சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஓ.பன்னீர்செல்வம் அடுத்த நெடுஞ்செழியனா? அடுத்த அன்பழகனா?

அப்படியென்றால் இ.பி.எஸ். அண்ணா வா? கலைஞரா? காமெடி பண்ணுவதற்கு ஒரு அளவு வேணும் சார்.

m

Advertisment

ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர் -தேனி

கொரோனா நிதி 1 கோடியை அ.தி.மு.க. கட்சி முதல்வர் ஸ்டாலினிடம் தராமல், தலைமைச் செயலாளரிடம் கொடுத்தது சரியா?

n

யாரிடம் கொடுத்தால் என்ன? நிதி சரி யானபடி கஜானாவுக்குப் போய்ச் சேர்ந்தால் சரிதான். எனினும், பிரதான எதிர்க்கட்சி தனது நிதியை நேரடியாக முதல்வரிடம் கொடுத்திருக்க வேண்டும் என்கிற எதிர் பார்ப்பு மக்களிடம் ஏற்படுவது இயல்பு. 2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, முதல்வரின் பொது நிவாரண நிதிக்குப் பலரும் நிதியளித்தனர். அப்போது, தி.மு.க தலைவர் கலைஞர் தனது திரைப்பட வசனத்திற்கு கிடைத்த ஊதியத்தை சுனாமி நிதிக்கு அளிப்பதாக அறிவித்தார். அதனை நேரடியாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா வை சந்தித்து வழங்கி, வணக்கம் தெரிவித்து விடைபெற்றவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

ம.ரம்யா மணி, வெள்ளக்கோவில்

நாட்டில் மத்திய அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதை கெட்டி யாக பிடித்துக்கொண்டு மேலே வர வலுவான எதிர்முகாம் இல்லையே?

2019-லேயே அதற்கான வாய்ப்பு அமைந்தது. மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஈகோ காரணமாகவும் தங்கள் மாநில அரசியல் சூழல் காரணமாகவும் அதற்கான ஒத்துழைப்பை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி, நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் வெற்றி வாய்ப்பை பெருமளவு இழந்தனர். மத்தியில் ஆளுகின்ற கட்சிக்கு எதிரான சரியான கூட்டணியை உருவாக்கியது தமிழ்நாடுதான். அது மட்டுமில்லாமல், ராகுல்காந்திதான் பிரதமர் என மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் மூலம் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை வலிமையாகக் கட்டியமைத்து ஒருங்கிணைத்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க ஸ்டாலினால் முடிந்திருக்கிறது. இந்த தமிழ்நாடு ஃபார்முலா, இந்திய அளவில் முன்னெடுக்கக்கூடிய சூழல் அமைந்தால் எதிர்முகாம் வலுவடையும். ஆற்காடு விநாயகம், ராணிப் பேட்டை. இலக்கியவாதிகளுக்கு அரசு மரியாதை செய்யும் வழக் கத்தை தமிழக முதலமைச்சர் ஏற்படுத்தியிருப்பது பற்றி? ஞானபீடம் விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு அன்றைய அரசு கொடுக்காத இறுதி மரியாதையை, சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் மண் இலக்கியவாதி கி.ராஜநாராய ணனுக்கு கொடுத்திருக்கிறது இன்றைய அரசு. இலக்கியவாதி கள் உள்ளிட்ட படைப்பாளிகள் எதிர்பார்ப்பது மரியாதையைத் தான். அது மரணத்திற்குப் பிறகும் சிலையாக, நினைவ கங்களாக அமையுமென்றால் அதைவிட சிறப்பு என்ன இருக்கமுடியும்.

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்

அ.தி.மு.க.வின் தற்போதைய நிலவரம் எப்படி?

தனிப்பட்ட விரோதத்தில் உருவான ஒரு கட்சி அரை நூற்றாண்டு காலம் தாக்குப்பிடித்து, அதில் அதிககாலம் ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது. தனது தனித்தன்மையை மத்திய ஆட்சியாளர்களிடம் அடகு வைத்து அடிமையான புதிய தலைமையால் ஆளுங்கட்சி என்ற தகுதியை இழந்துள்ளது. தி.மு.க.வை எதிர்கொள்வதில் மட்டுமின்றி, தனது தொண்டர் களின் நம்பிக்கையையும் தக்க வைத்தால் எதிர்காலம் இருக்கும்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

கடந்த பத்து ஆண்டுகளாக அரசை கேள்வி கேட் காத சிலர், முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற 10 நாட்களில் அதிகம் அரசை விமர்சிக் கிறார்களே?

தி.மு.க. ஆட்சியில்தான் திடீர் குபீர் போராளிகள் உருவாகி விடுவார்கள். அ.தி.மு.க ஆட்சி வந்தால் அகிம்சாமூர்த்திகளாக மாறிவிடுவார்கள். தமிழக அரசியலின் டிசைன் அப்படி.

செ. பொன்னுசாமி, சிவகங்கை

அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவது சரியா?

தனது தொகுதிவாசிகள் எளிதில் அணுகக்கூடிய எம்.எல்.ஏ. வாக நல்ல பெயர் எடுத்து வருகிறார் உதயநிதி. அவரை மாண்பு மிகுக்களின் மாண்புமிகுவாக முன்னிறுத்துவது தற்காலிக லாபக் கணக்காகத் தோன்றலாம். ஆனால், தொலைநோக்குப் பார் வையில் கட் சிக்கும் ஆட் சிக்கும் நஷ்ட கணக்காகத்தான் அமையும்.

சௌ.யாழினி, கொடைக்கானல்

ஆசிரியர்களுக்கு கொரோனா காலத்தில் பாதி சம்பளம் தரலாம் என குரல்கள் வலுக்கிறதே... இது நியாயமான குரலா?

யாருக்கும் பாதி வயிறு மட்டும் பசிப்பதில்லை. பாதி வயிறு மட்டும் நிறைவதால் பசி அடங்குவதில்லை.