சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த இருவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிகழ்வு பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dd

பல்வேறு பிரச்சினைகளால் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறச் செல்பவர்கள் அங்கிருந்து திரும்பவே மாட்டார்கள் என்ற மனப்பதிவே பலரிடமும் இருக்கிறது. மாறாக, உடல்நலக் குறைவைப் போல மனநலக்குறைவும் சிகிச்சைக்கு உரியதே. உரிய சிகிச்சைக்குப் பின் அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழமுடியும். அதற்கு உதாரணமாய் இந்தக் காதல் அமைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மகேந்திரனும், வேலூரைச் சேர்ந்த தீபாவும் குடும்பத் தகராறு மற்றும் தந்தை இறந்த சோகம் என இருவேறு காரணங்களால் மன அழுத்தத் துக்கு ஆட்பட்டனர். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

Advertisment

dd

இவர்களுக்கு, காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை அளித்துவந்தனர். இதில் அவர்களுக்கு மன அழுத்தம் நீங்கி பிரச்சனையிலிருந்து விடுபட, இருவரும் காப்பகத்தில் உள்ள கேர் சென்டரில் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். எம்.ஃபில். படித்துள்ள மகேந்திரன் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத் தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே மகேந்திரனுக்கும் தீபாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன்பிறகு மகேந்திரன் தன் காதலை தீபாவிடம் சொல்லியுள்ளார். அப்போது சற்று தயக்கம் காட்டிய தீபா, காலப்போக்கில் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகாவுக்குத் தெரியவந்த நிலையில்... முதலில் இருவரையும் அழைத்துப் பேசியுள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்த தெளிவும், தங்கள் முடிவில் இருந்த உறுதியும், அவரது மனதை மாற்றியுள்ளது. இருவரையும் பாதிக்காத வண்ணம் ஒரு நல்ல முடிவெடுத்த இயக்குநர், இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதை ஆதரித்தார்.

ddஇதனையடுத்து காப்பக மருத்துவர் கள், ஊழியர்கள், நண்பர்கள் என்று பலர் உதவியுடன் புதியதாக வாடகை வீடு, வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்செய்து கொடுத்துள்ளார்கள்.

28.10.2022 காலையில் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் இயக்குனர் பூர்ணசந்திரிகா, சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மருத்துவர்கள் முன்னிலையில் சித்தி புத்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்துக் கொடுக்க, காதல் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர். 200 ஆண்டுகள் பழமையான மனநலக் காப்பகத்தில், சிகிச்சை பெற வந்தவர்கள் திருமணம் செய்துகொண்டது இதுவே முதல் முறையாம்.

இதுகுறித்து மனநலக் காப்பகத்தின் இயக்குனர் பூர்ணசந்திரிகாவிடம் கேட்டபோது, “"2017 மென்டல் ஹெல்த் கேர் ஆக்ட்படி மனநலம் பாதிக்கப்பட்டு மீண்டும் குணமடைந்தால் அவர்களுக்கு சொத்து உரிமை மற்றும் தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதற்கான உரிமை உள்ளது. அந்த வகையிலே இந்த திருமணம் நடைபெற்றது. மற்ற மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகமான மருத்துவர்களும், உளவியல் ஆலோசகர்களும் இருந்துவருகிறார்கள்.

இந்த தம்பதிகளை வாழ்த்தும் அதேசமயம், இங்கு தேவையான சமூகநலப் பணி யாளர்கள் எண்ணிக்கை சற்று பற்றாக்குறையாக உள்ளது. அரசு, இந்த விஷயத்தை மட்டும் கவனித்து நிவர்த்தி செய்தால் இன்னும் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்''” என்றார்.

Advertisment