திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், நாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர் கள் காணிக்கைகளை உண்டியல்களில் போட் டாலும், கோவிலில் நடைபெறும் அன்னதானத் திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகாத செல்வராஜ், தனக்கு திருமணம் நடைபெற்றால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதானம் செய்வதாக வேண்டிக்கொண்டுள்ளார்.

sa

அவருக்கு திருமணம் நடந்து முடிந்ததால், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவி லுக்கு தன்னுடைய நேர்த்திக் கடனை தீர்ப்பதற்காக கடந்த நவம்பர் 24ஆம் தேதி கோவிலிலுள்ள தகவல் மையத்தில் மதியம் 12.14 மணி அளவில் அன்னதானத் திற்காக 5001 ரூபாய் பணம் கட்டி யுள்ளார். அப்போது தகவல் மையத் தில் பணிபுரிபவர், "பிரிண்டிங் மெஷின் ஒர்க் ஆகவில்லை. நீங்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள், நான் ரசீது தருகிறேன்'' எனக் கூறியுள்ளார். அதன்படி சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வந்த செல்வராஜ், தகவல் மையத்தில் ரசீதை கேட்டுள்ளார். அப்போது அங்குள்ள பணியாளரோ, "உங்களுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு ரசீதை அனுப்பி வைக்கிறோம்'' எனக் கூறியுள்ளார். செல்வராஜோ, "நான் காத்திருந்து ரசீதை பெற்றுக்கொள்கிறேன்'' எனக் கூறிய பின்பு, தகவல் மையத்தில் பணிபுரிபவரோ, கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்து போலியான ரசீதை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கோவில் நிர் வாகத்திற்கு தெரியவர, தகவல் மையத்திலுள்ள கம்ப்யூட்டரை கோவில் இணை ஆணையர் ஆய்வு செய்துள்ளார். அப்போது, அன்னதானத்திற்கு பணம் கட்டிய நபர்களுக்கு போலியான ரசீது வழங்கியது தெரியவந்ததும், இதில் தொடர் புடைய விஜய், ஆர்த்தி இருவரை யும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், சமயபுரம் மாரி யம்மன் கோவிலில் பல் வேறு முறைகேடுகள் நடப் பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், உயரதி காரிகளும், கோவில் அறங் காவலர் குழுவினரும் விசா ரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அறங்காவலர் குழு இதனைக் கண்டுங்காணா மல் ஊழல் புகாருக்கு துணை போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள் ளது. தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு ஊழியர்களும் லஞ்சமாகப் பணம் கொடுத்து இந்தப் பணிக்கு வந்துள்ளனர். அவர்கள் கொடுத்த பணத்தை குறுகிய காலத்தில் எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற போலி ரசீதுகள் மூலம் பக்தர்களின் காணிக்கைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

Advertisment

இவ்விவகாரம் தொடர்பாக கோவில் இணை ஆணையர் பிரகாசிடம் விசாரித்த போது, "அவர்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.

இது ஒருபுறமிருக்க, சமயபுரம் மாரியம் மன் கோயிலுக்கு வெளியூரிலிருந்து வரக்கூடிய பக்தர்களை ஏமாற்றி, குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பலால் (இந்த வேலையை, "கிராக்கி அடித்தல்' என்று சொல்கின்றனர்) அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களைத் தட்டிக்கேட்கும் கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கிராக்கி அடிக்கும் கும்பல் கொலை மிரட்டல் விடுப்பதும், கூட்டமாகச் சென்று அடிப்பதுமாக மற்றொரு அராஜகம் நடைபெறுகிறது. இவர்களுக்கு உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மட்டுமல்லாது, காவல்துறையினரும் ஆதரவளிப்பதால் செல்வாக்குடன் வலம் வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராக்கி அடித்த கும்பலை, கோயில் கண்காணிப்பாளர் சிவராம சூரியன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அன்றிரவே சமயபுரம் கோயில் பணியாளர்கள் குடியிருப்பிலுள்ள வீட்டிற்கு சென்று அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதைத் தடுக்கச் சென்ற கோயில் மேலாளர் காளியப்பன் என்பவரையும் தாக்கியுள்ளனர்.

Advertisment

அதேபோல், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே திருச்செந்தூர் சந்திரசேகர சுவாமி கோயில் செயல் அலுவலர் ராகினி, தனது கட்டுப்பாட்டிலுள்ள, அல்லூர் பஞ்சநதீஸ்வரர் கோயிலில் இரு தினங்களுக்கு முன்பு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது கோயில் மடப்பள்ளி முன்பு அனுமதியின்றி சில நபர்கள் ஆக்கிரமித்து தகரக்கொட்டகை அமைத்துக் கொண்டிருந்த தைப் பார்த்து அவர்களை விசாரித்தபோது, அங்கு வந்த அல்லூர் கிராம பஞ்சாயத்து தலை வரும், தி.மு.க. பிரமுகருமான விஜயேந்திரன் என்பவர், ராகினி கோயில் பரம்பரை டிரஸ்டி குமார் ஆகியோரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டி, எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.

இப்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்களும், ஆளுங்கட்சியினரின் அராஜகமும் அதிகரித்துவரும் நிலையில், இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.