கனியாமூர் சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமாக மரணமடைந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் என ஸ்ரீமதியின் தாயார் சி.பி.சி.ஐ.டி போலீசா ருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பரபரப்பான இந்தக் கடிதத்தில், ஸ்ரீமதி பதி னொன்றாம் வகுப்பில் ஆன் லைன் கிளாஸில் உபயோகித்த செல்போனையும் சிம் கார்டையும் கொடுக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்கிறார்கள். அத்துடன் எனது ரத்த மாதிரியையும் கேட்கிறார்கள். அதன்மூலம் எனக்கு பிறந்த மகள்தான் ஸ்ரீமதி என டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் நிரூபிக்கப் போவதாக சொல்கிறார்கள்.
ஸ்ரீமதியின் செல்போன் என்னிடம் இல்லை. சிம் கார்டுதான் இருக்கின்றது. அதை கோர்ட்டில் ஒப்படைக்க நான் தயார். ஆனால் ஸ்ரீமதி என் குழந்தைதான் என்பதை டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் நிரூபிக்க நான் தயாராக இல்லை. ஒட்டுமொத்த சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை முழுவதும் ஸ்ரீமதி தற் கொலை செய்துகொண் டார் என முடிவு செய்து விட்டு விசாரிப்பதுபோல் இருக்கிறது என குறிப் பிட்டிருக்கிறார்.
மேலும் அக் கடிதத்தில், ஸ்ரீமதி மரணத்துக்கு முன்பு எழுதியதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதம் உண்மையா என்பதைப் பற்றி இதுவரை எந்த விளக்கமும் சி.பி.சி.ஐ.டி தரப்பிலிருந்து விளக்கப்படவில்லை. மரணத்தின்போது ஸ்ரீமதி அணிந்திருந்த ஆடைகளை ஸ்ரீமதியின் பெற்றோருக்கு காண் பிக்கவில்லை. ஸ்ரீமதியுடன் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை கோர்ட்டில் ரகசியமாக ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது உள்பட எந்த விவரமும் தெரியவில்லை. ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக ஆராய்ந்த ஜிப்மர் மருத்துவமனை யின் ரிப்போர்ட் இதுவரை பெற்றோ ரிடம் காட்டப்படவில்லை என்பதை யெல்லாம் சுட்டிக்காட்டி, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க ஸ்ரீமதி யின் தாயார் கோருகிறார்.
வழக்கை விசாரிக்கும் சி.பி. சி.ஐ.டி. டி.எஸ்.பி. கோமதி, தனலட்சுமி என்கிற போலீஸ் மூலம் ஸ்ரீமதி தாயார் செல்வியிடம் ஸ்ரீமதி பேரில் இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்திருக்கிறீர்களா? ஸ்ரீமதி இறந்தால் அந்தத் தொகை உங்க ளுக்கு கிடைத்திருக்குமே? எனக் கேட்டார். ஸ்ரீமதி பேரில் எந்த இன்சூரன்ஸ் பாலிஸியும் இல்லை என செல்வி பதில் அளித்தார். இந்த பதில் அப்படியே பள்ளி நிர்வாகத் துக்கு நெருக்கமான இணைய தளத்தில் வந்தது. ஸ்ரீமதியின் உடலை தூக்கி வரும்போது அதில் அவரது மேலாடை பட்டன் அவிழ்ந்திருந்தது பற்றியும், ஸ்ரீமதி அணிந்திருந்த செயின் மற்றும் கொலுசு ஆகியவை எங்கே? எனவும் ஸ்ரீமதி தரப்பு கோமதியிடம் கேட்டபோது சரியான, திருப்தியான பதில் இல்லை. யாரோ ஒருவர் கீழே கிடந்த தங்கச் செயின் துண்டை தந்ததாக கோமதி சொல்கிறார்.
பள்ளியில் நடந்த பெரிய கலவரத்திற்குப் பிறகு விசாரணைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கோமதியிடம், "பன்னிரெண் டாம் தேதி ஸ்ரீமதி அணிந்திருந்த தங்கச் சங்கிலியின் உடைந்த துண்டை யார் அவ்வளவு பொறுப்புடன் ஒப்படைத்திருக்க முடியும்? என்ற கேள்விக்கு கோமதியிடம் பதில் இல்லை. இது எரிந்துபோன பேருந்திலிருந்து ஸ்ரீமதி ஒரு வருடத்திற்கு முன்பு எழுதிய கடிதத் துண்டுகளை நான் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தேன் என ஸ்ரீமதி பயணம் செய்த பஸ் டிரைவர் செந்தில் குமார் நக்கீரனிடம் சொன்னதற்கு சமமானது.
மற்ற சாட்சியங்கள் விசயத்தில் கவனக் குறைவாக இருக்கும் கோமதி, ஸ்ரீமதி தாயார் செல்வியிடம் ஸ்ரீமதி எந்த செல்போனை உபயோகித்தார், அவர் ஹாஸ்டலில் இருந்த பத்து நாட்களிலும் யாருக்காவது மெசேஜ் செய்திருக்கிறாரா? என, ஸ்ரீமதி காதலித்தார் என்கிற பொய்யை நிரூபிக்க கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஆனால், ரவிக்குமாரின் மகன்கள் மற்றும் ராஜசேகரின் மகன்கள், ஸ்ரீமதி கொல்லப்பட்டபோது எங்கிருந்தார்கள் என விசாரணைக்கு உட்படுத்த மறுத்துவிட்டது. அதைப்பற்றிக் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறது சி.பி.சி.ஐ.டி.
ஜெபஜீவப்பிரியா என்கிற ஸ்ரீமதியின் ஹாஸ்டல் வார்டன் என்ன ஆனார் என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. வாய் திறக்க மறுக்கிறது. ஆனால், பன்னிரெண்டாம் தேதி இரவு ஸ்ரீமதி இறந்தபோது சாந்தியும், ரவிக்குமாரும் தங்களது செல்போன்களை உபயோகிக்கவே இல்லை என கோமதி வேகவேகமாக மறுக்கிறார்.
கோமதி கள்ளக்குறிச்சியில் சட்டம்- ஒழுங்குப் பிரிவில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்தபோது சக்தி பள்ளியில் நடைபெற்ற பல தவறுகளை மறைக்க, அவர்களுக்கு உதவியுள்ளார். அந்த உதவி இப்போதும் தொடர்கிறது. கோமதிக்கு சி.பி.சி.ஐ.டி.யின் தலைவரான ஷகில் அக்தர் உதவுகிறார்.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்து ஸ்ரீமதி வழக்கை விசாரிக்க வேண்டும் என அவரது தாயார் எழுப்பியுள்ள கோரிக்கை காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படம் : அஜித்