போது மானத்திற்குப் பயந்து, அந்த பெண்கள் எப்படியாவது பணத்தை புரட்டிக் கொடுக்கிறார்கள். ஆண்கள் பணம் கேட்டாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில்தான் பணம் கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ஆலப்புழா சேர்த்தல பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக மகள் பெயரிலிருந்த வீட்டுப் பத்திரத்தை சேட்டிடம் அடமானம் வைத்து மகள் பெயரிலே பணம் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு அவரால் வட்டி ஒழுங்காகக் கட்டமுடியாததால் அந்த சேட் திருமணமாகிச் சென்ற அந்த பெண்ணை வட்டி கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். வட்டிப்பணம் கட்டவில்லையென்றால் வீட்டை தனது பெயரில் மாற்றிக்கொள்வதாக மிரட்டி யுள்ளார்.

இந்தச்சூழலில் வட்டி வசூல் செய்யும் நபர் அந்த பெண்ணிடம் வட்டியைக் கழிக்க வேண்டுமென்றால் சேட்டிடம் வீடியோ காலில் அந்தமாதிரி போகவேண்டுமென்றிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஏற்கனவே உள்ள நெருக்கடியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் சேட்டின் செல்வாக்கால் அவர்மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பேசி முடிக்கப்பட்டது. ஒருசில வக்ரபுத்தி கொண்ட சல்லாப சேட்டுகள்தான் இப்படி வட்டித் தொழிலை நடத்துகிறார்கள்''’என்றார்.