டலூர் மாநகராட்சியில் அடைத்துக் கொண்ட பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய, அவற்றில் தனியார் ஒப்பந்தத் தொழி லாளர்களை இறக்கியது சர்ச்சையாக உருவெடுத் துள்ளது.

கடலூர் மாநகராட்சி 45 வார்டுகளைக் கொண்டது. இந்த வார்டுகளிலுள்ள பாதாளச் சாக்கடைகளில் சரியான முறையில் அடைப்பு களைச் சரிசெய்யாததால் சாலைகளில் சாக்கடைகள் வழிந்தோடும் அவலநிலை ஏற்பட்டது. இதனைச் சரி செய்யும் பணி தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 4-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் பணியில் மனிதனை சாக்கடையில் இறங்கச் செய்துள்ளனர்.

cc

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், இந்தக் கொடுமையை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங் களில் வைரலாக்கினர். இதனை கடலூரிலுள்ள செய்தியாளர்கள், நாளிதழ்கள், காட்சி ஊடகங்களில் பதிவு செய்ய, தமிழக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதவன் கூறுகையில், “"தமிழகத்தில் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியா வில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 400-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சாக்கடை சுத்தம் செய்யும்போதும், செப்டிக் டேங்க் பணிகளிலும் இறந்துள்ளனர். இந்நிலையில் கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை அடைப்பை அகற்ற மனிதர்களை இறக்கிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதாளச் சாக்கடை சுத்தம் செய் யும் பணியில் மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது. இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவைப் பின்பற்றாத கடலூர் மாநகராட்சி அதிகாரிகளின் போக்கை சி.பி.எம். வன்மையாகக் கண்டிக்கிறது. இதில் ஈடுபடுத்தப் பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக மருத் துவப் பரிசோதனையும் செய்யவேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறிய மாநகராட்சி அதிகாரி கள் மீது உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்கவேண்டும். மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு போதிய நவீன உபகரணங்கள் வழங்கி பணிப் பாதுகாப் பை உறுதி செய்யவேண்டும். மாநகராட்சி யின் மற்ற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களைப் பயன்படுத்த வில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்''’என்றார்.

குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் மருதவாணன் கூறுகையில், “"கடலூரில் பாதாளச் சாக்கடைகள் அனைத் துத் தெருக்களிலும் வழிந்தோடுகிறது. சரியான பராமரிப்பு இல்லை. மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்பு கள் பாதாளச் சாக்கடை, மலக்குழியில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தடைசெய்த நிலையிலும் இதுபோன்று நடைபெறுவது கண்டனத் திற்குரியது''’என்றார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோரும், சமூக ஆர்வலர்களும் மலக்குழியில் இறங்கி உயிர் பலியாகியிருந்தால் அரசுக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கும் என கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிருபர் ஒருவர் வீட்டின்முன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கூடிநின்று செய்தியாளரை மிரட்டும் தொனியில் "ஏன் இந்த செய்தியை போட்டீர்கள்?' என கேட்டுள்ளனர். இதன் பின்னணி யில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

செய்தியாளர் வீட்டின்முன் தொழிலாளர்கள் நிற்கும் படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. மாவட்டம் முழுவதுமுள்ள செய்தி யாளர்கள் இந்த சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்து சமூக வலைத்தளத் தில் பதிவு செய்தனர். 20-க்கும் மேற்பட்ட கடலூர் செய்தி யாளர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமை சந்தித்து இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.

மாநகராட்சி ஆணையர் அனு கூறுகையில், “"பாதா ளச் சாக்கடையில் மனிதரை இறக்கிய ஒப்பந்த நிறுவனத் தின் பணி ஆணையை ரத்துசெய்துவிட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாது''’என்று உறுதியளித்தார். மாநகராட்சி மேயர் சுந்தரியின் கணவர் ராஜா துண்டுதலின் பெயரில்தான், செய்தியாளர் வீட்டுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்றதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுகுறித்து விவரமறிய ராஜாவை இருமுறை தொடர்பு கொண்டோம். அவரோ "தீமிதி திருவிழாவில் உள்ளேன். பின்னர் பேசுகிறேன்' என்றார். அடுத்த நாள் பேசும்போது, கூட்டத்தில் உள்ளதாகக் கூறி போனைத் துண்டித்துவிட்டார்.

சாராய மரணங்களைப் போல, மலக்குழி மரணமும் சர்ச்சையானால்தான் அரசு அவற்றில் கவனம் செலுத்துமா?

-அ.காளிதாஸ்