யது வித்தியாசமின்றி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பரவுகிறது கொரோனா. ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் வரவேற்பு இல்லம் மற்றும் காப்பகத்தில் இருந்த 55 சிறார்களில் 35 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பகத்தில் இருந்த மற்ற சிறுவர்கள் வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசு காப்பகத்திலேயே இந்த நிலையா என்ற அதிர்ச்சி எல்லாத் தரப்புக்கும் இருக்கிறது.

cc

வழி தவறிய குழந்தைகள், தெருக்களில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், பிச்சையெடுக்கும் நிலையில் உள்ள குழந்தைகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும்போது பெற்றோரிடம் இருந்து பிரிந்த, தானாக ரயில் ஏறி வந்த சிறுவர்- சிறுமியர், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் எனப் பல வகையிலானவர்கள் இந்த காப்பகங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரை காப்பகம் எனப்படும் வரவேற்பு இல்லங்களில் இருப்பார்கள். பெற்றோர்களிடம் அனுப்புவது பாதுகாப்பில்லை என்ற நிலை இருந்தால் அந்தக் குழந்தைகளும் காப்பகத்தில் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களின் கடைசிக் கட்ட பாதுகாப்பான காப்பகத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் கொரோனா பரவல் காட்டுகிறது. காப்பகப் பணியில் உள்ளவர்கள், உணவுப்பொருட்கள் கொண்டு வந்தவர்கள் எவர் மூலமாகவேனும் கொரோனா பரவியிருக்கலாம் என்கிறது முதல் கட்ட தகவல். சிறார் சட்டப்படி, குழந்தைகளை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாக்கும் வசதிகளுடன் காப்பகங்கள் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள காப்பகத் திலேயே இந்த நிலை என்றால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள காப்பகங்கள்?

இது குறித்து குழந்தை உரிமைகள் செயற் பாட்டாளரான தோழமை அமைப்பின் அ.தேவ நேயனிடம் கலந்துரையாடினோம்.

Advertisment

நான் ஒருமுறை சென்னையில் ஒரு இடத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்த 18 வயதுக்கு கீழே உள்ள 69 குழந்தைகளை மீட்டு இந்த வரவேற்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, அதற்கு பிறகு முழு விவரங்களையும் சேகரித்த பிறகு, மேற்கு வங்கத்திற்கு அந்த குழந்தைகள் அனுப்பப்பட்டார் கள். குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் காப்பகத்தின் பணி. ஆனால், இங் கிருந்த குழந்தைகளை ஏன் பெற்றோரிடம் சேர்க்கவில்லை என்பதோ, பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தைகளா என்பதோ தெரியவில்லை. குழந்தைகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அதற்கான மொழிபெயர்ப்பாளர்களும் போதுமான அளவில் இருப்பதில்லை.

ss

காப்பகங்களின் நடைமுறைகளைக் கண் காணிக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இருக்கிறது. இந்த ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெண்கள் உரிமைகள் ஆணையம் இருப்பதுபோல தேசிய மற்றும் மாநில அளவிலான சட்டம் சார்ந்த அமைப்பு. மாநில குழந் தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமான இந்த அமைப்புக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் தலைவர் இல்லை. மே மாதம் முதல் உறுப்பினர்கள் யாரும் கிடையாது. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகம் கடந்த மார்ச் 24ஆம் தேதி பூட்டப்பட்டுவிட்டது. இதுதான் தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாப்பு நிலைமை.

Advertisment

ஒவ்வொரு மாவட்டத்திலேயும் குழந்தைகள் நலக் குழுவில் 5 பேர், இளம் சிறார் நீதி குழுமம் 3 பேர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 12 பேர், மாவட்ட குழந்தைகள் ஹெல்ப் லைன் 1098-ல் 12 பேர் இருக்கிறார்கள். இப்படி மக்கள் வரிப்பணத்தில் குழந்தைகளை பாதுகாக்க அரசு சம்பளம் வாங்கும் 50 அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் தனித்தனியே பணியாற்றுகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற எந்த புள்ளிவிவரமும் இவர்களிடம் கிடையாது. தேசிய அளவில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சரியான புள்ளிவிவரங்களை வைத்திருக்கிறது. அதுபோல இங்கு கிடையாது. புகார் மீதும் உரிய நடவடிக்கை இல்லை. காவல்நிலையத்திலும் எஸ்.ஐ. ரேஞ்ஜில் இருக்கக்கூடியவர் தலைமையில் குழந்தைகள் நல காவலர்கள் இருக்க வேண்டும்.

ff

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்குப் பிறகு தமிழக அரசு மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் எதுவும் சரியாக இயங்குகிறதா என்பதுதான் கேள்வி. மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, இளம் சிறார் நீதிமன்ற நீதிபதி, காவல்துறை யில் உள்ள குழந்தைகளை கண்காணிக்கிற குழு ஆகியவையும் கண்காணிக்கலாம். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது முதல்வருக்கே சம்மன் அனுப்பும் அதிகாரமுள்ள ஆணையம். அதனை இங்கே டம்மியாக வைத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு உடனடியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் எத்தனை குழந்தைகள் தங்கியிருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்ததா என உறுதிப்படுத்த வேண்டும். காப்பகங்களில் குழந்தைகளின் நிலை பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்கிறார் உறுதியாக.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணை யம் தனியான, சுதந்திரமான, சட்ட ரீதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை செய்யாதவரைக்கும் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை.

-வே.ராஜவேல்