போடி தொகுதியிலுள்ள ஊராட்சித் தலைவர்களை அழைத்து, ஆளும் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது போடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடந்தமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் தி.மு.க. சார்பில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனும் நேருக்கு நேர் களமிறங்கினார்கள். இரண்டு முறை போடி தொகுதியை ஓ.பி.எஸ். தக்க வைத்திருந்தும் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை சரிவர செய்துகொடுக்காமல் தன்னை மட்டுமே வளர்த்துக்கொண்டதால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவிவந்தது.
அதன் எதிரொலியாக ஓ.பி.எஸ் ஓட்டுக் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் போர்க்கொடி தூக்கிவந்தனர். தங்கதமிழ்ச்செல்வன் அதைப் பயன்படுத்திக்கொண்டு நான் வெற்றிபெற் றால் உங்களுடைய கோரிக்கைகளையும் குறைகளை யும் உடனடியாக நிவர்த்தி செய்வேன் என்று மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். ஓ.பி.எஸ்.சின் அதி காரம், பணபலம் ஆகியவை அவரை 11 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங் களுக்கு முன்பு போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட சிலமலை, சில்லமரத்துப்பட்டி, அணைக் கரைப்பட்டி, கொட்டகுடி, ராசிங்கபுரம் உள்பட 15 ஊராட்சி மன்றத் தலைவர்களை போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதாக இப்பகுதியில் சலசலப்பு எழுந்தது.
ஆளுங்கட்சியில் அதிகாரத்தில் இல்லாமல் கட்சியில் மட்டும் மாவட்டச் செயலாளராக இருக் கக்கூடிய தமிழ்ச்செல்வன் அரசு விதிமுறைகளை மீறி எப்படி ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடத்தலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அ.தி.முக.வினர் கொந்தளித்தனர். எனினும், ஓ.பி.எஸ். இதைக் கண்டுகொள்ளவில்லை
இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, “"அமைச்சராகவும் முதல்வராகவும் துணை முதல்வராகவும் ஓ.பி.எஸ். பத்து வருடமாக இருந்தும்கூட தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்ய ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது தொகுதி மக்கள் என்னிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வலியுறுத்தினார்கள். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும்கூட தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததன் மூலம் அந்த மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர ஆர்வம் காட்டினேன்.
அதன் அடிப்படையில்தான் மஞ்சநாயக்கன் பட்டி பஞ்சாயத்திலுள்ள கொம்பேரிப்பட்டியில் 16 வருடமாக அரசு நிலத்தை அப்பகுதியிலுள்ள அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ஆக்கிரமித்திருந் தார். அந்த நிலத்தை உடனடியாக கலெக்டர், எஸ்.பி.யிடம் சொல்லி மீட்டுக் கொடுத்தேன். தற்போது மக்கள் அதை பொதுப் பாதையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலசொக்கநாதபுரத்தில் குடிநீர் சாக்கடை வசதிகளையும் சரிசெய்து கொடுத்திருக்கிறோம். கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் அப்பகுதியில் 500 கோடி செலவில் தடுப்பணை கட்டவிருக் கிறோம். அதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும். குடிநீர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு காணமுடியும். அதற்கான அனுமதி யை கூடிய விரைவில் முதல்வரிடம் சென்று வாங்க விருக்கிறோம். அதுபோல தான் தேர்தல் நேரத்தில் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி மன்றத் தலைவர்களும் எங்கள் பகுதியில் ரோடு, மின்சாரம், கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் அந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை எல்லாம் யூனியன் அலுவலகத்திற்கு வரச்சொல்லி அதிகாரிகள் முன்னிலையில் உங்கள் கோரிக்கைகளைச் சொல் லுங்கள். அதை நிறைவேற்றிக் கொடுப்பார்கள் என்று கூறினேனே தவிர ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை. பொய்யான தகவலை எதிர்க்கட்சி யினர் பரப்பிவருகிறார்கள்''’என்றார்.
ஓ.பி.எஸ்.சிடம் விளக்கம் கேட்க செல் மூலம் தொடர்பு கொண்டோம், தொடர்புகொள்ள முடி யாததால் அவருடைய ஆதரவாளர்களிடம் கேட்ட போது... "ஸ்டாலின் முதல்வராக வந்துவிட்டதால் ஆளுங்கட்சியை சேர்ந்த மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தொகுதி மக்களின் குறை களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்து நல்ல பெயர் எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார். இருந்தாலும், அவர் எம்.எல்.ஏ.வாகவோ மக்கள் பிரதிநிதியாகவோ தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அப்படிப்பட்டவர் யூனியன் அலுவலகத் தில் ஊராட்சி மன்றத் தலைவர் களையும் அதிகாரிகளையும் வைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியது கண்டனத்துக் குரியது''’என்றனர். ஓ.பி.எஸ் ஏன் சைலன்ட்டாக இருக்கிறார் என்பதுதான் சொந்தக் கட்சியினருக்கே புதிராக உள்ளது.