சிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் நடந்த குளறுபடியால், 2011-2020 வரை தேர் வெழுதிய பலரின் வாழ்க் கையைக் கேள்விக்குறி யாக்கியதற்குக் காரண மான 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் அனுப்புமாறு, தமிழகத் தலைமைச் செயலாளருக்கு, தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விவகாரம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

e

27.09.2019ல், 2,144 காலியிடங்களுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில், கரூரைச் சேர்ந்த கௌதமன் கலந்து கொண்டுள்ளார். தேர்வு எழுதியவர்களின் உத்தேச மதிப்பெண் பட்டி யலை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், வெளியிட்ட விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனையிருந்தால், உரிய பாடநூலையும், மேற்கோள் புத்தகத்தையும் நகலெடுத்து அனுப்பவும் என்று தெரிவித் திருந்தது. அதனைச் சரிபார்த்த கௌதமன், தான் எழுதிய 13 கேள்விகளுக்கான பதில்கள் தவறாகக் கொடுக்கப்பட்டிருப் பதை அறிந்து அதிர்ச்சியானார். இவற்றில், 7 கேள்விகளுக்கான சரியான பதில்களை ஆதாரத் துடன் அனுப்பினார். பின்னர் வெளியிடப்பட்ட இறுதி மதிப் பெண் பட்டியலில் கௌதம னுக்கு 71 மதிப்பெண்கள் கிடைத் திருந்தது. அவரது சரியான பதில்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படாததால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சட்டரீதியாகப் போராட, இலவச சட்ட உதவி மையத்தை நாடியிருக்கிறார்.

Advertisment

exam

இவரைப் போலவே மற்ற மனுதாரர்கள் போட்ட வழக் கால், கௌதமனுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் மட்டும் கிடைத்துள்ளது. ஆனால் பணி கிடைப்பதற்கு 75 மதிப்பெண்கள் தேவைப்பட்ட நிலையில், இவரது பணி வாய்ப்பு பறிபோனது. இதை எதிர்த்து, தான் எழுதிய சரியான 7 பதில்களுக்கான ஆதாரங்களை டி.ஆர்.பி தலைவருக்கும், ஆர்.டி.ஐ-க் கும் 27.01.2020-ல் கடிதமாக அனுப்பியிருக்கிறார்.

இந்த கடிதத்தைப் பார்த்த தகவல் ஆணையம், மனுதாரரான கௌதம் மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத் தையும் விசாரணை நடத்தியுள்ளது. டி.ஆர்.பி. சார்பில் வந்திருந்த பொது தகவல் அலுவலர் திருமதி என்.ரமா, மனுதாரரின் ஏழு பதில்களும் தவறு என்று கூறியிருக்கிறார். ஆதாரத்தை கௌதம் தரப்பில் கேட்டிருக்கிறார்கள். உடனே அந்த அலுவலரோ, பாடநூல் வல்லுநர் குழு மற்றும் உயரதிகாரிகளை நோக்கி கையைக் காட்டி நழுவியிருக்கிறார். அடுத்ததாக, பாட வல்லுநர் குழுவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது, புத்தகத்தின் நகல் ஆதாரத்தைக் கொடுத்தால் பல சிக்கல்களை உருவாக்குமென்று அதிகாரிகள் தரப்பில் மறுத்திருக்கிறார்கள். ஆனால் தகவல் ஆணையம் அவர்களைக் கண்டித்திருக்கிறது.

Advertisment

அதன்பின்னர் அவர்கள் 5 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் கொடுத்துவிட்டு, இரண்டு கேள்விகளுக்கான பதில்களைத் தராமல் விட்டிருக் கிறார்கள். அவ்விரு பதில்களும் தவறாக இருந்திருக் கின்றன. இதையடுத்து, அரசுத் தேர்வுகளுக்கு எந்த புத்தகத்திலிருந்து கேள்விகளைத் தேர்ந்தெடுக்கிறார் களென்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளிக்கப்படவில்லை. இதையடுத்து, அதற்குக் காரணமான அனைத்து அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுச் செயலாளருக்கு தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து மனுதாரர் கௌதம் நம்மிடம் கூறுகையில், ""சாப்பிடக்கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, அரசுப் பணிதான் முன்னேற்றத்துக்கான வழியாக இருக்கும். இதற்காக 2010-ம் ஆண்டில் டிப்ளமோ முடித்ததிலிருந்தே மூன்று முறை தேர்வெழுதியிருக்கிறேன். இப்படி அரசாங்கம் செய்யும் தவறால் எனது எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது'' என்றார் விரக்தியாக.

exam

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே .இளமாறன் கூறுகையில், ""கேள்வித்தாள்களைத் தயாரிக்கும் குழுவே ஒருமுறைக்கு இருமுறை அதனைச் சரிபார்த்திருக்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும், டி.என்.பி. எஸ்.சி. தலைவரும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி யென்பதால் கேள்வித்தாள்களை முழுமையாகச் சரிபார்க்க வாய்ப்பு குறைவு. சரிவரப் பரிசோதிக் காத காரணத்தால், 2011 முதல் 2020 வரை கால கட்டத்தில் நடைபெற்ற தேர்வுகள் அனைத்திலும் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த கால கட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த பணியிடங்களுக்காகத் தேர்வெழுதிய பலரும், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடும். குறிப்பாக ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்ததன் காரணமாகப் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு, தற்போது நடைபெற்றுள்ள தவறுகள் குறித்து தெரிய வந்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இதற்குக் காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரி கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலா ளர் ராஜீவ்ரஞ்சனைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, ""இந்த விவகாரம் குறித்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் சூழலில் இதுகுறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.

சமீபத்தில் நடைபெற்ற குரூப் 1 தேர்விலும் 50 கேள்விகள் தவறாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் இப்படியே சென்றால் தேர்வெழுதுபவர்களின் நம்பிக்கையே கேள்விக்குறிதான்.