ந்தச் சிறுமியின் சிரிப்பு, மோனோலிசா ஓவியத்தையும் மிஞ்சிவிட்டது. ஏனெனில், கண்ணீர் நாட்களைக் கடந்து வரும் புலம்பெயர்த் தொழிலாளர் குடும்பத்துக் குழந்தையின் சிரிப்பு. ஊரடங்கால் வேலையிழந்து, பசி பட்டினியுடன் நடைப்பயணமாக கால்கள் கொப்பளிக்க கூட்டம் கூட்டமாக பல நூறு மைல்களை அவர்கள் கடந்து கொண்டிருக் கிறார்கள். அத்தகைய சூழலில் எப்போதோ கிடைக்கும் உணவு என்பது அவர்களின் உயிரைத் தாங்கிப் பிடிக்கிறது. தன் உயிர் தாங்கிய உணவைக் கொறித்தபடி அந்தச் சிறுமி புன்னகைக்கும் போது அது வெறும் சிரிப்பு அல்ல, உயிர்ப்பு.

பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங் களிலும் பரவிய அந்தப் புன்னகையின் பின்னே அதற்கான விலையும், கடந்து வந்த வலியும் அப் பட்டமாகத் தெரிந்தன. கொரோனா மட்டுமல்ல, உலகின் எந்தக் கொடியநோயை விடவும் கொடூரமானது பசி என்பதை, புலம்பெயர்த் தொழிலாளர்கள் படும் வேதனை ஒவ்வொரு நாளும் உணர்த்துகிறது.

rr

அரசுகள் கைவிட்டுவிட, நடந்தே பயணப்படும் அவர்களில் பலர், வழியில் உடல் சோர்வு, பசி, விபத்து என பல்வேறு காரணங்களால் உயிரை விட்டிருக்கின்றனர். அப்படியொரு புலம்பெயர் தொழிலாளியின் உயிர்வலியும், அவரது நண்பரின் பாசப்போராட்டமும் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது.

Advertisment

அம்ரித் ராம்சரணும், யாகூப் முகமதுவும் நண்பர்கள். இருவருமே உத்தரப்பிரதேசம் மாநிலம், பஸ்தி பகுதியில் உள்ள தியோரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாமல், குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றவர்கள், மூன்று ஆண்டுகளாக டெக்ஸ்டைல் தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர்.

இந்நிலையில்தான், கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, புலம்பெயர் தொழிலாளர்களின் திசைகள் அடைக்கப்பட்டன. அம்ரீத்தும், யாகூப்பும் மார்ச் 22ந்தேதியே ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்திருந்தும், மக்கள் ஊரடங்கால் திட்டம் பாழானது. வேறு வழியின்றி, 50 நாட் களுக்கும் மேலாக வாழ்வாதாரமின்றி சூரத்தி லேயே தங்கியிருந்தவர்களுக்கு, லாரி ஒன்றில் சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கையில் எஞ்சியிருந்த 8 ஆயிரம் ரூபாயை லாரி டிரைவரிடம் கொடுத்துவிட்டு, மே 14ந்தேதி பயணத்தைத் தொடங்கினார்கள்.

பகலில் கொளுத்தும் வெயில், இரவில் கொட்டும் பனி. குடிதண்ணீருக்காகக் கூட வழியில் நிறுத்தாத டிரைவர் என திறந்தவெளி லாரியில் 60 பயணிகளும் கொடூரக் கனவைக் கடந்து கொண்டிருந்தார்கள். இதில் அம்ரீத்திற்கு வெயில் பக்கவாதமும், நீரிழப்பும் ஏற்பட்டது. எவ்வளவோ கெஞ்சியும் டிரைவர் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லத் தயாராக இல்லை. தீவிர காய்ச்சலும் தொற் றிக்கொள்ள சக பயணிகளுக்குள் அச்சம் பரவியது.

Advertisment

மே 15ந் தேதி மத்தியப்பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டம், கோலாரஸ் நெடுஞ்சாலை வந்தபோது, அம்ரீத்தைக் கீழே இறக்கிவிடுமாறு கூச்சல் கிளம்பியது. அம்ரீத்துடன் யாகூப்பும் இறங்கினார். பாதி தூரம்தான் வந்திருக்கிறோம். மீதிப் பணத்தைக் கொடுத்தால் மருத்துவச் செலவுக்கு ஆகுமென்று கேட்டபோது டிரைவர் மனமிரங்கவில்லை.

r

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அம்ரீத்தைக் காப்பாற்ற வேண்டி, வாகனங்களை நிறுத்த முயற்சித்தார் யாகூப். வழியில் சென்றவர் களின் காலில் விழவும் தயங்கவில்லை. கடைசியாக ஒரு பத்திரிகையாளரின் உதவியோடு ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் அங்கு வரும் வரையில், அம்ரீத்தை மடியில் கிடத்தி, முகத்தில் நீர் தெளித்து துடித்துக் கொண்டிருந்தார் யாகூப்.

மருத்துவமனையில் சேர்த்தபோது மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார் அம்ரீத். 105 டிகிரி உடல் வெப்பநிலை இருந்தது. மருத்துவப் பணியாளர் களே நெருங்க அஞ்சியபோதும், அம்ரீத்தைத் தொட்டுத்தூக்கி உதவ யாகூப் தயங்கவில்லை. இருவருக்குமே கோவிட்-19 பரிசோதனை செய் யப்பட்டது. அம்ரீத்திற்கு வைரஸ் தொற்றில்லை என்று தெரிந்ததுமே, வெண்டிலேட்டருக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால், ஏற்கனவே நிறைய தாமதம் ஆகியிருந்ததால், அம்ரீத்திற்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. நண்பனின் இறப் புச்செய்தி கேட்டு உடைந்து அழுத யாகூப்பைத் தேற்ற, அங்கிருந்த யாருக்கும் வார்த்தையில்லை.

இதில், மேலும் சோகம் என்னவென்றால், இருவரும் லாரியில் கிளம்புவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே, யாகூப்பிற்கு தனியாக ஊர் திரும்பும் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால், ஒன்றாகவே சூரத் வந்தோம். போகும்போதும் ஒன்றாகவே கிளம்புவோம் எனக்கூறி, அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் யாகூப். “ஊருக்குத் திரும்பி விவசாயக் கூலிகளாக இருந்துவிடலாம் என்றிருந்தோம். இப்படி ஆகிவிட்டது. அம்ரீத்தின் வருமானம்தான், அவனது குடும்பத்தைக் காப் பாற்றிக் கொண்டிருந்தது. இனி முடங்கிப்போன அவனது தந்தையும், சகோதரர்களும் என்ன செய்வார்களோ'' என்று கதறுகிறார் யாகூப்.

உயிருக்குப் போராடும் அம்ரீத்தை தனது மடியில் யாகூப் கிடத்தியிருக்கும் படம், சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. “இதுதானே இந்தியாவின் முகம். இதைப் புரிந்துகொள்ளாமல், மதத்தின் பெயரால் ஏழ்மையில் பெயரால் இந்த தேசத்தை பிளக்கிறார்களே என்று, அதைப் பகிர்பவர்கள் ஆட்சியாளர்களின் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

-ச.ப.மதிவாணன்