ff

(98) அழகான முகத்த அகோரமாக்குன ஜெயலலிதா!

போன இதழ்ல... கடைசியா, "அதவிடக் கொடும'ன்னு சொல்லியிருப்பேன். அந்தக் கொடுமய ஏன் கேக்குறீங்க? சுப்பிரமணியசாமிக்கு மாடு, மனுஷன்னு எல்லா அசிங்கத்தயும்... ஓட ஓட விரட்டி... என்னென்ன மாதிரியெல்லாம் ஒருத்தர கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்துனாய்ங்க. எல்லாத்தையும் வாங்கி தன்னோட பைஜாமா சோப்புக்குள்ள போட்டுக்கிட்டாரு சு.சாமி.

Advertisment

டெல்லியில இவரே ஏற்பாடு பண்ணுன ஒரு டீ பார்ட்டி. அந்த பார்ட்டிக்கு வரணும்ங்கிறதுக் காக... ஜெயலலிதா வரவ எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தாரு சு.சாமி. இதுதான் நேரங்கிறது... ஜெ.வும், சோனியாவும் வந்தாங்க. டீ பார்ட்டிய வெற்றிகரமா முடிச்சு ஒரு ஆட்சிய (வாஜ்பாய் அரசு) கவுத்தாய்ங்க.

இதுக்கப்புறமா ரெண்டுபேரும் நகமும் சதையுமா ஆயிட்டாய்ங்க.

வேற யாரு...? சுப்பிரமணியசாமியும் ஜெயலலிதாவும்!

Advertisment

இந்தக் கேவலத்த எங்க போய் சொல்றது?

அதவிட இன்னொரு கொடும நடந்துச்சு... அதையும் சொல்றேன் கேளுங்க.

சந்திரலேகா ஐ.ஏ.எஸ். சுப்பிரமணிய சாமியோட ஜனதா கட்சியில ஒரு முக்கிய பொறுப்புல கூடவே இருந்துச்சு.

ஜெயலலிதா ஸ்பிக் பங்குகள வாங்கும்போது, அவங்களுக்கு ஒத்துப்போகலங்கிற ஒரே காரணத் துக்காக... ரெண்டுபேருக்கும் வாய்த்தகராறு ஆகுது. அது ஒரு கட்டத்துல பெரிய அளவுல போய் சந்திர லேகா முகத்துல ஆசிட் அடிக்க வச்சி... சந்திரலேகா முகத்தையே அலங்கோலப்படுத்திட்டாய்ங்க.

இது நடந்தது எக்மோர்ல... அதுவும் பட்டப்பகல்ல நடந்துச்சு இந்தக் கொடும.

pp

"யார்ரா... ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மூஞ்சியில ஆசிட் அடிச்சது...? இதுக்கு யாரு காரணமா இருக்கும்'னு ரூட் எடுத்துப் போனோம். சுர்லாங்கிறவன்தான் இதச் செஞ்சிருக்கான்னு கண்டுபுடிச்சி முதல் முதலா இந்தச் செய்திய நாமதான் வெளில கொண்டுவந்தோம்.

சுர்லா. இவன்தான் சந்திரலேகா முகத்துல ஆசிட் அடிச்சது.

மதுசூதனனும் இன்னொரு அ.தி.மு.க. மினிஸ்டரும்தான் பாம்பே போய், சந்திரலேகா முகத்துல ஆசிட் அடிக்கிறதுக்கு சுர்லாவ ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க.

பாம்பேல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து காரியத்த முடிச்சிட்டு திரும்பவும் சுர்லா பாம்பேக்கு போயிடுறான்.

அப்புறம் அரெஸ்ட் ஆகி, விசாரணையில சுர்லா... "என்ன, பாம்பேல இருந்து இந்த அமைச்சரு, இன்னொரு அமைச்சரு... இவங்கதான் இங்க கூட்டிட்டு வந்தாங்க...''ன்னு மாஜிஸ்திரேட் கோர்ட்ல அவன் ஓபனா ஸ்டேட்மெண்ட் குடுத் தான்... கத்துனான்... கதறுறான்... கேக்க நாதியில்ல. கடைசில... அவன் எய்ட்ஸ் வந்து செத்துப்போயிட் டான். "சுர்லாவுக்கு எய்ட்ஸ் எப்படி வந்துச்சு? எப்படிச் செத்தான்?'ங்கிறதுக்கு பின்னால ஒரு கதை இருக்கு. (அத இன்னொரு இடத்துல சொல்றேன்)

"சரி... இப்ப இதுல என்னய்யா சொல்ல வர்ற?'ன்னு எல்லாரும் கடுப்பாயிருப்பீங்க...!

இப்படி சந்திரலேகா மூஞ்சிய பாழ்படுத்துன அ.தி.மு.க., அ.தி.மு.க.வ சேர்ந்த மந்திரி... மதுசூதனன்.

மத்தவங்கன்னா என்ன பண்ணுவாங்க...?

ஆசிட் அடிச்ச மூஞ்சி... டெய்லி அந்த மூஞ்சிய கண்ணாடில பாக்குறப்பல்லாம் எதிரியோட ஞாபகம் வரும்... அப்ப கோபம் வரும்... விடக்கூடாதுன்னு நினைப்பு வரும்...

மதுசூதனன், கூடப்போன இன்னொரு மந்திரி, ஜெயலலிதா... எல்லாரும் சந்திரலேகா ஞாபகத்துல வரணும்ல...?

நமக்கெல்லாம் அப்படித்தான் வரும்? ஆனா.... இங்க அப்படியே எல்லாம் தலைகீழாப் போச்சு.

ll

ஏன்னா... டீ பார்ட்டி வச்சு, ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆயிட்டாய்ங்கள்ல ஜெயலலிதாவும் சு.சாமியும். அதே மாதிரி இந்தம்மாவும் "நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாக அமையட்டும்'னு ஒரு ரியாக்ஷனுமே இல்ல.

இந்தப் படத்தப் பாருங்க. ஆஸிட் வீச்சுக்குப் பிறகு நடந்த ஒரு போராட்டம்... சு.சாமி இருக்காரு. பக்கத்துல அண்ணன் திருநாவுக்கரசு இருக்காரு. அவரு பக்கத்துல மேடம் சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., அவங்க பக்கத்துல மதுசூதனன் இருக்காரு. பாருங்க... எவ்வளவு பவ்யம்...?

என்ன பேசிக்குவாய்ங்க...!

"தெரியாம நான்தாம்மா ஆசிட் அடிச்சிட்டேன்'' அப்படிங்கிறாரா?

"சரி... சரி... அதனால ஒண்ணும் இல்ல... அத நான் மறந்துட்டேன்'' அப்படிங்குதா இந்தம்மா...

"என்ன மன்னிச்சிரும்மா...''ன்னு மதுசூதனன் சொல்லுறாரா...? "இல்ல... இவ்வளவு அடிச்சிருந்தும் ஒங்களுக்கு வெக்கமே இல்லியா?''ன்னு கேக்குறாரா?

pp

"எனக்கு வெக்கமே கெடையாது'' அப்படின்னு அந்தம்மா சொல்லுதா?

எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்...!

இப்ப ஏன் இந்த சுப்பிரமணிய சாமி, சந்திரலேகா இவங்களப் பத்தியெல்லாம் ஒங்கள்ட்ட சொல்றேன்னா...

வெரட்டி... வெரட்டி... ஆள காலி பண்ணீரணும்னு ஜெயலலிதா வெச்சிருந்த லிஸ்ட்ல சுப்பிரமணியசாமி இருக்காரு, சந்திரலேகாவும் இருக்காங்க. இன்னும் நெறைய பேரும் இருந்தாய்ங்க. ஆனா கடைசி வரைக்கும் ஸ்டெடியா நிக்கிறது...? அத உங்க யூகத்துக்கே விட்டுர்றேன்.

எவ்வளவு பெரிய உசுரு பயத்தோட சுப்பிரமணியசாமி இருந்தாரு. அதேமாதிரி, சந்திரலேகாவோட அழகான முகத்த அகோரமாக்குன ஜெயலலிதா, அந்தம்மா கூடவே இருக்கிற மதுசூதனன்... இவங்க எல்லாருமே ஒண்ணுமண்ணா ஆயிட்டாய்ங்க.

"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...'ன்னு ஒரு படத்துல கவுண்டமணியண்ணன் சொல்றது மாதிரி, இவ்வளவு கேவலமாவா ஒண்ணு சேருவாய்ங்க?

சூடு, சொரணை இதை யெல்லாம் பொதுவா அர சியல்ல எதிர்பாக்கக் கூடாதுன்னு சொல்லு வாய்ங்க. ஆனா... இது ரொம்ப ஓவர்...!

ராயப்பேட்டை ஆபீஸ். ராத்திரி நேரம். மேல இருந்த எல்லா போலீசும் திபு... திபு...ன்னு கீழே ஓடியாறாங்க. க்ரவுண்ட் ப்ளோர்ல இருக்கிற லிஃப்ட்ட பாக்குறாய்ங்க. லிஃப்ட்டுக்கு அடியில இருக்குற பள்ளத்த செக் பண்றாய்ங்க. அதுக்குள்ள நான் இருப்பனான்னு உத்து... உத்து... லைட் அடிச்சுப் பாத்திருக்காய்ங்க. நாலஞ்சு பெருச்சாளிங்க தான் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடியிருக்கு. காலக்கொடுமய எங்க போய்ச் சொல்ல...?

எல்லாரும் வடை போச்சேங்கிற கணக்கா மூஞ்சிய தொங்கப் போட் டுட்டு கேட்டுக்கு வர்றாய்ங்க. கதவத் தொறந்து வெளிய போறாய்ங்க... கைய பிசையுறாய்ங்க... "உச்...' கொட்டுறாய்ங்க...

கொஞ்சநேரம் ஆச்சு... ஏ.சி. செந்திலுக்கு ஒரு போன் வருது. 'வங்ள் நண்ழ்... 'னு சொல்லிக்கிட்டே வெளியே போறாரு. இவருக்கு மேல டி.சி. பாஸ்கரன்னு ஒரு அதிகாரிட்ட பேசுறாரு. சைகைல எல்லா போலீசையும் கூப்பிடுறாரு. கேட்டுக்கு வெளிய இருந்த எல்லா போலீஸும்.... பெரிய கேட்ட உடைக்கிற மாதிரி ஃபோர்ஸா தொறந்துட்டு சட... சட...ன்னு உள்ள வர்றாய்ங்க.

'தன்ய்...' எல்லாரும் மொட்டமாடிக்கு போங்க 'நங்ழ்ண்ர்ன்ள்...'னு கத்த... மொத்த ஆம்பள போலீஸும், பொம்பள போலீஸும் பயங்கரமான சத்தத்துல வங்ள் நண்ழ்...ண்டு சவுண்ட் வுட்டுட்டு தட... தட...ன்னு ஏறுனவுடனே இவிய்ங்க போட்ட சத்தம், பூட்ஸ் சவுண்டு எல்லாத்தை யும் கேட்ட பைண்டிங்ல இருந்த பொம்பளைங்க வீல்...னு சத்தம் போடுதுக. இன்னொரு ரௌடி குரூப்தான் மேல வந்துருச்சோன்னு நெனச்சு... மேலயும் கீழயுமா தெறிச்சு ஓடுதுங்க. ஏதோ போலீசு பரேடு எடுக்கிற மாதிரி எடுத்து நமக்குப் பெரிய கிலியக் கொடுத்துட்டாய்ங்க.

pp

போலீஸோட திட்டமே நக்கீரன்ல யாரும் வேலையே செய்யக்கூடாது, வேலைக்கு வரக்கூடாது, நக்கீரனுக்கு ஒரு நாதியும் இல் லன்னு ஆகி... பெரிய பூட்டப் போட்டுட்டு ஓடிரணும்ங்கிற திட்டத்தோடயே போலீஸ் பொறுக்கித்தனம் பண்ணுச்சு. இதுக்குன்னு வந்தவர்தான் உ.ஈ. பாஸ்கரன்ங்கிற போலீஸ் அதிகாரி. அந்த ராத்திரிக்கு மேல வந்து தாட்... பூட்... தஞ்சாவூர்...னு ஒரே ரவுசு காட்டியிருக்காரு. இது எல்லாத் தையும் தம்பிக, எனக்குப் போன்ல சொல்லும்போது, "ஏண்டா நாசமா போறவிய்ங் களா... பதவியில இருக்குற ஒரு பொம்பள சொல்லிருச்சுன்னு, இவிய்ங்க பதவிய காப்பாத்த எவ்வளவு அட்டகாசம்லாம் பண்ணுனாய்ங்க?. "இவிய்ங் களுக்கு ஒரே குறி... கோபால் உசுரோட இருக்கக்கூடாது!'

"ரௌடிக புகுந்துட்டாங்க... அடிக்க வர்றாங்க'ன்னு கத்திக்கிட்டே பொம்பளைங்க அலறியடிச்சு ஓடிவந்ததப் பாத்த, மூணாவது மாடி ஆன்லைன் செக்ஷன்ல இருந்த நம்ம தம்பிங்க கார்த்தி, ராஜவேல், கம்ப்யூட்டர் செக்ஷன்ல இருந்த தாணு எல்லாரும் தப்பிக்கிறதுக்காக விழுந்தடிச்சு மாடிக்குப் போய் அந்தப்பக்கமா இருக்குற சுவர் ஏறிக்குதிச்சு, ஐயோ...ன்னு கத்தி... ஒரே களேபரம்...

இப்ப நான் எழுதும்போது, வெளிய இருந்தப்ப நடந்தத தம்பிகள்ட்ட ஒண்ணுவிடாம கேட்டுத்தான் எழுதுறேன். யோசிச்சுப் பாருங்க... அந்த இருட்டு நேரம்... எப்படியெல்லாம் அல்லோலப்பட்டிருப்பாய்ங்க!

ரௌடிக் கும்பலாட்டம் பூட்ஸ் காலோட திமு... திமு...ன்னு மாடி ஏறி, மொட்டமாடிக்குப் போன போலீஸ்காரய்ங்க.... என்ன பண்ணுனாய்ங்கன்னா....?

(புழுதி பறக்கும்)