oo

எச்சரித்த கலைஞர்!

ம்ம சீனியர் அட்வகேட் பெருமாள் வந்துட்டார். விசயம் தெரிஞ்சு வந்த சீனியர் அட்வகேட் பெருமாள் சாரை தம்பி சிவகுமார், சந்து வழியா போயி பாதுகாப்பா கூப்பிட்டு வந்துட்டார். அட்வகேட் எட்விக், வர்கீஸும் வந்துட்டாங்க. நாங்க இவிய்ங்களுக்கெல்லாம் தெரியாம ஒரு வழி வச்சிருக்கோம்ல, அதுல சுத்தி கித்தி... வந்துட்டாங்க.

ஒருபக்கம்... இத லீகலா எப்படி ஹேண்டில் பண்றதுன்னு நானும் அட்வகேட்ஸும் டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சோம்.

Advertisment

அதுக்கிடையில, எங்க கெஸ்ட் ஏ.எஸ். பன்னீர்செல்வம் அண்ணனையும் பாதுகாப்பா இணையாசிரியர் அனுப்பிவச்சிட்டார். வெளிய நின்ன பொறுக்கி நாய்ங்க குண்டு சோடாவ வேற வீசிக்கிட்டே இருக்கானுங்க. இதுக்குன்னு ஒரு ஏரியாவையே வச்சிருப்பானுக போல. அதனால் நான் நம்ம தம்பிகள்ட்ட, "யப்பா... கவனமா இருந்துக்கங்க. பேச்சு வாக்குலயோ, போன்ல பேசற மும்முரத்துலயோ, கவனமில்லாம இருந்துடாதீங்க. காயம் கீயம் பட்றப்போகுது''ன்னு” உஷார்படுத்திக் கிட்டே இருந்தேன். காயம் பட்டா தூக்கிட்டு வெளியே வேற போகமுடியாது... சேத்துவச்சு மிதிப்பாய்ங்க. தாக்குதல் அடிவயிறு கலங்குற மாதிரி, தொடர்ந்துக்கிட்டே இருக்கு. நான், ஆபீஸ்ல படியேறும் இடத்துக்கிட்ட இருக்கும் சின்னத் திண்டுல, மனசு ஒடைஞ்சி போய், தலைல கைய வச்சிக்கிட்டு அங்கேயே உட்கார்ந்துட்டேன்.

அப்ப சகோதரி கனிமொழிகிட்ட இருந்து போன் வந்துச்சு. “

"அண்ணே, தைரியமா இருங்க... இதோ தலை வர் பேசுறார்'னு போன பக்கத்துல கொடுத்தாங்க...

Advertisment

எதிர்முனையில் கலைஞர்...

அப்ப... கலைஞர், “"என்னாச்சு?''” என்றார்.

"இல்லண்ணே, காலைல இருந்து ஒரே பேய் ஆட்டம். தமிழகம் முழுக்க நக்கீரன் புக்க எரிக்கி றாங்க போல இருக்கு. ஆளுங்க வந்துகிட்டே இருக்காங்க. வந்து அடிக்கிறாங்க. சோடா பாட்டில், கல்லெல்லாம் வீசுறாங்க. இரண்டு காரு, நெறைய டூவீலர் எல்லாம் ஒடைச்சிட்டாய்ங்க. நிலம ரொம்ப மோசமா போயிக்கிட்டு இருக்குண்ணே''ன்னு பதட்டத்தோட சொன்னேன்.

அதுக்கு அவர்...

"சரி சரி... நீங்க அங்க இருக்க வேணாம். கிளம்புங்க. எல்லாத்தையும் அப்பறம் பாத்துக்க லாம்''னு சொன்னார்.

“"எனக்கு ஒண்ணும் புரியலைண்ணே... என்ன ஆகப்போவுதுன்னும் தெரியலை, பயமா இருக்கு''ன்னேன்.

"இல்ல... சரி கிளம்புங்க, நான் அப்புறம் பேசுறேன்''னு கலைஞர் போனை எதிர்முனைல வச்சிட்டார்.

poorkalam

"நீங்க அங்க இருக்க வேணாம். கௌம்புங்க''ன்னு கலைஞர் சொல்லிட்டு போனை வச்சிட்டார். கலைஞர் அண்ணன்தான் முதல்ல நம்மள எச்சரிச்சவர். அப்ப என்ன பண்றதுன்னு புரியல. காம்ப வுண்டுக்கு வெளில, நிலம போர்க்களமா இருக்கு. எந்த நேரமும் அவனுங்க ஆபீசுக் குள்ள பூந்துடணும்னு குறியா நிக்கிறானுங்க. வெறியோட தாக்குறானுங்க. கலைஞர் கிளம்பச் சொன்னா லும், என் கூட இருக்கவங்கள எல்லாம் விட்டுட்டு, நான் மட்டும் எப்படித் தப்பிக்கிறது? அதுல எனக்கு உடன்பாடு இல்ல. எல்லாரையும் எப்படிக் காப்பாத்தப் போறோம்ங்கிற பெரிய மனக் குழப்பத்துல அப்படியே சடமா உக்காந்திருக்கேன்.

வெளில தாக்குதல் மோசமா தொடருது. இத ஒரு குரூப் மட்டும் பண்ணல. சார சாரயா வர்றான். ஆயிரக்கணக் குல அணிவகுத்து வர்றான். எதை எதை யோ ஆபீசுக்குள்ள எறியறான். எப்ப என்ன விழப்போவு தோன்னு, உள்ள இருக்கும் எங்க எல்லாருக்கும் குல நடுங்குது.

எல்லாமே முடிஞ்சிடிச்சி... நாம இத்தனநாளா கட்டிக் காத்த ஒரு பெரிய ஆலமரம் இன்னயோட முழுசா சரியப் போவுதுன்னு அப்ப எனக்குத் தோணுச்சு. அந்த நேரம் பாத்து, வெளில இருந்த பெருசு சுந்தர், "அண்ணே ஊ.இ.காரங்க கரண்ட்ட கட் பண்ண வந்திருக் காங்கண்ணே''ன்னு அடுத்த குண்டப் போடுறார். சைமல்டேனியசா எல்லா வேலையும் ஒரே நேரத்துல நடக்குது. நக்கீரன் ஆபீசுக்கு வர்ற கரண்டு, தண்ணி எல்லாத்தையும் கட் பண்ணச் சொல்லி, அங்க இருந்த ஆளுங்கள ஏ.டி.எம்.கே.காரங்க தூக்கிட்டு வந்திருக் காங்க. அதாவது மெட்ரோவாட்டருக்கு ஒரு குரூப்பு, ஊ.இ. ஆபீஸுக்கு ஒரு குரூப்புன்னு போயி, ஆளுங்களை இவங்க வண்டில தூக்கிப் போட்டு, கொண்டுட்டு வந்துருக்காங்க. உடனடியா கரண்டையும் தண்ணியயும் கட் பண்ணுங்கன்னு அவங்க அவசரப்படுத்தறாங்க.

poorkalam

இதுல என்ன ஒண்ணுன்னா, டிரான்ஸ்பார்மர் நம்ம ஆபீசுக்கு வெளில வாசல ஒட்டியே இருக்கு. அத பகிரங்கமா கட் பண்றதுக்கு ஊ.இ. ஆளுங்க யோசிக்கிறாங்க. டிரான்ஸ்பார்மர கட் பண்றதுன்னா, மேலதிகாரிங்ககிட்டயிருந்து அனுமதிக் கடிதம் வேணுமாம். அப்படி ஒரு புரசீஜர் இருக்குபோல. அதனால் ஊ.இ. ஆளுங்க, "அனுமதிக் கடிதம் இல்லாம கரண்ட்ட கட் பண்ணமாட்டோம். நாளைக்கு ஒரு பிரச்சினைன்னா நாங்கதான் பதில் சொல்லணும்''னு மறுக்கறாங்க. அதனால, பிரஸ்காரங்க கண்ல படக்கூடாதேன்னு, நம்ம ஆபீஸ்ல இருந்து 10 பில்டிங் தள்ளி ஒரு எடத்துல உள்ள கேபிளை வலுக்கட்டாயமா கட்பண்ண வச்சிட்டாங்க.

உடனே, நம்ம ஆபீச சுத்தி இருக்கும் அம்பது நூறு கடைகளுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் கட் ஆயிடிச்சி. அதுலயும் போலீச பாதுகாப்புக்கு நிக்கவச்சிட்டு கட் பண்ணியிருக்காங்க. அந்த நேரத்துல நம்ம பெருசு சுந்தரு, "அண்ணே... இங்க கரண்ட்ட கட் பண்றாங்க''ன்னு பலமா சவுண்டு கொடுத்தார். அவர் கத்துனது நம்ம காதுக்கு கேட்டுச்சு. அப்படி கட் பண்ணதயும் நம்ம தம்பிகள் விடாம படம் எடுத்திருக்காங்க. அந்தப் படத்தப் பார்த்தாலே நிலவரம் தெரியும். இதனால பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஒண்ணு கூடறாங்க. ”"ஏன் கரண்ட கட் பண்ணீங்க?'ன்னு கேள்வி கேக்கறாங்க. அதுக்கு அந்த ஆளுங்க... "எங்களுக்குப் புகார்கள் வந்திருக்கு. அதனாலதான்'’னு சொல்றாங்க.

oo

அதே மாதிரி நம்ம ஆபீசுக்கும் வீட்டுக்கும் குடிநீர் எப்படி போகுதுன்னு பாத்து, அங்கபோய் தோண்ட ஆரம்பிச்சிட்டாங்க. திருவான்மியூர்ல அப்ப இருந்த நம்ம இணையாசிரியர் வீடு இருக்கு. அங்க லோக்கல்ல இருக்குற அ.தி.மு.க.காரன் ஒருத்தன், "இதுதான் காமராஜ் வீடு'ன்னு ஒரு கல்ல விட்டுட்டு ஓடிட்டான் பரதேசி. உடனே நமக்கு தகவல் வர... அங்க தம்பி பிரகாஷையும், உடன் நம்ம போட்டோகிராபர் ஸ்டாலினையும் கூடவே இரண்டுபேரையும் போட்டு அனுப்பினேன். அதுக்குள்ள பரதேசிங்க ஓடிட்டாய்ங்க. அப்ப, எல்லா பக்கமும் ஏதேச்சதிகாரம் சூழ ஆரம்பிச்சிடுச்சுன்னு புரிய ஆரம்பிச்சிது.

ஒரு பக்கம் ஆளுங்கள வச்சி கடுமையான தாக்குதல் நடக்குது. இன்னொரு பக்கம் அதிகாரத்த வச்சி என்னென்ன பண்ண முடியுமோ அத்தனையையும் செய்றாங்க. இதுக்கு பேருதான் அரச பயங்கரவாதம். அதத்தான் முழுசா நக்கீரன் அனுபவிக்கிது.

அப்ப வெளீல இருந்த தம்பி லெனினெல்லாம் உள்ள வர்றதுக்காக ஏ.சி.க்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. அப்ப கலைஞர் டி.வி. ஆனந்தரத்தினம், கேமராவ மறைச்சி வச்சிக்கிட்டு நிக்கிறது கதவு இடுக்கு வழியா தெரியுது. அங்க கதவு, கதவுக்குப் பின்னால போலீஸ், அதுக்குப் பின்னால் அந்த அராஜக மாஃபு இருக்கு. அந்த நேரத்துல மட்டும் போலீஸ் தாக்குதலை நிறுத்த, லெனினும் அவர் கூடவே கலைஞர் டி.வி. ஆனந்தரத்னமும் அவங்க கேமராமேனும் உள்ள வர்றாங்க. கலைஞர் டி.வி. ஆனந்தரத்னம், உள்ள வந்ததுமே, என் கையப் பிடிச்சு தனியா அழைச்சிக்கிட்டுப் போய்...

"ஐயோ... அண்ணே...''

(புழுதி பறக்கும்)