ணந்தால் மாற்றுத்திறனாளி பெண்ணையே மணப்பேன். என்னுடைய லட்சியமே இதுதான்..’என முற்போக்கு சிந்தனையை பேச்சில் வெளிப்படுத்திய பாலசுப்பிரமணியனை, மாற்றுத் திறனாளியான கவிதாவுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. 12-3-2021-ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருட வாழ்க்கையிலேயே கவிதாவுக்கு ‘எல்லாம்’ தெரிந்துபோனது. 24-6-2022-ல் கவிதா அளித்த புகாரின் பேரில், பாலசுப்பிரமணியன் மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது.

விருதுநகரில் கவிதாவையும் அவருடைய தந்தை முருகனையும் சந்தித்தோம். பாலசுப்பிரமணியனின் லேப்-டாப் மற்றும் செல்போனி லிருந்தும், முதல் மனைவி நந்தினி யிடமிருந்தும், தாங்கள் திரட்டிய ஆதாரங்களைக் குமுறலுடன் கொட்டினார்கள்.

பாலசுப்பிரமணியன் யார்? என்னென்ன செய்தார்?

புதுக்கோட்டை மாவட் டம் -அறந்தாங்கி -மேல்மங்களத் தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் அபுதாபியில் வேலை பார்க்கிறார். திருமணம் ஆகாதவர் என மேட்ரிமோனியலில் பதிவுசெய்து, அவ்வலைத்தளத்தில் வரன் தேடும் பெண்களைத் தொடர்புகொண்டு ஆசை வார்த்தை களில் மயக்கி, ஆபாச வீடியோ-கால் வரைக்கும் இழுத்துவருவதை சீரியஸாகச் செய்து வந்திருக்கிறார். இதன்மூலம், சம்பந்தப்பட்ட பெண்களை பிளாக்-மெயில் செய்து பணம் பறிப்பதும் நடந்துள்ளது. தன்னுடைய மிரட்டலுக்கு அஞ்சாத பெண்களென்றால் அவசரகதியில் தாலி கட்டி விட்டு, அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பெரும்தொகையைச் சுருட்டிக்கொண்டு, படு விவரமாகத் தப்பிவிடுவார். கவிதா பின்னாளில் விசாரித்தறிந்த வரையில், பாலசுப்பிரமணியனுக்கு நந்தினி, பிரியா என ஏற்கனவே இரண்டு மனைவிகள் உண்டு.

Advertisment

mm

கவிதாவுக்கு தொடர்ந்து தொல்லையளித்து வந்த பாலசுப்பிரமணியன் “"மாற்றுத்திறனாளியான உன்னுடன் நான் குடும்பம் நடத்தவேண்டுமென்றால், நான் கேட்கும்போதெல்லாம் பணம் தரவேண்டும். கொடுக்கவில்லையென்றால், உங்களை நிம்மதி யாக வாழவிடமாட்டேன்'’என சண்டையிட்டு பிரிந்துபோனார். பிறகு, பல இணையவழிக் கணக்கு களைப் போலியாகத் துவக்கி, கவிதா, அவருடைய அப்பா முருகன், அக்கா முத்துப்பிரியா ஆகியோ ருக்கு அருவருக்கத்தக்க விஷயங் களை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வந்திருக்கிறார். பாலசுப்பிரமணி யனிடம் கவிதா பறிகொடுத்தது, 10 பவுன் நகைகளும் ரூ.8 லட்சம் ரொக்கமும்.

தான் அபுதாபியில் இருந்தபோது, 2-வது மனைவி பிரியா வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து, அவர் வாயாலேயே வற்புறுத்தி வாக்கு மூலம் வாங்கியிருக்கிறான் பால சுப்பிரமணியன். அந்த வீடியோ பதிவில் "ராங் நம்பர்ல ஒருத்தன் வந்தான். அவன்கூட ரெண்டு மூணு தடவை வேளாங்கண்ணிக்கு போனேன்... தப்பு பண்ணுனேன். இது எங்க வீட்டுக்குத் தெரியாது. அப்புறம் ஒரு தடவை சிவன் கோவிலுக்கு போனேன். அவன் எந்த ஊருன்னு தெரியாது. பேரு மட்டும்தான் தெரியும். அவன் ஒரு ராங்நம்பர். இதுதான் நடந்த உண்மை'’என்று அழுதபடியே பேசுகிறார் பிரியா.

பாலசுப்பிரமணியனின் லேப்டாப் மற்றும் செல்போனில், மேட்ரிமோனியல் வலைத்தளத்தில் வரன் தேடிய பெண்களுடனான பாலசுப்பிரமணியனின் வீடியோ- கால் பதிவுகள் மிகமிக அருவருப் பானவை. சில பெண்கள் அழுத படியே பேசுகின்றனர். வேறுசில பெண்களின் போட்டோக்களும் இருந்தன. அந்த வீடியோ-கால் பதிவுகளும், போட்டோக்களும், சம்பந்தப்பட்ட பெண்களிட மிருந்து பணம் பறிப்பதற்குப் பயன்பட்டுள்ளன.

dd

கவிதாவுடன் திருமணமான 12 மாதங்களில் 8 மாதங்கள் அபுதாபியில் இருந்துள்ளான் பாலசுப்பிரமணியன். 2 மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்திருக்கிறான். கவிதாவுக்கு அடுத்த 2 மாதங்களில் அவனைப் பற்றிய உண்மை அனைத்தும் தெரிந்துவிட்டது. அடுத்து கசப்பான வாழ்க்கைதான். "மாற்றுத்திறனாளியான உன்னோடு வாழ்ந்திருக்கிறேன். அதனால், அபுதாபியில் இருந்து இந்தியா வந்த வகையில் நிறைய செலவு செய்துவிட்டேன். மரியாதையாக எனக்கு ரூ.10 லட்சம் கொடு. இல்லையென்றால், உன் அப்பாவுக்கு சம்பவம்’ நடக்கும்'’என்று நேரிலும் வாட்ஸ்-அப்பிலும் மிரட்டியுள்ளான்.

விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையம் ஒருபுறம் விசாரணை நடத்திக்கொண்டிருக்க, நாம் பாலசுப்பிரமணி யனைத் தொடர்புகொண்டோம். "பிசினஸ் விஷயமா முகநூல் மூலமா கவிதா அறிமுகமானாங்க. அவங்க கொடுத்தது பொய் யான கம்ப்ளைண்ட். எனக்கு கொடுக்கவேண்டிய பதினஞ்சு லட்ச ரூபாயை ஏமாத்திருக்காங்க. என்னை மிரட்டித்தான் கல்யா ணம் பண்ணுனாங்க. 2018-ல் எனக்கு மேரேஜ் ஆனது கவிதாவுக்கு தெரியும். போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக்கு என் மனைவி பிரியாவ கூட்டிட்டு வந்தேன். என்னுடைய பேக் ரவுன்ட் எல்லாம் தெரிஞ்சுகிட்டு, பாஸ்போர்ட்டை பிடுங்கி வச்சிட்டு, கவிதா என்னை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட் டாங்க. அது ஒரு இக்கட்டான நிலை. அந்த நேரத்துல என்னால எதுவும் பண்ணமுடியல. என்னுடைய பாஸ்போர்ட், லேப்டாப் எல்லாம் அவங்ககிட்ட இருக்கு. அவங்க போட்டோ எடிட் பண்ணி என்னோட வாட்ஸ்-அப்ப தப்பா பயன்படுத்துறாங்க. அவங்க புகையிலை கேஸ்ல மாட்னவங்க. எஸ்.ஐ. மேடம்கிட்ட அவங்களோட பான்பராக் குடோனை காட்டிக் கொடுத்ததே நான்தான். வக்கீல்ட்ட பேசிட்டிருக்கேன். நானும் அவங்க மேல கேஸ் போடுவேன்''’என்று படபடத்தவரிடம், "நீங்க சொல்லுற எதுவும் நம்புறமாதிரி இல்லையே?''’என குறுக்கிட்டபோது, "ஆமா, சரிதான்... அப்ப இருந்த என்னோட சூழ்நிலை அப்படி''’என்று சமாளித்தார்.

மேட்ரிமோனியலில் பழகத் தொடங்கி, வீடியோ-காலில் பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொள்வது, எதிர்முனையில் உள்ளவர்களை நிர்வாணப்படுத்தி ரசிப்பது, மிரட்டி பணம் பறிப்பது, திருமணம் செய்து ஏமாற்றுவதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. சட்டத்தின் மீதான பயம் இத்தகைய இழிசெயலில் ஈடுபடுவோருக்கு துளியும் இல்லையே?

Advertisment