"ஹலோ தலைவரே, பா.ஜ.க., சாதிக்கலவர அபாயத்தை நோக்கி அழைத்துச் செல்ல முயல்கிறது.''”

"ஆமாம்பா, சாதி வெறி எல்லோருக்கும் வேண்டும்னு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உபதேசிக்க ஆரம்பிச்சிட்டாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, சாதித் தீண்டாமையை ஒழித்து, சாதி வெறியும் மத வெறியும் தமிழ் மண்ணில் வேர் விடாதபடி செய்தவர் தந்தை பெரியார். அதனால் இது பெரியார் மண் என்று முற்போக்காளர்கள் நெஞ்சு நிமிர்த்துகிறார்கள். இதனால் பெரியார் மீது பெரும் கசப்பு கொண்டிருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பெரியாரியம் இங்கிருந்து ஒழிய வேண்டுமானால் முதலில் மக்களிடம் மீண்டும் சாதி உணர்வு தோன்றவேண்டும் என்று பேசத் தொடங்கியதோடு, இனி கட்சியினர் எல்லோரும் தங்கள் தங்கள் பெயரோடு தங்கள் சாதிப் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்த ஆரம்பித்துவிட்டார். இதையறிந்த சமூக ஆர்வலர்கள், அண்ணாமலையின் இந்த சாதிவெறிக் கொள்கை, சாதிக் கலவரங்களை உருவாக் கப்போகிறது என்று எச்சரிக்கிறார்கள்.''”

’"இந்த அண்ணாமலையும் கட்சிக்குள்ளேயே சாதி துவேசத்தைக் காட்ட ஆரம்பிச்சிட்டாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, முன்னாள் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான முருகன் மீது வெறுப்பைத் தொடர்ந்து காட்டறாராம். அண்ணாமலையை மாநிலத் தலைவரா நியமிச்சதில் இருந்தே அவர் இப்படி நடந்துகொள்வதோடு, முருகனின் ஆதரவாளர்களையும் புறக்கணிக்கிறாராம். அவர்களுக்குக் கட்சிப் பதவிகளையும் கூட அண்ணாமலை கொடுப்பதில்லையாம். தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் அவர் முருகனை வேண்டாவெறுப்பாகத்தான் நடத்துகிறாராம். இதனால் அவமானம் அடைந்த முருகன், பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் வருவதையே குறைத்துக் கொண்டாராம். இது முருகன் ஆதரவாளர்களைக் கொதிப்படைய வச்சிருக்கு. இது தொடர் பான புகார்களை டெல்லிக்கு அனுப்பி வச்சிக்கிட்டு இருக்குது முருகன் தரப்பு.''”

"தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த விவாதம் அ.தி.மு.க.வில் நடக்குதே?''”

"அ.தி.மு.க. மாஜி அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கான பணிகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் வேகமெடுக்கின்றன. அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி அதிகரித்து வரும் சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை, தங்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைக ளிலும் கவனம் செலுத்துகிறார் எடப்பாடி. அ.தி.மு.க.வின் 10 ஆண்டு காலத்தில், அமைச்சர்களாக இருந்த பலர் மீது வழக்கு போடப்பட்டது. அவர்களில் சிலர் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீதான ஊழல் ரெக்கார்டுகள் எடப்பாடியிடம் இருக்கிறதாம். அதனால், அதை வைத்து அந்த தி.மு.க. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாம் வற்புறுத்துவோம் என மாஜி மந்திரிகளான வேலுமணி, வீரமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் எடப்பாடியிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். எடப்பாடியோ, "நான் கொடநாடு சிக்கல்ல இருக்கேன். அதனால் இப்ப இருக்கும் மந்திரிகளை டச் பண்ண இது சரியான நேரம் இல்லை'ன்னு அவர்களை ஆஃப் செய்திருக்கிறாராம்.''”

Advertisment

"தி.மு.க.வின் ஒ.செ.க்கள் தேர்தலில் உள்ளடி சர்ச்சைகள் தொடருதே?''”

"சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும். பெரியளவில் பிரச்சினைகள் வராமல் பார்த்துக்குங்கன்னு தலைமையிலிருந்து பொறுப் பாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்காங்க. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரான அமைச்சர் தா.மோ. அன்பரசன், தன்னோட மாவட்டத்திற்கு உட்பட்ட 10 ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்வை குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடத்தினாரு. அப்ப திருப்போரூர் ஒன்றியத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முன்னாள் ஒ.செ. ரோஸ் நாகராஜனை சரமாரியா கத் தாக்கிட்டாங்க. அமைச்சர் மற்றும் போலீஸ் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததால பரபரப்பாயிடிச்சி. சட்டை கிழிந்து ரத்தம் சொட்ட விரட்டப்பட்டார் ரோஸ் நாகராஜன்.''”

"ஆமாம்பா, இந்த விவகாரம் போலீஸ்வரை போனதே?''”

"போலீசில் புகார் கொடுத்தும், மேற்கொண்டு நடவடிக்கை இல்லைன்னு ரோஸ் தரப்பு குமுறுது. அதேபோல, திருக்கழுக்குன்ற ஒன்றியத்துக்கு வேட்புமனுவைக் கேட்ட கட்சிப்புள்ளியான செல்வக்குமாருக்கு மனுவையே தர மறுத்துட்டாங் களாம். இத்தனைக்கும் அவர் தனக்கு ஆதரவான 10 கிளைக்கழகச் செயலாளர்களையும் அழைச் சிக்கிட்டுப் போயிருக்கார். அவரிடம் அமைச்சர் அன்பரசன், இப்ப பதவியில் இருப்பவர்களையே கண்டினியூ பண்ணச்சொல்லுங்க. தேர்தல் வேண்டாம்னு பொதுச்செயலாளர் துரைமுருகன் சொல்லிட்டார்னு மேலிட அட்வைஸ் பற்றிச் சொல்லியிருக்காரு. ஆனா, கட்சியில் இருப்பவங் களுக்கு ஒரு இலக்கு இருக்கும்ல.''”

"அதுதானே அரசியல்!''”

"அதனாலதாங்க மோதல்... திருநீர்மலைக்காக போட்டியிட வந்த கட்சிப் பிரமுகர்களுக்கும் சான்ஸ் கிடைக்கலை. இதையறிந்து தாம்பரம் எம்.எல்.ஏ. ராஜா அங்கே வந்தப்ப அவரையும் உள்ளே விடலை. போலீஸ் உதவி ஆணையரிடம் அவர் பேச, அதுக்கப்புறம்தான் ராஜா உள்ளே போயிருக்காரு. அமைச்சர் தரப்புக்கு எதிரா அறிவாலயத்துக்குப் புகார் போக, எம்.எல்.ஏ. மேலேயும் எதிர்த்தரப்பு புகார் அனுப்பியிருக்கு. தலைமை என்ன செய்யப் போகுதுன்னு கட்சிக்காரர்கள் வெயிட்டிங்.''

"ம்..''”

"சென்னை பெருநகர மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் மேயர் ப்ரியா தலைமையில் 28-ஆம் தேதி நடந்தது. 100 தீர்மானங் களை, எவ்வித விவாதங்களுமின்றி ஏக் தம்மில் நிறைவேற்றியிருக் கிறார் மேயர் ப்ரியா. இது குறித்து தி.மு.க. கவுன்சிலர்களிடம் கூட அவர் முன்கூட்டியே விவாதிக்கலையாம். எல்லாக் கட்சி கவுன்சிலர்களும் அதிர்ந்து போயிட்டாங்களாம். விவாதங்களின்றி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதென்றால் அதில் வில்லங்கமான தீர்மானங்களும் இருக்கலாம்னு சந்தேகப்படும் அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் அந்த 100 தீர்மானங்களையும் அதன் பின்னணியையும் ஆராய்ச்சி செய்றாங்களாம்.''”

"தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எப்படி இருக்காரு?''”

vijikanth

"விஜயகாந்த் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்த ஓட்டம் இல்லாததால் பாதிக்கப்பட்ட அவரது வலது காலின் 3 விரல்கள் நீக்கப்பட்டன. மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பிவிட்டார். எனினும் அவர் சோர்வாக இருந்தாராம். ஓரிரு நாள் ஓய்விலேயே முன்புபோல விஜயகாந்த் தெம்பாகிவிட்டாராம். இந்த நிலையில்தான் சில சமூக ஊடகங்களில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகள் பரப்பப்பட்டன. இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் அவர் ரசிகர்கள் மத்தியிலும் பதட்டம் அதிகரிச்சதால் அந்தக் கட்சி, விஜயகாந்த் பற்றி விபரீதமாக வந்த செய்திகள் எல்லாம் வதந்திகள்தான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.''

"நித்தியானந்தாவின் சமாதி நிலை பற்றியும் ஏதேதோ செய்திகள் மறுபடியும் கிளம்புதே?''”

rr

"நித்தியானந்தா பெயரில் அவருடைய சமூக ஊடகப் பதிவுகள் புதுசா கிளம்ப ஆரம்பிச்சிருக்கு. அதில் நித்தியானந்தா, ’நான் சமாதி நிலை கொண்டிருப்பது உலக நலனுக்கானது. அதேபோல் நான் இப்போது எலக்ட்ரோ மேக்னட் அலைகள் மூலம் பக்தர்களைத் தொடர்புகொண்டு பேசுகிறேன். என் பவரையும், என் அசாத்திய சக்தியையும் இதன் மூலம் காட்டத் தொடங்கியிருக்கிறேன். அதேபோல் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றோடு என் கைலாசா நாடு சில நல்லிணக்க உறவுகளை மேற்கொண்டிருக்கிறது’ என்றெல்லாம் சொல்வதுபோல் பதிவுகள் வெளிவருகின்றன. இது குறித்து நாம் அவர்கள் தரப்பிலேயே ரகசியமாக விசா ரித்தபோது, அவரை கைலாசாவில் இருக்கும் பக்தர்களா லேயே பார்க்க முடியவில்லை. ஏப்ரல் 28-க்குப் பின் அவருடைய படம் எதுவும் வெளியே வரவில்லை. அவர் சமாதி நிலை என்று சொல்லப்படும் கோமாவில் இருப்பதாகவே தெரிகிறது என்று அதிரவைக்கிறார்கள்.''

rr

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். கொடநாடு விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, ஜெ.வின் போயஸ் கார்டனின் ஆஸ்தான டிரைவரான கண்ணனையும் வரவழைத்து அதிரடி விசாரணைகளை நடத்தியிருக்கிறார், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர். ஜெ., கடைசியாக அப்பல்லோவுக்கு வந்தபோதும் கண்ணன்தான் காரை ஓட்டியிருக் கிறார். கொடநாடு கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களிடம், வழியில் யாரிடமாவது சிக்கினால் கண்ணனின் பெயரைச் சொல்லுங் கள் என்று சொல்லப்பட்டதாம். முக் கிய புள்ளிகளுக்கு அந்த சம்பவத் தில் இருந்த தொடர்புகள் குறித்தும் அவரிடம் துருவப்படுகிறதாம். அதேபோல் கனகராஜிடம் ஏகத்துக் கும் பணம் புரண்டது குறித்தும், அவர் தன் அண்ணன் தனபால் மூலம் அங்குள்ள கவுன்சிலர் பன்னீர் செல்வத்திடம் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கினார் என்றும், அவரிடம் கோடிக்கணக்கில் கொடுத்து வைத்திருந்தார் என்றும், கொடநாடு சம்பவத்தின் போது, யாரிடம் இருந்து பணம் கைமாறியது என்பது குறித்தும் விசாரணை டீமுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கிறது. இவை எல்லாம் எடப்பாடி தரப்பை மேலும் திகிலடைய வைத்திருக் கிறதாம்.''