dd

(234) கொளத்தூர் மணி, செந்தாமரைக்கண்ணன்,

சண்முகப்பிரியா... -வீரப்பன் மனைவி வாக்குமூலம்!

ணக்கம்!

Advertisment

"ராஜகுமாரன்'ங்கிற தமிழ் சினிமாவுல வடிவேல்கிட்ட நம்ம கவுண்டமணி அண்ணனும், செந்தில் அண்ணனும் மாறி, மாறி தங்கள தரைமட்ட லெவலுக்கு பேசிக்குவாங்க. அதைக்கேட்டு வடிவேலு... "நிறுத்துங்க'ன்னு சத்தம் போட்டுட்டு...

ஒரு விஷயம் சொல்லுவாரு...

"தங்கச்சி, உண்மையச் சொல்றவங்கள தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாய்ங்க. இவுங்க ரெண்டுபேரும் மாறி, மாறி உண்மையச் சொல்றானுங்க. இந்த ரெண்டு தெய்வத்துல ஏதாவது ஒரு தெய்வத்துக்கு மாலையப் போடு...''ன்னு சொல்வாப்டி.

Advertisment

இந்த டயலாக் இப்ப யாருக்குப் பொருந்தும்னா நம்ம அண்ணன் வீரப்பன் நயவஞ்சகமா கொல்லப்பட்டாப்டி. இந்தக் கொலைக்குப் பின்னாடி, "வீரப்பனே நான்தான்... நான்தான்...'னு சொல்ற படவால இருந்து கொஞ்சபேரு இருக்கிறாய்ங்கன்னு முன்னமே சந்தேகம் இருந்துச்சு. கொடுமை என்னன்னா, வீரப்பனோட அன்பு துணைவியார் முத்துலட்சுமி ரொம்ப காலமா மனசுல வச்சுருந்தத இப்ப சமீபமா ஒரு வீடியோ பேட்டியில கொட்டியிருக்காங்க. தன் கணவர் சாவுக்கு யார், யார் மேல சந்தேகம்னு வரிசைப்படுத்துறாங்க..

"போர்க்களம்' போறபோக்குல எதையும் விட்டுறாம இருக்கணும்னுதான் சகோதரி முத்துலட்சுமி வீரப்பன் பேசுன பேச்சை, இப்ப உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். வீரப்பன் பாஷையில சொல்லணும்னா... "தப்பு யாருதுன்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க....'

வீடியோல முத்துலட்சுமி பேசுனத பார்ப்போம்.

"நான், மணி அண்ணனுக்கு (கொளத்தூர் மணி) போன் பண் றேன். அண்ணா... எதாவது தகவல் வந்துச்சாண்ணா?'' அப்படின்னுட்டு.

"ஆமாம்மா... வந்தாங்க. நானும் அப்புறமா போய் பாக் கல. பசங்களத்தான் அனுப் பிச்சுவுட்டேன்'' அப்படிங்கிற மாதிரி ஒரு தகவல் சொன்னாரு.

அப்புறம் சரின்னுப் புட்டு மறுபடியும் கொஞ்ச நாளு கழிச்சு போன் பண்ணு னேன். போன் பண்ணுனப்ப, "இந்த மாரி கேசட் குடுக்கு றாங்கண்ணா. இப்ப இருக்கிற சூழ்நிலையில இங்க இந்தப் பொண்ணு காருல்லாம் ஓட் டுது. கோத்தகிரில அவங் களுக்கு ஏதோ எஸ்டேட்லாம் இருக்குது. அந்தப் பக்கம் மாயாத்தி சைடுல இருந்து, அந்தப் பக்கமா வந்தா யாருக் கும் தெரியாது. வரமுடியும்னா சொல்லுங்கண்ணா... தகவல் குடுங்கண்ணா' அப்படின்னு சொல்லிச் சொன்னேன். அப்புறம் "கேசட் பேசிக் குடுக்கட்டுமாண்ணா?''ன்னு கேட்டேன். நானாத்தான் கேக்குறேன்... பொய்யெல்லாம் பேசமுடியாது. அவரு எதுவும் கேக்கல என்னுட்ட. நானாத் தான் போன்பண்ணி கேக்கு றேன். கேக்கும்போது என்னாச் சுன்னா...''

"சரிம்மா கேசட் பேசி குடுத்து வுடுங்க. எதோ பக்கமா வர்றது மாதிரி தகவல் சொன்னாங்க'' அப்படின்னு என்கிட்ட சொன்னாரு.

அப்ப நானே போய் கேசட் வாங்கி, டேப் பேசி... (இதுக்கெல்லாமே பிரியா கூட இருக்கிறா) கொண்டுபோயி குடுக்கிறதுக்கு, இந்த மாதிரி வரேண்ணான்னு சொன்னப்ப, ஈரோடு வரச்சொன்னாரு. ஈரோடு வந்துட்டிருக் கேண்ணா அப்படின்னேன். "நான் மீட்டிங்ல இருக்கிறேன், நான் வரமுடியாது. ஒரு ஆளு அனுப்புறேன், ஆக்ஸ்போர்டு ஹோட்டல்கிட்ட கொண்டாந்து குடு'' அப்படின்னு சொன்னாரு.

ff

நான் அந்த கேசட்டுல "இந்த மாதிரி வந்து பாருங்க. இந்த மாதிரி இடம் இருக்குது. ஒரு பொண்ணோட வீட்டுல இருக்கிறேன். யாருக்கும் தெரியாது'' அப்படின்னு சொல்லி சில விஷயங் கள்லாம் அதுல பேசியிருந்தேன். நாங்க வடவள்ளி யில குடியிருக்கிறோம். வடவள்ளில இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு காந்திபுரம் டவுனுக்குள்ள போறதுக் குள்ள இவ வந்த வண்டி ஏதோ ரிப்பேர்னு சொல்லிட்டு, அந்த வண்டிய அங்கயே நிறுத்திட்டு, "இருங்க... கொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க முத்துலட்சுமி. எங்க ப்ரெண்ட் ஒருத்தரு இருக்காரு. அவர கார எடுத்துட்டு வரச்சொல்றேன், அப்படிங் கிறா. அப்போ எனக்கு செந்தாமரைக்கண்ணன் யாருன்னு தெரியாது. செந்தாமரைக்கண்ணன் அந்தக் கார எடுத்து ஓட்டிட்டு வந்திருக்காரு. இவருதான் செந்தாமரைக்கண்ணன்னு எனக்குத் தெரியாது. செந்தாமரைக்கண்ணனும் சண்முகப் பிரியாவும் முன்சீட்டுல உக்காந்திருக்காங்க. செந்தாமரைக்கண்ணன் டிரைவிங் பண்றாப்டி. நான் அப்படியே பின்னாடி போறேன். மூணு பேருதான் போறோம்.

போயி ஆக்ஸ்போர்டு ஹோட்டல்கிட்ட கார நிறுத்திட்டுப் போன் பண்றேன். அந்தப் பையன் பக் கத்துல இருப்பான்னு சொல்றாரு. அந்தப் பையன் பக்கத்துல போனவுடனேயே, ஒரு ப்ளாக் சட்ட போட்டுட்டு, கருப்பா இருந்தாப்டி. பேரெல்லாம் எனக்குத் தெரியாது. அவரு கையில கேசட்ட குடுத்துட்டு வந்தேன். குடுக்கும்போது செந்தாம ரைக்கண்ணன் கூடத்தான் இருக்காரு. செந்தாமரைக் கண்ணன் சொல்றது, "கோத்தகிரியில வச்சுதான் கொல்றதுக்கு நாங்க ஏற்பாடு பண்ணுனோம், முத்துலட்சுமி மூலமா. பாம் செட்பண்ணு னோம்னு சொல்றாரு. அப்ப பாம் செட்பண்ணி யிருந்தோம்... அவர் வந்துட்டு... பாதியில திரும்பிப் போயிட்டாரு'' அப்படின்னு சொல்லி.

அப்ப... இந்த கேசட் மணி அண்ணன் மூலமாத் தான அங்க போயிருக் கணும். அந்த கேசட் செய்தி கேட்டுருந்தாதான அவரு வந்திருக்க முடியும்?

அப்ப நீங்க திரு.கொளத்தூர் மணி அவர்கள் மீது சந்தேகத்த எழுப்புறீங்களா?

முத்துலட்சுமி: ஆமா! செந்தாமரைக்கண் ணன் தொடர்ந்து கொளத்தூர் மணிய... அவர் மேல நான் குற்றம் சொல்லல. ஏன்னா... அவங்ககிட்ட ஆதாரம் திடமா மாட்டிக்கிச்சு. மணி அண்ணன் ஈழத்துக்கு கூட்டிட்டுப் போறாருங்கிற ஆதாரத்தோட போலீஸ்கிட்ட மாட்டிட்டாரு. மாட்டுனதுனால போலீஸ் நெருக்கடிக்குப் பயந்துட்டு இதவந்து... இது பண்ணியிருக்கலாம்ங் கிறதுதான் என்னுடைய இது.

போறபோக்குல அவர்மீது வைக்கக்கூடிய ஒரு குற்றச்சாட்டு மாதிரி இல்லையா?

dd

முத்துலட்சுமி: நடந்த உண்மையத்தான் நான் சொல்றேன். அது போற போக்குல வர்ற குற்றச்சாட்டா? அது பின்னாடி வைக்கிற குற்றச்சாட்டா? அது எனக்குத் தெரியாது. பட்... என்கிட்ட வந்து மணி அண்ணன் மூலமா செந்தாமரைக்கண்ணன் கேசட் கொண்டாந்து குடுக்கச் சொன்னது, செந்தாமரைக்கண்ணன் கூட வந்தது, எனக்கு அப்ப அது போலீஸ்னு தெரியாது. ஆனா மணி அண்ணனுக்குத் தெரிஞ்சிருக்கும். செந்தாமரைக் கண்ணன, மணியண்ணனுக்குத் தெரியாம இருக்குமா? செந்தாமரைக் கண்ண னுக்கு மணிய தெரிஞ் சிருக்கும். அப்ப... அப்பவே தெரிஞ்சுதான அந்த கேசட்ட கொண்டாந்து குடுக்கச் சொல்றீங்க? அப்ப எனக்குத்தான் தெரியாது எதுவுமே. மணி அண்ண னையும் நம்புறேன். சண்முகப்பிரியாவை யும் நம்புறேன். இந்தக் கேரக்டர்கள நான் நம்புறேன். நான் நம்பி, நம்ம புருஷன் வரட்டும்... நம்ம குழந்தைகள வந்து பாக்கட்டும்னு நம்பு றேன். நம்பிக் கொண்டு போய் அந்த கேசட்ட குடுக்குறேன்.

ஆனா மணி அண்ணனுக்கு தெரியும், சண்முகப்பிரியா போலீஸ் ஆளுன்னும் தெரியும், செந்தாமரைக்கண்ணன் யாருன்னும் தெரியும்.

இந்த உண்மைய அவரு என்கிட்ட சொல்லலியே? "இல்லம்மா... கேசட்லாம் குடுக்காத. இவங்க போலீஸ் ஆளு அப்படின்னு ஒரு வார்த்தகூட எங்கிட்ட சொல்லலியே?

வீரப்பன்... அவருடைய மரணத்துக்குப் பிறகு இது சம்பந்தமா என்னைக்காவது திரு.கொளத்தூர் மணிகிட்ட கேட்டீங்களா...?

முத்துலட்சுமி வீரப்பன் சொன்ன பளிச் பதில்...

(புழுதி பறக்கும்)