டுங்குளிரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று வாரங்களுக்கு மேல் கொளுந்துவிட்டு எரிகிறது விவசாயிகளின் போராட்ட நெருப்பு

ff

டிசம்பர் 12-ஆம் தேதி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரேதசத்தில் பல பகுதிகளில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுமதித்தனர் போராட்டக்காரர்கள். அதேநேரத்தில், பா.ஜ.க. ஆட்சிசெய்யும் அரியானாவிலிருந்து அரசு ஆதரவு விவசாய சங்கங்கள் வேளாண் அமைச்சர் தோமரைச் சந்தித்து வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்யக்கூடாது. ரத்து செய்தால் நாங்கள் போராடுவோம் என தெரிவித்தனர்.

டிசம்பர் 14-ஆம் தேதி மத்திய அரசின் பாராமுகத்தைக் கண்டித்து ஒரு நாள் அடை யாள உண்ணாவிரதம் அறிவித்தனர் விவசாயி கள். இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருந்ததுடன், சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து, தான் விவசாயிகள் பக்கம் என காட்டினார்.

Advertisment

பஞ்சாப் டி.ஐ.ஜி. லக்மிந்தர், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. “நான் முதலில் விவசாயி. அப்புறம்தான் போலீஸ் அதிகாரி’என்று கூறியதுடன் விரைவில் போராட்டத்தில் பங்கேற்பேன் எனவும் அறிவித்தார். போராட்டத்தைத் தீவிரப்படுத்த, விவசாயக் கடன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட விவசாயி களின் மனைவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவ தாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போராடுவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என உறுதிப்படுத்தியது. போராட்டம் முடிவுக்கு வரும்வரை வேளாண் சட்டங் களை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாதென மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியது.

அரியானா மாநிலம் குருத்வாராவைச் சேர்ந்த சீக்கிய குரு பாபா ராம்சிங் டெல்லி போராட்டக் களத்திற்கு வந்து, “""உரிமைக்காகப் போராடும் விவசாயிகளின் வலியை நான் உணர்கிறேன். அவர்களுக்கு அரசு அநீதி இழைக்கிறது''’எனக் கூறி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

Advertisment

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் தரகர்கள் என கொச்சைப்படுத்தி விமர்சித்தார். மாறாக, டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, வேலைநிறுத்தப் போராட்டத்தில் தி.மு.க. தலைமையில் தமிழக எதிர்க் கட்சிகள் கலந்துகொண்டன. மத்திய அரசு இறங்கிவராத நிலையில், அடுத்தகட்டமாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது.

ff

காவல்துறை போராட்டத்துக்கு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது. ""மத்திய அரசு பேச்சு வார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்துசெய்வதுதான் ஒரே தீர்வு'' என உண்ணாவிரத மேடையில் ஸ்டாலின் பேசினார். விவசாயிகளுக்காக மாநில அரசு போடும் எந்த வழக்கையும் சந்திக்கத் தயார் எனவும் அவர் கூறினார்.

எடப்பாடி தன்னை விவசாயி என்று கூறிக்கொள்வதுடன், ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றித் தெரியுமா என விமர்சித்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, ""சட்டமன்றத்தில் நங்கவரம் விவசாயிகளுக்காக உரிமைக் குரல் கொடுத்த கலைஞரின் பிள்ளைடா நான்'' என்று ஆவேசமாக சொன்னவர், இலவச மின்சாரம், விவசாயக் கடன் ரத்து என தி.மு.க. ஆட்சி யில் விவசாயிகளுக்கு செய்த வற்றையும் பட்டியலிட்டார்.

போராட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ம.ம.க., கொ.ம.தே.க. கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காவல்துறை, இப்போராட்டத்தில் கலந்துகொண்ட 1900 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதேபோல தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் சின்னமலையிலிருந்து விவசாயிகள் திரளாகக் கிளம்பிவந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். 300 பேர் கைதாகினர். வணிகர் சங்கங்களின் சார்பில் டிசம்பர் 22-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென தமிழக வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

formers

டிசம்பர் 14-ஆம் தேதி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய- மாநில அரசு அலுவலங்கள் முன்பு பல்வேறு கட்சியினரும் விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.

நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைவதையடுத்து, ""விவசாயிகள் முன்பாக தலை வணங்கி, கைகூப்பி வேண்டுகிறேன். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விவசாயிகளுடன் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைத் திட்டம் தொடரும். வதந்திகளை நம்பி ஏமாறவேண்டாம்'' என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

போராட்டக் குழுவினரோ, திருத்தங்கள் அல்ல… வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்படுவதே எங்கள் முதன்மை நோக்கம் எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்துவருகிறது. போராட்டத்தின் நாட்களைப் போலவே, போராடுபவர்கள் தரப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து 22-ஐ எட்டியது.

-க.சுப்பிரமணியன்

படங்கள்: அசோக், குமரேஷ்