(96) தப்பி ஓடிய சு.சாமி!
கவர்னரோட பெர்ஸனல் செக்யூரிட்டி தலைவர் ஏ.டி.சி. ராதாகிருஷ்ணன் கார விட்டு இறங்கி வந்து, அனுமதி இல்லாம திடீர்னு கலகம் பண்ணுன தொண்டர்கள சமாதானப்படுத்த அடி எடுத்து வைக்க, எங்கிருந்தோ வந்த கனமான மொரட்டு செங்கல்... ஏ.டி.சி. சாரோட நெஞ்சைத் தாக்க... நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டே வந்தவரு... மயங்கிவிழாத குறைதான். தட்டுத் தடுமாறி கவர்னர் காருல ஏறுன அவருக்கு கவர்னரே முதலுதவி செஞ்சிருக்காரு. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல...
கவனிங்க சார்... மத்த இடங்கள்ல போலீஸ் மேல ஒரு சின்ன கல் விழுந்தா கூட, "லத்தி சார்ஜ்...'ம்பாய்ங்க. ஆனா இத்தாத் தண்டி செங்கல்லு... அதுவும் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி மேல விழுந்திருக்கு... ஆனா சர் ஆஸ்ரீற்ண்ர்ய். இதுதான் ஜெயலலிதா போலீஸ். ஜெயலலிதா ஆட்சியில அவங்க போலீஸுக்கு கை, கால் போனாலும்கூட சர் ஆஸ்ரீற்ண்ர்ய். இதுக்கெல்லாம் பின்னாடி தேவாரம் இருப்பாரு. அவருதான்... ஜெ. போலீஸுக்கு கண்ட்ரோல். இது அ.தி.மு.க.காரய்ங்களுக்கு தொக்காப் போச்சு.
அ.தி.மு.க.காரய்ங்க, கவர்னர் காரை குறி பார்த்து கல்லு வீச... டென்ஷனாகிப்போன பாதுகாப்பு படை, கவர்னரின் அனுமதியைக் கேட்க... அப்பவும் அவர் அனுமதி குடுக்கல. பட்டப்பகல்ல, நடு ரோட்டுல கவர்னர் மேல நடந்த இந்த கோரத் தாக்குதல் கிட்டத்தட்ட 50 நிமிஷத்துக்கு மேல நீடிச்சுச்சு.
இந்தக் கலவரத்தப் பத்தி எதுவும் தெரியாம சுப்ரமணியசுவாமி, அப்போ பாண்டிச்சேரிக்கு ஒரு பொதுக்கூட்டதுல கலந்துக்கிறதுக்காக வந்துக்கிட்டி ருந்தாரு. ஒரே டிராஃபிக்ஜாம். திடீர்னு கவர்னர் மேல தாக்குதல் நடந்தத கேள்விப்பட்ட சு.சாமி, தனது கார்ல இருந்த டெலிபோன் மூலமா கவர்னரோட பேசியிருக்காரு. அந்த நேரத்துல தொடர்ச்சியா கல் மழையா பொழிஞ்சிக் கிட்டிருந்திருக்காய்ங்க அ.தி.மு.க.காரய்ங்க. அப்ப, சு.சாமிய சென்னைக்குத் திரும்பிப் போகும்படியா கவர்னர் கேட்டுக்கிட்டாராம். அதனால சு.சாமியும் பாதி வழியிலயே... சென்னைக்கு திரும்பிட்டாரு.
கவர்னர் மேல பயங்கர தாக்குதல் நடந்தது தெரிஞ்சு, மாவட்ட எஸ்.பி. ஓடோடி வந்து "தாக்குதல நிறுத்துங்க'ன்னு அ.தி.மு.க.காரங் கள்ட்ட கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு. நோட் திஸ் பாயிண்ட் கெஞ்சல் மட்டும்தான், சர் லத்தி சார்ஜ். "கலைஞ்சு போங்க... ப்ளீஸ், கலைஞ்சு போங்க...'ன்னு அவரு கெஞ்சுன கெஞ்சல் இருக்கே.... ஐயோ, பிச்சைக்காரங்க கெஞ்சுறத விட கேவலமானதா இருந்துச்சாம்.
சாதாரண பொதுஜனங்கள் குடிதண்ணிக் காக போராடுனாலே லத்தி சார்ஜ், கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடுன்னு நடத்துற காவல்துறை அதிகாரிங்க, அ.தி.மு.க.காரய்ங் கிட்ட மண்டிபோட்டு கெஞ்சாத குறையா கெஞ்ச... அந்த கெஞ்சலுக்காக அ.தி.மு.க.காரய்ங்க இரக்கப்பட்டாங்களோ என்னமோ, ஒருவழியா கவர்னரோட காருக்கு வழி விட்டாய்ங்க. பாண்டிச்சேரிக்கு போன கவர்னர், உடனடியா நடந்த சம்பவத்தை ஃபேக்ஸ்ல பிரதமர் வீட்டுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வச்சாராம்.
சென்னை வந்த சாமி, தனது அலுவலக மாடியில் பாதுகாப்பாக உட்கார்ந்து, டெல்லிக்கு பேசியிருக்காரு. டெல்லியில இருந்து சு.சாமிக்கு தொலைபேசி மூலமா அவங்க பேசுனப்ப... "சாமி இல்ல, பாம்பே போயிட்டார்'னு பதில் தந்தாங்களாம். சு.சாமி ராத்திரி 7:30 மணி அளவுல பாண்டிச்சேரியில் இருந்த கவர்னரோட பேசி, அடுத்தகட்ட நடவடிக்கைகளப் பத்தி விவாதிச்சிருக்காரு. அப்போ... இப்படியான ஒரு தாக்குதலை எதிர்பார்க்கவே இல்லங்கிறத சு.சாமிட்ட பேசுன கவர்னர், வருத்தத்தோடயும்... கோபத்துலயும் சொல்லியிருக்கார்.
நம்ம கவர்னர் சென்னாரெட்டி வருத்தப் பட்டாருங்கிறத அவருகூட இருக்கிற ஜெ. போலீஸ் ஒண்ணு போயஸ் தோட்டத்துக்கு சேதி அனுப்பும். அதக் கேட்டு, இன்னைக்கி பழி தீர்ந்திருச்சுன்னு ஆனந்தக் கூத்தாடும் ஜெ. டீம்.
சு.சாமிக்குத்தான் பொத்துக்கிட்டு வந்துருச்சு. "அவாளா... இல்ல நாமளா பாத்துருவோம்'னு கவர்னர்ட்ட சபதம் போட்டாரு சு.சாமி.
கவர்னர் சென்னாரெட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா மேல வழக்குத் தொடர சு.சாமிக்கு அனுமதி குடுத்ததுல இருந்து தமிழக அரசியல் பந்து 1995-ல இவங்க மூணுபேரையும் சுத்தியே உருண்டுக்கிட்டிருந்தது.
"வழக்கைச் சந்திப்பேன், மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன், மனசாட்சிப்படி நடப்பேன்'னுல்லாம் அறிக்கை விட்டுச்சு ஜெயலலிதா. மறுபக்கம், சு.சாமி போட்ட வழக்கை தடை செய்யணும்னு ரிட் மனு போட... அந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்னிக்கு (1995, ஏப்ரல் 20) சென்னை உயர்நீதிமன்றம், வரலாற்றுலயே அப்படியொரு காணாத காட்சிகளையெல்லாம் கண்டுச்சு.
அதுக்கு முந்துனநாளு அ.தி.மு.க. தலைமைக் கழகத்துல மந்திரிகள் எஸ்.டி. எஸ்.ஸும் கண்ணப்பனும் போட்ட உத்தரவால கோர்ட்டுக்கு திரண்டு வந்திருந்த அ.தி.மு.க. தொண்டர்களும், அவங்களோட அ.தி.மு.க. மகளிர் அணியில உள்ளவங்களும் சேர்ந்து அரங்கேத்துன காட்சி இருக்கே...? அப்பப்பா... நீலப்பட காட்சிகள விட படுமோசம். அதுமட்டுமில்லாம நீதிபதிகளோட அறைகள கல்வீசியும் தாக்குனாய்ங்க. அதனால நீதிபதி அப்துல் ஹாதி, விசாரணையை ஒத்தி வச்சிட்டு அவரோட அறைக்கு கிளம்பிட்டார்.
அ.தி.மு.க.காரய்ங்களாலேயே... அவங்க அழைச்சிட்டு வந்திருந்த சமூக விரோதிகளோட அட்டகாசத்தை, கொலை வெறியை தடுக்க முடியல.
சு.சாமி, அ.தி.மு.க.காரய்ங்க கிட்ட இருந்து தப்பிச்சு நீதிபதி ரூம்ல போய் தஞ்சமாயிட் டாரு. இதனால இன்னும் அதிகமா ஆவேசப் பட்ட கொலைவெறிக் கும்பல், போலீஸ் அதிகாரிங்க முன்னாடி நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு வேட்டியை அவுத்துக் காட்டுனதெல்லாம்... ஆபாச அருவருப்போட உச்சம். இதையெல் லாம் பாத்த போலீசுக்கு கடுங்கோபம் வருது... ஆனா அவங்களால ஒண்ணுமே செய்ய முடியல. மேலே இருக்கிற ஜெ. போலீஸ் தேவாரம் கோவிச்சுக்குவாருல்ல...!
கோர்ட்டுல வாதம் நடந்துக்கிட்டிருக்கு. கடைசியா சு.சாமி பேசுறாரு. அந்த நேரத்துல கொஞ்சம் இடைவெளி கெடைக்குது. அப்ப, ஒரு துண்டு காகிதம் சு.சாமிக்கு வந்து சேருது. அதுல, "உங்களை கைது செய்யக் காத்திருக்கிறார்கள்'ங்கிற சேதி. அதப்பாத்து சு.சாமி சீரியஸாயிட்டாரு. உடனே நீதிபதிகிட்ட தன்னோட நெலமைய எடுத்துச் சொல்ல... "மறுநாள் காலை 11 மணிவரை சாமியை கைது செய்யக்கூடாது'ங்கிற உத்தரவப் போட்டதோட, விசாரணை தேதியை பிறகு அறிவிக்கிறதா கோர்ட் கலைஞ்சது.
இப்ப வெளிய போயாகணும்... என்ன பண்றதுன்னு யோசிச்ச சு.சாமி, பதுங்கி... பதுங்கி... நீதிபதிகள் போகுற வழியா வெளியேற ப்ளான் பண்ணி, கோர்ட் வளாகத்தில இருந்து வந்து வேன்ல ஏறுறபோது... அடிசனல் டி.ஜி.பி. தேவாரம் தலைமையில வேன் மறிக்கப்படுது. கமிஷனர் ராஜகோபாலன் கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டிருந்தாரு. சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவி உயர்வு கனவுல இருந்த தேவாரம் சு.சாமியை கீழே இறங்கச் சொல்ல....
சி.ஆர்.பி. சப் இன்ஸ்பெக்டர் ரேங்கில் உள்ள ஒருத்தரு, "சு.சாமியை நாளைக்கு காலை 11 மணிவரை கைது செய்யக்கூடாதுன்னு கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. அதை மீறி நீங்க செயல்பட்டா... நாங்க கடுமையான நடவடிக்கையில இறங்குவோம்'ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்றாரு. தன்மானத்த இழந்த தேவாரத்துக்கு மீசை கூட துடிக்கல.
ஏன் இந்த அவசர கைது? எதுக்காக சு.சாமி பதுங்குனாரு...?
"இண்டர்நேஷனல் பறையர்'னு விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரன விமர்சனம் செஞ்சது னால, சு.சாமி மேல வழக்குப் பதியும்படி முதலமைச்சர் உத்தரவு போட்டாரு.
சு.சாமி, ரொம்ப தெனா வெட்டா நம்மள யாரு கைது செய்றதுன்னு அலட்சியமா இருக்க... 17-ந் தேதி ராத்திரி டி.ஜி.பி. ஸ்ரீபால், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. பெருமாள்சாமிய கூப்பிட்டு, "சு.சாமிய கைது செய்யுங்க'ன்னு உத்தரவு போடுறாரு.
அதுக்கு ஒரேயடியா மறுத்துட்டு, பெருமாள்சாமி வெளியேறுறாரு.
அந்த நேரம் பாத்து, கமிஷனர் ராஜகோபாலன் "நான் கைது செய்றேன்'னு ஸ்ரீபால்கிட்ட வீராப்பா சொல்ல... உடனே அவர களத்துல இறக்குனாங்க. தடாலடியா சென்னை கமிஷனர் ஆபீஸ்ல உள்ள ஜெனரல் செக்ஷன்ல புகார வாங்கி, அந்தப் புகார் மனு 18-4-95 அன்னிக்கு ராத்திரி 11:00 மணிக்கு மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் மூலமா போய் சேர்ந்துச்சு.
மதுரை அசோகா ஹோட்டல்ல தங்கியிருந்தபோது சு.சாமி, தம்பி பிரபாகரனப் பத்திப் பேசுனதால, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர். போட்டாங்க. என்னென்ன செக்ஷன்ல வழக்குப் போடணும்ங் கிற தகவலையும் தேவாரமே தன் கைப்பட எழுதி ஃபேக்ஸ்ல அனுப்பி யிருந்தாரு. ராத்திரியோட ராத்திரியா எஃ.ப்.ஐ.ஆர் போட்ட இன்ஸ் பெக்டர் அப்துல் ரகுபீர்... நடுராத்திரி 2:00 மணிக்கு நீதிபதி ஏ.கே.ராஜன் வீட்டுக் கதவத் தட்டுனாரு.
இன்னும் நெறைய கூத்து இருக்கு...!
(புழுதி பறக்கும்)