மனிதர்களுக்குள் மட்டும் பொறாமை, போட்டி இருக்க முடியுமா? சத்குருக்களுக்கு நடுவிலும் இந்த போட்டி, பொறாமை அதன் உச்சமாக ஒருவரைக் கொன்றழித்து காலிசெய்ய நினைக்கும் கொடூர எண்ணம் இருக்கமுடியுமென சொல்லவருகிறார் டேனியல். இந்த டேனியல் வேறு யாருமில்லை, ஈஷா யோக மையத்தின் சீடர்களில் ஒருவர். இவர் சத்குரு மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடேங்கப்பா ரகம்!
2010-வாக்கில் ஒருநாள் டேனியலுடன் மனம் திறந்த ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார் ஜக்கி.
"டேனியல், எனக்காக கொலை செய்யக்கூடிய ஆட்கள் யாரையாவது தெரியுமா?''. டேனியல் திகைப்பாகப் பார்க்க, “"நித்தியானந்தா மனித குலத்துக்கே அழிவு ஏற்படுத்தும் தொற்று. நீ கற்பனை செய்ய முடிவதைவிட அதிகமான தீங்கை அவன் ஆன்மிகத்துக்கு ஏற்படுத்துகிறான். உண்மையான குரு இருக்கையில், போலி குரு நடமாடுவது குற்றத்திலே பெரிய குற்றம். அவனை ஒழித்தாகவேண்டும்''’ என்றார் ஜக்கி.
"நீங்கள் ஏன் அவன்மீது உங்கள் சக்தியைப் பயன்படுத்தக்கூடாது''’டேனியல் கேட்டான்.
"அதன் கர்ம பலன்கள் மிக மோசமாக இருக்கும். நீ எனக்காக கொலை செய்யவேண்டாம். ஆனால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் அல்லவா?''’அவர் டேனியலைக் கேட்டார்.
"செய்யலாம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்''’டேனியல் கேட்டான்.
"சங்கம் எனக்காக ஒரு துப்பாக்கியை ஏற்பாடு செய்வதாகக் கூறினான்''’சத்குரு டேனியலிடம் கூறினார். "அவன் மறுபடி கண்ணில் தட்டுப்படவே இல்லை. அவன் எப்படி அப்படிச் செய்யலாம், அவனுக்காக ஒரு பெண் காத்திருக்க, அவன் எப்படி வராமலே போகலாம்? சங்கம் கடைசிவரை ஆயுதத்தை ஏற்பாடு செய்யவே இல்லை''’அவனைக் குறித்த ஏமாற்றத்தை டேனியலிடம் வெளிப்படுத்தினார்.
“அதேவேளை, "ஒலிவியாவும் மிராவும் நித்தியானந்தாவைக் கொல்லப்போகிறார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது''’என்று ஆச்சரியப்பட்டான் டேனியல். மிராவும் ஒலிவியா வும் சத்குருவின் ஆன்மிக வசியத்தில் வீழ்ந்த வர்கள் என்பதை டேனியல் புரிந்துகொள்கிறான்.
ஒரு கட்டத்தில் சத்குரு ஒலிவியா, லியா என்ற பெண்களிடம், ஒரு சிலையில் துப்பாக்கி யை மறைத்துவைத்து இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பிவைக்கச் சொன்னார். அந்தத் துப்பாக்கி லியாவின் தந்தையின் சேகரிப்பில் இருந்தது. சத்குரு அதை தனது சகோதரருக்கு அனுப்பி னார், ஆனால் அதில் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருப்பதைச் சொல்லவில்லை. காவல்துறை சிலையை ஸ்கேன் செய்து ஆயுதத்தைக் கைப்பற்றிவிட்டது. சிலையை டெலிவரி செய்யும்போது சகோதரர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். டேனியலுக்குத் தெரிந்தவரை நித்தியா னந்தா ஒருபோதும் சத்குருவைக் கொல்லத் திட்ட மிடவில்லை. “சத்குரு தன்னைச் சுற்றி எந்த ஒரு போட்டியும் இருப்பதை விரும்பவில்லை” என்கிறார்.
சத்குருவின் தீவிர சீடரான சீன் என்பவரும் நித்தியானந்தாவைக் கொல்வதற்காகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். "சத்குரு என்னை அழைத்து என்னு டன் உணவருந்தினார். அப்போது இந்த புதிய குருவைப் பற்றிய கதைகளைக் கூறி அவரைக் கொல்லவிரும்புவதாகக் கூறினார். தன்னை நித்தியானந்தா கொல்லும்முன் நான் இந்த மனி தரைக் கொல்வேனா என என்னிடம் கேட்டார்''’என டேனியலிடம் சீன் சொல்லியிருக்கிறார்.
சீன் அதிர்ச்சியடைந்து, "நீங்கள் நடத்திய கருத்தரங்குகளில் விரல்சொடுக்கும் நேரத்தில் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவரைக் கொல்லக்கூடிய மெட்டாபிஸிக்கல் சக்தி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். என் உதவியைக் கேட்பதற்குப் பதில் நீங்கள் ஏன் அப்படி பண்ணக்கூடாது?''’என சத்குருவைக் கேட்க, சத்குரு உரக்கச் சிரிக்க ஆரம்பித்தார். "நான் அந்த கர்மாவைச் சுமக்க விரும்பவில்லை.'' ”
“ஆனால் யாரோ ஒரு நபரைக் கொன்று அந்த கர்மாவை நான் சுமக்க விரும்புகிறீர்கள். அது உங்களுக்குச் சம்மதம்தானா?” இப்படி மனதில் நினைத்துக்கொண்டான் சீன். அவரிடம் கேட்க வில்லை. ஆனால் சீன் சத்குருவிடம் அவர் கொல்ல விரும்பிய குருவின் பெயரைக் கேட்கவில்லை. அவர் நித்தியானந்தா.
"என்னால் யாரையும் கொல்ல முடியாது''’ என்றிருக்கிறான் சீன். “
"அப்படி முடிகிற நபர் யாரையாவது தெரியுமா?''’சத்குரு விடாமல் கேட்டிருக்கிறார்.
"இல்லை''’என்றிருக்கிறார்’சீன்.
பின்பும் சத்குரு, "உன்னால் எனக்காக அமெரிக் காவிலிருந்து இந்தியாவுக்கு துப்பாக்கியை வரவழைத்துத் தரமுடியுமா?''’எனக் கேட்டிருக் கிறார்.
"இல்லை, அதைப்பற்றி யோசனை ஒன்றும் இல்லை''’என சீன் நழுவியிருக்கிறார்.
சில வாரங்களுக்குப் பின் சத்குருவின் வலதுகரம் போன்ற நபர் சீனிடம் துப்பாக்கி பற்றி கேட்டிருக்கிறார், "உன்னால் துப்பாக்கியை சத்குருவுக்காக பெற்றுத் தரமுடியுமா?''’
அப்போதும் சீன், "“இல்லை, என்னால் அது இயலாது'' என்றிருக்கிறார்.’ சில வாரங்களுக்குப் பின் அதே நபர் சீனிடம் துப்பாக்கி பற்றிய கேள்வி யை மீண்டும் கேட்க, அத்தோடு சத்குருவையும் அவரது ஆட்களையும் சீன் தலைமுழுகியிருக்கிறார். சத்குரு 2010-ல் டென்னசி நகரில் யோகா ரீட்ரீட் நடத்திக்கொண்டிருந்தபோது, மிராவும் ஒலிவியா வும் ஹோட்டலில் காத்திருக்க, துப்பாக்கி ஏற்பாடு செய்வதாகக் கூறிய பாண்டே இறந்துபோயிருந் தான். அவனுக்கு 46 வயது. இடையில் என்ன மர்மங்கள் நடந்தது என்பது தெளிவாக இல்லை.
பாண்டேவின் மரணம் சத்குருவின் டென் னசி வளாகத்திலுள்ள ஈஷா யோக மையத்தில் நடந்த பல்வேறு சந்தேக மரணங்களில் ஒன்று.
பாலியல் விவகாரங்களிலும் சத்குரு சளைத்தவர் இல்லை என்பதை சில பெண்கள் தரும் விவரங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ரெபேக்கா என்னும் சத்குருவின் முன்னாள் சிஷ்யை, தன்னை சத்குரு வஞ்சகமாக சீரழித்ததாகக் கூறுகிறார். புனித நடைமுறை என்ற வேடத்தில், “உடலென்பது வெறுமனே ஒரு சாதனம் மட்டுமே” என்று கூறி எனது மேலாடையைக் களையச் சொல்லி எனது இடுப்பைச் சுற்றி புனிதக் கயிறு ஒன்றை அணியச் சொன்னார். இது உடலினுள் சக்தி பாய்ந்துசெல்ல உதவும் என்றார். ஆற்றல் தரும் சடங்கின் ஒரு பகுதியாக, ரெபேக்கா சத்குருவின் முன் அரைநிர்வாணமாக இருக்க வைக்கப்பட்டாள். இந்தக் கயிறு அவருடன் ரெபேக்காவை இணைப்பதற்கு உதவுகிறது என காரணம் சொன்னார். "அவர் ஒரு வேட்டைவிலங்கு. ரெபேக்கா டேனியலிடம் தெரிவித்தாள்.'“அவர் பெண்களை வசப்படுத்துவதற்கென்றே சில வழிமுறைகளை வைத்திருக் கிறார். உங்களால் ஆதாயம் என்றாலோ, அல்லது உங்க ளுக்கு அதிகாரமிக்க நபர் களுடன் தொடர்பிருக்கிறது என்றாலோ, அல்லது உங்கள்மீது ஆர்வமிருந் தாலோ, இதுபோன்ற அனைத்துப் பொறிகளையும் உங்களுக்கு வைப்பார் சத்குரு.
ஒரு பெண் மீது அவருக்கு ஆர்வம் வந்துவிட் டால், குண்டலினியை உயர்த்து வதாகச் சொல்லி அவருடன் தனிப்பட்ட அமர்வுக்கு ஏற்பாடுசெய்வார். பின் அவர் காலையோ, முதுகையோ மசாஜ் செய்யச் சொல்வார், இல்லை அவருக்கு ஒரு குளியல் நடத்திவிடச் சொல்வார். இந்த நடைமுறைகளை பலமுறை திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறேன். என்னையே எடுத்துக்கொண் டால் அவர்மீது நம்பகமும் பிணைப்பும் ஏற்பட்ட தும் பல்வேறு தாந்த்ரீக நடைமுறைகளைச் செய்கிறோம் என்ற பெயரில் சுரண்டப்பட்டேன். வாய்வழிப் புணர்ச்சி உட்பட அதில் அடக்கம். இவையெல்லாம் விழிப்புணர்வை மேம்படுத்த, ஏற்புத் தன்மையை அதிகரிக்க உதவும் என்று சொல்லி எனக்கு நிகழ்த்தப்பட்டது.
கோவிலை நிர்வாகம் செய்யும் ரகசியப் பெண்கள் குழு இருப்பதாகவும், இந்தக் குழு கோவிலில் வைத்து சுயஇன்பம் செய்ய உத்தரவிடப்பட்டதாகவும் கரிஷ்மா டேனியலிடம் தெரிவித்திருக்கிறாள். “அது பெண் தெய்வத்துக்காக மேற்கொள்ளப்படும் அதிகாலை சடங்கு. ஒலிவியாதான் அவர்களுக்கு அதை எப்படிச் செய்யவேண்டுமென கற்பித்தாள். “அந்தச் சடங்கின்போது நான் உங்களுடன் இருப்பேன். சுய இன்பத்தில் நீங்கள் பயன்படுத்துவது உங்கள் விரல் அல்ல,’சத்குரு என அவர்களிடம் தெரிவிப்பார். அவர்கள் பரவசத்தை எட்டியதும், விரல்களில் இருக்கும் காமரசத்தை லிங்க பைரவி சிலை மீது பூசவேண்டும்’என கரிஷ்மா தெரிவித்தாள்.
டென்னசி ஆசிரமத்திலுள்ள ஒரு அறையில் சத்குருவுடன் இருந்திருக்கிறார் டயானா. “அவர்கள் ஒரு குவளையில் ஏதோ ஒன்றைத் தந்து பருகச் சொன்னார்கள். பின் குளித்து சிவப்பு நிற சேலை அணியச் சொன்னார்கள். பின் நான் நினைவிழந்து போனேன். எனக்கு விழிப்பு வந்தபோது அடுத்த அறையிலுள்ள படுக்கையில் நான் இருந்தேன். நினைவிழந்திருந்தபோது நான் வன்புணரப் பட்டிருக்கவேண்டும்”என்றாள். அவள் சொன்னது மற்றொரு பெண் சொன்னதுடன் ஒத்துப்போகிறது. அவளும் குளிக்கவும், சிவப்புச் சேலை அணியவும் சொல்லப்பட்டிருக்கிறாள். பின் அவள் சத்குருவுக்கு நெருக்கமாக நிர்வாணமாக நிற்கச் சொல்லப் பட்டிருக்கிறாள். ஒருகட்டத்தில் ஜக்கி அவளை அணைத்துக்கொண்டார்.
அதேபோல அனாதி நிகழ்வின்போது, பெண்கள் அரைநிர்வாணமாக நிற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டார்கள் என மூன்று பெண்கள் கூறினர். அந்த அறை மங்கலான வெளிச்சத்தில் இருக்கும். அந்த அறையில் இருப்பவர்கள் சத்குருவால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சத்குருவுக்கு விசுவாசமான நபர்கள் மட்டுமே இருப்பார்கள்.
இப்படி கொலை முயற்சி, பாலியல் சுரண்டல்கள் என நீள்கிறது ஜக்கியின் தகிடு தத்தங்கள். ஈஷாவிலிருந்து பாதிக்கப்பட்ட சீடர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தால், உலகின் அத்தனை நாடுகளிலிருந்தும் ஜக்கியைக் குற்றம்சாட்டி விரல்கள் நீளலாம். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நன்றி: http:\\www.gurumag.com "இன்சைடு சத்குரு'ஸ் கல்ட் எம்பைர், கட்டுரையின் துணையுடன் எழுதப்பட்டது.
-சூர்யன்