புதுக்கோட்டை மாவட்ட பகுதி யிலுள்ள ஓர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த ஒரு மாணவிக்கு கடந்த வாரம் 15ஆம் தேதி, வீட்டிலிருந்தபோது திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட... மாணவியின் அம்மா 108 ஆம்பு லன்ஸை வரவழைத்து, அரசு மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே அம் மாணவிக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அம்மாணவி கர்ப்பமாகி, 30 வாரங்களுக்குள் குறைப்பிரசவமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனின்றி 17ஆம் தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் காட்டுத்தீயாகப் பரவ, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையிலிருந்த மாணவியிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர். "எங்க அம்மாவிடம் சுய உதவிக்குழு வசூலுக்கு வந்த ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த, ஒரு குழந்தைக்கு தந்தையான நாகராஜன் மகன் சிலம்பரசன், ஆசை வார்த்தைகள் கூறி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக வாக்குமூலம் கொடுக்க... அந்த வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், போக்சோ உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னவரை, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, பள்ளி மாணவிக்கு பிறந்து இறந்த குழந்தையின் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு, டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பையும், பெற்றோர்களுக்கு பதைபதைப்பையும் ஏற்படுத்திய நிலையில், அதே அரசுப் பள்ளியில் +1 படித்த மாணவி ஒருவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோர்களால் கண்டறியப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவியான அச் சிறுமிக்கு சில நாட்களாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சிறுமியை அவரது தாயார், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரி சோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் தாயாரும், குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந் துள்ளனர்.
அதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகாரளித்துள் ளார். அந்த புகாரில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் செப்டிக் டேங்க் பிளம்பிங் வேலை செய்ய வந்த அறந் தாங்கியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், பிளம்பிங் வேலை செய்யும்போது நட்பாகப் பழகி, என்னை தனிமையில் சந்தித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக அப்புகாரில் தெரிவித் துள்ளார். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
அரசுப் பள்ளியில் அடுத்தடுத்து 2 மாணவிகள் கர்ப்பமானது அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து, அரசும், பெற்றோர்களும், மாணவ, மாணவிகளுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
கொரோனா காலத்திற்கு பிறகு மாணவிகளிடம் செல் போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாலும் இப்படியான சம்பவங்கள் நடப்பதாகக் கூறுகிறார்கள். கடந்த சில மாதங்களில் இப்படியான புகார்களில் பலரும் போக்சோவில் சிறையிலுள்ளனர். புதுக்கோட்டையிலுள்ள கிராமங்கள் சிலவற்றில் சமீபத்தில் பதிவாகியுள்ள போக்சோ வழக்குகளில் சில...
தந்தை வெளிநாட்டிற்கு சென்று விட்ட நிலையில், வீட்டிலிருந்த டிராக்டருக்கு ஓட்டுநராகப் பணி யாற்றியவர், பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்காகி, போக்சோவில் சிறையிலிருக்கிறார். அதேபோல, அம்மாவுடன் வசித்த ஒரு பள்ளிச் சிறுமியை, அவர்களது உறவுக்கார இளைஞனே கடத்திக்கொண்டு போய் பல நாட்களுக்குப் பிறகு சிறுமி மீட்கப்பட, அந்த இளைஞன் சிறையிலிருக்கிறான். மற்றொரு சம்பவத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், பள்ளியிலிருந்தபடி ஒரு இளைஞனுடன் சென்றுவிட, பெற்றோரின் புகாருக் குப்பின் மீட்கப்பட்ட சிறுமி, மீண்டும் ஒரு வாரத்தில் அதே இளைஞனுடன் சென்றுவிட்டார். அதேபோல, புதுக் கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லைக் கிராமத்தில் ஒரு மாணவிக்கு குழந்தை பிறந்துவிட்ட நிலையில், அதற்கு காரண மான இளைஞரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். இப்படி பல சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.
இதுபோன்ற சம்பவங் களுக்கு முதல் காரணம், சில பெற்றோர்கள் செய்யும் தவறுகளும், அடுத்து செல் போன்களும், சமூக வலைத் தளங்களும் தான் என்கின்றனர் வேதனையாக. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கல்வித்துறை என்ன நட வடிக்கை எடுக்கப்போகிறது?