வ்வொரு தேர்த லின்போதும், நீலகிரி மாவட்டத்தின் தொன்மைக்குடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போமெனத் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து, படுகர்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவது அனைத்துக் கட்சியினரின் நீண்ட கால அரசியல் தந்திரங்களில் ஒன்று. இது இப்படியிருக்க, படுகர் இனத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனை வனத்துறை அமைச்சராக நியமித்து படுகர் இனத்திற்கு பெருமை சேர்த்தது ஆள்கின்ற தி.மு.க. அரசு. நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதால் எப்படியும் பழங்குடிகள் பட்டியலில் நாம் இணைந்து விடுவோமென படுகர்கள் நினைத்துக் கொண்டிருக் கையில், "முதல்வர் என்ன? பிரதமரே வந்தாலும் படுகர்களைப் பழங்குடிகளாக்க முடியாது' என அமைச்சர் ராமச்சந்திரன் போட்டுத்தாக்க, விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாகியது. "பழங்குடியினர் பட்டியலில் படுகர்கள் கோரிக்கையின் நிஜம் என்ன? அது சாத்தியமா?' என்கின்ற கேள்வியுடன் பயண மானோம்.

padugar

Advertisment

திப்பு சுல்தான் காலத்தில், அங்கு ஏற்பட்ட அரசியல் தாக்கத்தால் தங்களைக் காத்துக்கொள்ள கர்நாடகாவின் சமவெளிப் பகுதியிலிருந்து நீலகிரி மலைப்பகுதியில் குடியேறியவர்கள் படுகர்கள். ஆனால், 12, 16-ஆம் நூற்றாண்டுகளின் காலத்தின் பொழுதே நீலகிரியில் குடியேறியவர்கள் இவர்கள் என்கின்ற கருத்தும் உள்ளது. உருவ வழிபாடு செய்யாதவர்கள், பஞ்ச பூதங்களை மட்டுமே வணங்குபவர்கள், வரி வடிவம் இல்லாத மொழி, மணப்பெண்ணுக்கு வரதட்சணை போன்றவற்றில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல தனித்துவ அடையாளங்களைக் கொண்டிருக்கும் படுகர்கள், 1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது பழங்குடியினர் பட்டியலில் இருந்ததாகச் சான்றும் உண்டு. 1941-ஆம் ஆண்டில் உலகப்போர் நடந்ததைக் காரணம் காட்டி தொடர்ந்து கணெக்கெடுப்பு நடத்தாமலிருக்க, 1951-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், பழங்குடியினர் பட்டியலிலிருந்து படுகர் இனம் நீக்கப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து இப்போதுவரை தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி போராடிவருகின்றனர்.

மானிடவியல் அறிஞரான டாக்டர்.மகேஸ்வரன், "தமிழ்நாட்டில் 36 பழங்குடியினர் சமூகங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர்கள், காலனி ஆதிக்கத்தின் பொழுது இங்கு தேயிலைத் தோட்டங்கள் அமைக்க பிரிட்டீஷாரால் அழைத்து வரப்பட்டவர்கள். தொடக்கத்தில், பின்தங்கிய பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டனர். அதன்பின் அதிலிருந்தும் நீக்கப்பட்டார்கள். இந்திய ஒன்றிய அரசின் 1965ஆம் ஆண்டைய லோக்கூர் கமிட்டி, பழங்குடியினராக பட்டியலில் இடம்பெற வேண்டுமெனில் தங்களுக்கென தொன்மைவாய்ந்த தனித்துவமான பண்பாடு இருத்தல் வேண்டும். மற்றைய சமூகத்திலிருந்து விலகி தனக்கென புவியியல் பரப்பளவைக் கொண்டிருத்தல் வேண்டும். மற்றைய சமூகத்திடம் பழக, நெருங்க தயக்கம் காட்டுவது, பொருளாதாரத்தில் பிற்பட்ட தன்மை, அதிலும் சமூகக் கட்டமைப்பில் பொருளாதாரம் என்கிற விதிமுறைகளைக் கொண்டுவந்தது. படுகர்களைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் மருத்துவர்கள், எஞ்சினியர்கள், தொழிலதிபர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் என டாப் லெவலில் இருக்கின்றார்கள். அப்புறம் எப்படி பழங்குடியினர் பட்டியலில் படுகர்களைச் சேர்ப்பார்கள்? இன்னொன்று, நீலகிரிக்கு வரும் அரசியல் ஆளுமைகளிடம் மட்டுமே தங்கள் கோரிக்கைகளை வைக்கக்கூடிய இவர்கள், முறைப்படி ஆதிதிராவிட பழங்குடியினர் நலத் துறைக்கு மனு செய்வதே இல்லை. நாங்கள் பெரியவர்கள், எங்களுக்கு அரசியல் ஆளுமைகளே போதுமென்ற எண்ணம் அவர்களிடம் உண்டு. இது அதிகாரிகள் -படுகர்கள் மத்தியில் சிக்கலை உருவாக்குகிறது. என்னைப் பொறுத்தவரை, படுகர்களுக் கென தனித்த கலாச்சாரம் இல்லாததாலும், பொருளியல் ஏற்றங்களாலும், பழங்குடி யினர் பட்டியலில் இணைவதற்கு வாய்ப் பில்லை'' என்றார்.

Advertisment

oooo

"ஜெயலலிதா கொடநாட்டிற்கு வந்ததிலிருந்துதான் இப்பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. ஏறக்குறைய 3 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்களின் வாக்கு வங்கியை வளைப் பதற்காக, படுகர்களின் கோரிக்கை யைத் தீர்க்க வேண்டுமென மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரை அழைத்து விசாரித்த ஜெயலலிதா, அதற்கு வாய்ப்பில்லையென அவர்கூற, ஜெயலலிதா அவரை மிரட்டிய தாகவும் சுவாரஸ்ய பேச்சு இங்குண்டு.

"ஏறக்குறைய 75 ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். சமீபத்தில் இங்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், எங்களு டைய பாஷையிலேயே பேசி, கலைஞர் காலத்தில் எங்கள் இளந்தாரிகளுக்காக இளம் படுகர் சங்கக் கட்டிடம் அமைக்க 25 சென்ட் நிலம் கொடுத்த தைப் பெருமைபடக் கூறினார். எங்களுடைய சமூகத்தில் தாய், தந்தை இறந்தால் அவருடைய வாரிசுகளுக்கு இறுதிச்சடங்கில் எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால் இந்து வாழ்வுரி மைச் சட்டத்தில் பிள்ளைகள்தான் கொள்ளி போடவேண்டும். அவர்கள் தான் வாரிசாக கருதப்படுவார்கள் என்றுள்ளது. இதனையே மேற்கோள் காட்டி, நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆ.ராசா பேசினார். தனித்த கலாச்சாரம் இருந்தால்தானே இப்படி எங்களுக்காகக் குரல் கொடுப்பார்கள்? எங்களுடைய முன்னோர்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து எத்தை பண்டிகையைக் கொண்டாடி வழிபடு வோம். பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்துத்தான் திருமணம் செய்வோம். இப்படி தனித்துவமான கலாச்சாரம் எங்களுக்கு இருக்கின்றது. பொருளாதாரத் தில் முன்னேறியுள்ளனர் என்கின்றார்கள். மூன்று லட்சத்திற்கு அதிகமாக உள்ள ஜனத்தொகையில் ஆங்காங்கே ஓரிருவர் முன்னேறுவது தவறா? பழங்குடியினர் நிலம் என்றால் விற்பனை செய்ய முடியாது. இப்பொழுது சிலர், நீலகிரி மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை அழித்து விற்பனை செய்யத் தயாராக இருக்காங்க. எனவே அவர்களுக்குச் சாதகமாக இருப்பதற்காக படுகர்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அமைச்சரும் பள்ளி விழாவில் அவசியமில்லாத பேச்சைப் பேசியுள்ளார்'' என்கிறார் படுகர் இன மக்களின் ஹை கமிட்டியான நாக்குப்பெட்டா படுகர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மஞ்சை மோகன்.

oo

பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரான டாக்டர். சத்யநாராயணா கூறுகையில், "தேசிய அளவில் 700 பழங்குடி சமூகம் இருக்கின்றது. இந்த 700 பழங்குடியினரும் ஒரே மாதிரி இல்லை. வளர்ந்த பழங்குடி சமூகத்திற்குக் கிடைக்கும் சலுகைகள் இன்னும் பாதிக்கு மேல் உள்ள பழங்குடி சமூகத்திற்கு கிடைப்பதில்லை. சில சமூகங்களில் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள், துணைவேந்தர்கள் இருக்கின்றனர். ஜார்க்கண்டில் முண்டா, ஓரான் மற்றும் சந்தால் இனப் பழங்குடியினர், ஆந்திராவில் லம்பாடி மற்றும் இருகுளாஸ், வடகிழக்கில் மிசோர்ஸ் மற்றும் நாகாஸ் ஆகியோர், வளர்ந்த பழங்குடியினச் சமூகமாக இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கென்று தனித்த, சமூகப் பண்பாட்டு விழுமியங்கள் உண்டு. ராஜஸ்தானைப் பொறுத்தவரை நன்கு வளர்ச்சியடைந்த மீனா பழங்குடியினர் சமூகத்தினரை மேற்கோள் காட்டி, அதே மாநிலத்திலுள்ள குஜ்ஜார் சமூக மக்கள் தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்றுவரை நம்மூரில் அனைத்துவிதமான தகுதிகள் இருந்தும், விளிம்பு நிலையிலுள்ள நரிக்குறவர்களும், குருவிக்காரர்களும் 1981-ல் இருந்து பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கப் போராடி வருகின்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. தங்களுடைய நிலத்தைப் பாதுகாக்கவும் பண்பாட்டைக் காக்கவும் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் படுகர்கள். பொருளாதார முன்னேற்றம் என விதிமுறை யைப் பின்பற்றினால் மற்றைய மாநிலங்களி லுள்ள வளர்ந்த பழங்குடியின மக்களைக் கை காட்டுகின்றனர். என்னைப் பொறுத்த வரை "கலைஞர் சிறப்பு உள் இட ஒதுக்கீடு' மூலம் அருந்ததியர் சமூகத்தைக் கொண்டு வந்ததைப்போல், இவர்களுக்கும் செய்தால் பிரச்சனை தீரும்'' என்கிறார்.

oo

இது இப்படியிருக்க, "தமிழகத்தில் 1976-ஆம் ஆண்டுவரை பட்டியல் பழங்குடி யினராக இருந்த "வேட்டையாடி உணவு சேகரிக்கும்' புலையர் இன மக்கள் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தில், குறிப்பாக ஆனைமலை, பழனிமலைத் தொடரில் அடர்ந்த காடுகளில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, நிலவுடைமை இன்றி மிகவும் வறிய நிலையிலும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். அரசின் (Clerical error) தவறுதலால் பழங்குடியினர் பட்டிய லில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் சாதியாக வகைப்படுத்தப் பட்டுள்ளார்கள். பழங்குடியினருக்கான 1% இட ஒதுக்கீடே முழுமையாக இதுவரை கிடைக்காத சூழலில், படுகர் இன மக்களின் பழங்குடி அந்தஸ்து நிலை தொடர்பாக வனத்துறை அமைச்சரின் கூற்று மிகச்சரியானது'' என்கிறார் பழங்குடி செயற்பாட்டாளரான தன்ராஜ்.

பழங்குடிகளை பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்க அரசியல் சாசனம் மற்றும் அரசின் வழிகாட்டுதல் மானுடவியல் ஆய்வுகள் வழிவகை புரியாது.