விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடத்துவது புதிதல்ல. அவர் மீது 2 முறை இன்கம்டாக்ஸ் ரெய்டுகள் நடந்திருக்கின்றன. அவர் சட்டவிரோதமாக பாறையை வெடி வைத்து தகர்த்து சுரங்கத் தொழில் செய்கிறார் என ஒரு ரெய்டு நடத்தப்பட்டது. குட்கா வழக்கில் அவர் மாதம் 15 லட்ச ரூபாய் வாங்குகிறார் என ஒரு பிரபல குட்கா நிறுவனத்தின் முதலாளியே வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
குட்கா வழக்கில் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் நேரில் ஆஜராகி சி.பி.ஐ.யில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... அப்பொழுது காவல்துறை அதிகாரி யாக இருந்த டி.கே.ராஜேந்திரனை சி.பி.ஐ. விசாரித்திருக் கிறது. விஜயபாஸ்கரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருக்கிறார். அவர் கடந்த தேர்தலில் கொடுத்த கணக்கின்படி, அவருக்கு வந்த அதிகாரப்பூர்வ வருமானத்தை கழித்தால் 27 கோடி ரூபாய் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டு, அவர் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
ரெய்டு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, தனது மனைவி ரம்யாவுக்கு கொரானோ அறிகுறிகள் இருப்பதாக விஜயபாஸ்கர் சான்றிதழ் வாங்கியிருக்கிறார். அவரது பி.ஏ.வான சரவணன், அவருக்கு நெருக்கமான விசுவாமித்ரன் என்பவருடன் இணைந்து துபாய்க்கு பறந்திருக்கிறார்.
ரெய்டுக்கு போனவர்கள், சரவணனின் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்கு சீல் வைத்துவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். சரவணனும் அவரது நண்பர் விசுவாமித்ரனும் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அத்துடன் விஜயபாஸ்கரின் அத்தனை பி.ஏ.க்களையும் போலீசார் ரெய்டுக்கு உள்ளாக்கவில்லை.
ரவி என்கிற பி.ஏ.வின் வீடு கொரட்டூரில் உள்ளது. அவர் சாதாரண டைப்பிஸ்ட்டாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் அமைச்சராக இருந்தபோது பணியாற்றியவர். அவரிடம் அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயபாஸ்கர் டைப் அடிக்க வருவார். விஜயபாஸ்கர் மந்திரியானதும் விதிமுறைகளை மீறி ரவியை ஜூனியர் பி.ஏ.வாக மாற்றிக்கொண்டார். இவர்தான் சுகாதாரத்துறையில் நடந்த அனைத்து பர்ச்சேஸ்களையும் பார்த்துக்கொண்டவர். மருந்துகள், சி.டி. ஸ்கேன் மெஷின், கொரோனா காலத்து மருந்துகள் மற்றும் சுகாதாரத்துறை யின் மருத்துவமனைகளில் 36 ஆயிரம் சிப்பந்தி களை முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின் சகோதர கம்பெனி மூலம் நியமித்தது என அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.
இவருக்குச் சொந்தமாக ஒரு சர்ஜிகல் கம்பெனி மற்றும் ஒரு மருந்து கம்பெனி ஆகியவை வெளிநாட்டிலும், தமிழகத்தில் கோயமுத்தூரிலும் இருக்கிறது. இவரது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை செல்லவேயில்லை. அதேபோல் இன்னொரு பி.ஏ.வான அஜய் மற்றும் குமார் குட்கா வழக்கு சீனிவாசன், ஸ்பெஷல் பி.ஏ.வான மணிகண்டன் ஆகியோர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை செல்லவில்லை. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது, சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரது வீட்டையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடவில்லை.
"கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்கத்தை விஜயபாஸ்கரிடம் கொடுத்தேன், நானும் அவரும் தங்க வணிகத்தில் ஈடுபட்டோம்' என வெளிப்படை யாக வாக்குமூலம் அளித்த கேரள பெண்மணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை. அந்தப் பெண்மணி கொச்சி நகரத்தில் உள்ள மத்திய அமலாக்கத்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அதை லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை 4 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த 4 அமைச்சர்களின் துறைகளில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒருவர்மீது கூட தனது விசாரணையைத் திருப்பவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமலா அமைச்சர்கள் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்? ஏன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை பாய்வதில்லை? என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டா ரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
அதெல்லாம் இல்லை. வேலுமணியைத் தவிர டாக்டர் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜய பாஸ்கர், வீரமணி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள் என்று வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் மீது வழக்கு தொடர்ந்தால் போதும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இதற்கு தேவைப்படமாட்டார் கள். அவர்கள் குற்றவாளிகளாக வரமாட்டார்கள் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
டாக்டர் விஜயபாஸ்கர் விஷயத்தில் அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும், ஜெ. மீது போடப் பட்டதுபோல சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக நடத்தப்பட்ட ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளது. விஜயபாஸ்கர் ஏராளமான சொத்துக்களை சேர்த்துள்ளார். அவை ஹார்ட் டிஸ்க்குகளாக கிடைத்துள்ளது என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்தவர்கள்.