ரு இடைவேளைக்குப் பிறகு கேரள தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருவனந்தபுரம் அட்டங்குளம் கரை மகளிர் சிறையில் 16 மாதங்கள் இருந்த தங்கக் கடத்தல் புகழ் ஸ்வப்னா சுரேஷ் கடந்த 7-ஆம் தேதி எர்ணாகுளம் சி.ஜே.எம். கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளிய வந்து, “"தங்கக் கடத்தலுக்கும் முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பிருக்கிறது'’என பத்திரிகையாளர்களிடம் பேச... தெறிக்கவிட்ட அவருடைய பேச்சால் கேரள அரசியல் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஸ்வப்னாவின் ரகசிய வாக்குமூலத்தை ஒன்றிய உள்துறையும் கேட்டுள்ளது.

2020 ஜூலை 5-ஆம் தேதி திருவனந்தபுரம் ஜவஹர் நகரில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த உணவு பார்சலில் தங்கம் கடத்திவரப் பட்ட சம்பவத்தில் கேரள அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் விண் வெளிப் பூங்கா பிரிவுச் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பு இருந்ததையடுத்து ஸ்வப்னாவை பெங்களூரில் வைத்து என்.ஐ.ஏ. ஜூலை 13-ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், ஸ்வப்னா வின் கூட்டாளிகள் சந்தீப் நாயர், ஷரத் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

kk

Advertisment

இந்த நிலை யில் தங்கம் கடத் தல் விசாரணை யை துரிதப் படுத்தும்வித மாக மோடியும் அமித்ஷாவும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டனர். ஆரம்பத்தில் வழக்கு பினராய் விஜயனை குறிவைத்து நகர்ந்தது. 2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்காக பினராய் விஜயனிடம் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அதற்கான முகாந்திரம் கிடைக்காததால் அந்த முயற்சி தோற்றுப்போனது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து மீண்டும் பினராய் விஜயன் முதல்வரானார்.

இதற்கிடையில், சிறையிலிருந்த ஸ்வப்னாவிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கடத்தல் வழக்கில் பினராய் விஜயனின் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தித்து வருவதாக ஸ்வப்னா, சிறை அதிகாரிகளிடம் கூறியதை வைத்து கேரள போலீசார் என்.ஐ.ஏ. மீது வழக்குப் பதிவு செய்து அதுவும் விசாரணையில் உள்ளது. 2021 நவம்பர் மாதம் சிறையிலிருந்து வெளியேவந்த ஸ்வப்னா கடந்த 7 மாதங்களாக பாலக்காடு சந்திரா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஷரத்துடன் வசித்துவருகிறார். மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடும் ஐதஉந எனும் ஒரு தனியார் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துவருகிறார்.

கடந்த ஓராண்டாக தங்கக் கடத்தல் விவகாரத்தை கேரள மக்கள் மறந்திருந்த நிலையில் தற்போது திடீரென்று ஸ்வப்னா, "பினராய் விஜயனின் "கிளப் ஹவுஸ்' க்கு ஐக்கிய அரபு அமீரக கான்ஸ்லேட் ஜெனரல் அகம்மது அல்தௌகி மூலம் பிரியாணி பாத்திரத்தில் தங்கம் கடத்திச் சென்றதாகவும், அபுதாபிக்கு கொண்டுசென்ற பினராய் விஜயனின் பேக்கில் கட்டுக்கட்டாக பணமிருந்தது ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரியவந்தது என்றும் தங்கக் கடத்தலில் பினராய் விஜயன், அவருடைய மனைவி கமலா, மகள் வீணா, அப்போதைய தலைமைச் செயலாளர் நளினி நெட்டா (ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் சகோதரி), முதன்மைச் செயலாளர் சிவசங்கர், தனிச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாஜி மந்திரி ஜலீல் ஆகியோருக்கு தொடர்பு உண்டு'' எனவும் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

"கட்டாயப்படுத்திதான் ஸ்வப்னாவை இப்படி சொல்ல வைத்தி ருக்கிறார்கள். இதன் பின்னணி யில் பா.ஜ.க.வும் கேரளா காங் கிரசை சேர்ந்த பி.சி.ஜார்ஜும் உண்டு' என கம்யூ னிஸ்ட்டுகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, "எப்படி யாவது இந்த விவகாரத்தில் பினராய் விஜயனை சேர்த்துவிட வேண்டுமென்று பா.ஜ.க. டெல்லி தலைமை பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதில் கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனும் ஸ்வப்னா சுரேசும் உறவுக்காரர்கள் என்.ஐ.ஏ. ஸ்வப்னாவை கைது செய்தபோது இதே சுரேந்திரன் தொடர்புகொண்டு "உதவி வேண்டுமா?' என்று கேட்டிருக்கிறார். மேலும் இரண்டு முறை சிறைக்குச் சென்றும் ஸ்வப்னாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். பா.ஜ.க.வுக்குச் சொந்தமான "ஜனம்' டி.வி.யின் செய்தி ஆசிரியர் அனில் நம்பியாரும் சமீபகாலமாக ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருக்கிறார்.

ddகேரள காங்கிரஸ் பி.சி.ஜார்ஜ், தற்போது பா.ஜ.க.வின் பிரச்சார பீராங்கியாக செயல்படுகிறார். திருவனந்தபுரத்தில் நடந்த ஹிந்து மகா சம்மேளனத்தில் கலந்துகொண்டு பேசிய பி.சி.ஜார்ஜ், "முஸ்லீம்கள், இந்துக்களை எதிர்கொள்ள இனப் பெருக்கத்தை அதிகரிக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிம் கணவன் மனைவியும் ஐந்தாறு பிள்ளைகளைப் பெறுகிறார்கள்'' என பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பவே... அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பினராய் விஜயனை தரக்குறைவாகப் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.

"பூஞ்ஞார் தொகுதியில் இருந்து தொடர்ந்து 7 முறையாக எம்.எல்.ஏ. ஆக இருந்த பி.சி.ஜார்ஜை கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் தோற்கடித்தது. இதையெல்லாம் மனதில் கொண்டுதான் பி.சி.ஜார்ஜ், பா.ஜ.க.வுடன் சேர்ந்து பினராய் விஜயனை பழிவாங்கத் துடிக்கிறார். காங்கிரஸ், சோலார் பேனல் முறைகேட்டில் சரிதா விவகாரத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தது. அதற்குப் பதிலடியாக, ஸ்வப்னாவைப் பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஆட்சியைக் காவு கொடுக்க நினைக்கிறது.

ஸ்வப்னாவை தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பா.ஜ.க.வுடன் சேர்ந்து பினராய் விஜயனுக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டுகிறார்கள். இவர்களுடைய எந்த சதித் திட்டமும் பலிக்காது, அவற்றில் உண்மையில்லை. அதனால், அதை மக்களும் நம்பமாட்டார்கள்''’ என்கிறார்கள்.

இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன், "திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் விவகாரத்தில் மன்னர் குடும்பம் பாயச வாளியில் தங்கத்தைக் கடத்திச் செல்கிறார்கள் என்று கம்யூனிஸ்ட் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியபோது எல்லோரும் சிரித்தார்கள். பின்னால் அது உண்மையாக வில்லையா. அதேபோல் பிரியாணி வாளியில் தங்கம் கடத்திச் சென்றது உண்மை. அதில் ஈடுபட்டவரே கூறும்போது ஏன் நம்பக்கூடாது? பினராய் அரசுக்கு இது மரண வாரண்ட். பிரியாணி வாளியைத் திறக்கும்போது அதிலிருந்து கெட்ட வாடை வெளியே வந்துவிட்டது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக பினராய் விஜயன் மீது விசாரணையை ஒன்றிய அரசு நடத்தல. இப்போது அதில் வேகம் காட்டி யிருக்கிறது''’என்றார்.

பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனோ, "ஸ்வப்னா உண்மையை வெளியே சொல்லிவிடுவாரோ என்று சிறையில் இருக்கும் போதே அவரை மிரட்டியுள்ளனர். பினராய் விஜயன் பெயரைக் கூறும்படி அமலாக்கதுறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்ததாக எழுதித் தர டி.ஐ.ஜி. அபய்குமார் கூறியிருக்கிறார். அதற்கு ஸ்வப்னா முடியாது என்றதால் அவரை சிறையில் மோசமாக நடத்தியிருக்கிறார்கள். தற்போது ஸ்வப்னாவுக்கு உயிர் பயம் ஏற்பட்டதால்தான் உண்மையைச் சொல்லிவிட்டார். நியாயமாக பினராய் முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும்''’என்றார்.

பி.சி.ஜார்ஜோ, "ஸ்வப்னா தவறு செய்ய வில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறேன்'' என்றார்.

மா.கம்யூனிஸ்ட் திருவனந்தபுரம் மா.செ. ஆனாவூர் நாகப்பன் தன் பங்குக்கு, "ஏற்கனவே அரசுக்கும் பினராய் விஜயனுக்கும் கெட்ட பெயரை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்த போது அதை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அடித்தார்கள். மீண்டும் ஸ்வப்னாவோடு ஒரு அரசியல் கூட்டுச் சதியை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்''’என்றார்.

சோலார் பேனல் விவகாரத்தில், சரிதா பெயர் அடிபட்டு, காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதுபோல கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு இக்கட்டாக ஸ்வப்னாவும் தங்கக் கடத்தல் விவகாரமும் எழுந்து நிற்கிறது. இந்த நெருப்புச் சுவரை பினராய் தாண்டிவிடுவாரா… தடுமாறுவாரா என்பதில் இருக்கிறது கேரள அரசியலின் திருப்புமுனை.