ந்தியாவையே உலுக்கிய பவாரியா கொள்ளைக் கும்பல் 1990-களில் தென்னிந்தியா வில் தனது கொடூர கொலை, கொள்ளைகளை அரங்கேற்றியது. லாரிகளில் தனி ரகசிய அறை அமைத்து, அதில் ஆயுதங்களையும், கொள்ளையர்களையும் மறைத்து அழைத்துவந்து தனி வீடுகளை நோட்டமிட்டு, பின் நடுஇரவு வேளையில் தனது கும்பலுடன் சென்று கொடூரமாக தாக்கி கொள்ளையடித்து வந்தது. இவர்களை லாரி கொள்ளையர்கள் என்று அழைத்தனர்.

rr

பல ஆண்டுகளாக இந்த பவாரியா கும்பலின் கைவரிசை தென்னிந்தியாவில் அதிகமாக இருந்து வந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாவட்டங்களில் பல வழக்குகள் பதிவானது. தென்னிந்திய காவல்துறைக்கே இது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இவர்களின் கொடூரத் தாக்குதலில் 18 உயிர்ப் பலிகளும், 64 பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் படுகாயம் அடைந்தனர்.

ஜாங்கிட் உள்ளிட்ட தமிழக காவல்துறை அதிகாரிகளின் மிகக்கடுமையான முயற்சியால் அந்தக் கொடூர கொள்ளைக் கும்பல் சுட்டுபிடிக்கப்பட்டது. இதனால் அடங்கியிருந்த இந்த லாரி கொள்ளையர்கள், மீண்டும் தென்னிந்தியா பக்கம் தன் கைவரிசையை காட்ட துவங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஆந்திர மாநில எல்லைப் பகுதியான, கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் கிராமத்தில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த கொள்ளையர் கள் சி.சி.டி.வி. கேமரா மீது ஸ்பிரே அடித்து வீடியோ பதிவு ஆகாதபடி செய்துவிட்டு, காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

Advertisment

rrr

அந்த நேரத்தில் ஏ.டி.எம். மெஷின் அலாரம் அடித்ததால், ரோந்து போலீஸார் அங்கு வருவதைக் கண்டு, கொள்ளையர்கள் தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்றனர். வழியில் வாகன சோதனைச் சாவடியில் போலீஸார் இருப்பதைக் கண்டு, அந்தக் காரை நடுரோட்டிலேயே விட்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடினார்கள். போலீஸார் அந்த ஆல் 26 /ஆஏ 7360 ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாடா இண்டிகா காரை கைப்பற்றி, விசாரணையில் இறங்கியபோது... அந்த கார் ஆந்திராவில் திருடப்பட்டது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தார்.

rr

Advertisment

அடுத்து செப்டம்பர் 16-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதே பாணியில் ஓர் கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதில் ஏ.டி.எம். மெஷினை உடைத்து நான்கு லட்ச ரூபாய் வரை திருடப்பட்டதும், தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால் விசாரணையை தீவிரப் படுத்தினர். விசாரணையில் கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு சற்றுமுன் ஒரேநபர் இரு ஏ.டி.எம். மெஷின்களில் பணம் எடுப்பது தெரியவந்தது. அவனது வங்கிக் கணக்கை வைத்து அவனது முழு விவரமும் சேகரிக்கப்பட் டது. அதில் கொடுத்திருந்த செல்போன் எண்ணையும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற தமிழக பகுதி யில் எங்கெங்கெல்லாம் சென்றது என்ற டவர் லொகேஷனையும் வைத்து விசாரணை நடத்தினர். கொள்ளையனின் செல் போன் சிக்னலை வைத்து தீவிரமாக கண்காணித்தும் வந்தனர்.

கொள்ளையர்கள் ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட (RJ-14 / jk 6948) லோடு லாரியில் பயணிக் கின்றனர் என்ற தகவலும், அவர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட், ஸ்ரீபெரும் புதூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிக்கு லோடு இறக்க சென்ற தகவலும் கிடைத்தது போலீஸாருக்கு அதிர்ச்சியை அளித்தது. காரணம், சில ஆண்டுகளுக்கு முன் பவாரியா கொள்ளைக் கும்பல் செய்த கொடூரங்கள் போலீஸாரின் நினைவுக்கு வந்தன. இதனால் இவர்களைப் பிடிக்காவிட்டால் இந்த கொள்ளைக்கும்பலின் அட்டகாசம் தொடரும் என்பதால் தீவிரமாக காண்காணித்தனர்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ஆரம்பாக்கம் அருகே கொள்ளையர்கள் வருவது தெரியவந்தது. எளாவூர் நவீன சோதனை சாவடியருகே கொள்ளையர்கள் நான்குபேரை லாரியுடன் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

rr

மேலும் அவர்களிடம் விசாரித்தபோது அரியானா மாநிலம் மேவாத்ஜில்லா மாவட் டத்தைச் சேர்ந்த சாஜித், ஹர்சாத், லுக்மன் மற்றும் பதினாறு வயதுடைய சிறுவன் உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது. பவாரியா கொள்ளைக் கும்பலைப் போலவே லோடு லாரியில் ரகசிய அறை அமைத்து, அதில் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர், வெல்டிங் மெஷின் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. கொள்ளை யடித்த மீதி பணத்தை அரியானாவில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்குபேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். "போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்' என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர்கள் பவாரியா கொள்ளையர் கள் பாணியில் லாரியில் ரகசிய அறை அமைத்து கொள்ளையடித்தது மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனம் ராஜஸ்தான் மாநி லத்தை சேர்ந்தது என்பதால் இதன் பின்னணியில் பவாரியா கும்பலுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.