(133) ஜெ.மீது 42 சீட்டிங் கம்ப்ளைண்ட்!
போர்க்களத்துல ஜெயலலிதாவோட பன்முகத்தையும் நாம காட்டிக்கிட்டே இருக்கோம். இன்னும் சொல்லணும்னா இப்ப, கொஞ்சம் வெளியே போறோம்... மறுபடியும்!
ஜெயலலிதாவே களத்துல இறங்கி, தன்னுடைய கோபத்த பப்ளிக்கா ரோட்டுல யாரும் பார்க்கிறாங்கன்னுல் லாம் கவலப்படாம, தன் காலால ஒருத்தர் வீட்டுக் கதவ எட்டி உதைச்ச கதை ஒண்ணு இருக்குன்னு சொல்லியிருந்தேன். அத இப்ப பார்ப்போம்.
ஜெயலலிதாவோட ராஜினாமா கடிதம். அது நடராஜன் வீட்டுக்கு வந்தது, போலீஸ் ரெய்டு பண்ணுனது, பத்திரிகையில ராஜினாமா செய்தி வந்தது... பிறகு அதுல எப்படி பல்டி அடிச்சதுன்னு எல்லாத்தையும் போற போக்குல முன்னாடி சொல்லியிருப்பேன்.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரைக்கும் பணத்துக்கு என்ன பண்ணும்? பணம்ங்கிற விஷயம் தனக்கு எதிரா பெருசா வந்து நின்னுச்சுன்னா... உடனே என்ன ரியாக்ஷன் பண்ணும்? அந்த ரியாக்ஷனுக்குப் பிறகு என்ன நடக்கும்? இந்த சம்பவம் எல்லாமே கொஞ்சம் சுவாரஸ்யமானது. அந்த நேரத்துல ஜெ.வோட முகத்திரை எப்படி கிழிபடுது...? கிழிஞ்ச முகமூடிய மறுபடியும் எப்படி மாட்டிக்குது. அதுக்கு எந்த லெவல்லயும் கீழ இறங்கி அடிக்கும்ங்கிறதையும் சொல்றேன்.
1989. அப்போ எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜானகியம்மா ஆட்சி. ஜானகியம்மா ஆட்சிய ஆளாளுக்கு குதிரை ஏறி கிள்ளி எறிஞ்சுடுறாய்ங்க. அந்தம்மா மூணு மாசம் கூட முதலமைச்சரா இருக்க முடியல. இரண்டு காலையும் வாரி பொதுக்கடீர்னு கீழ சாய்ச்சுப்புட்டாய்ங்க ஜெயலலிதாவோட அடிவருடிங்க. ஆனா தமிழகத்தோட முதல் பெண் முதலமைச்சர்னா அது ஜானகியம்மாதான். 89-ல தேர்தல் வருது. எம்.ஜி.ஆர். செத்ததும், அ.தி.மு.க. ரெண்டா பிளவுபடுது. ஜா. அணி, ஜெ. அணின்னு தேர்தல சந்திக்கிறாய்ங்க. இரட்டை இலை முடக்கப்படுது. ஜானகியம்மாவுக்கு இரட்டைப் புறா சின்னமும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் கிடைச்சது.
தேர்தல்ல கட்சிக்காரங்களுக்கு டிக்கெட் தரணும்ல. ஒவ்வொரு தொகுதிக்கும் சீட் வேணும்னா, முதல்ல பணம் கட்டணும். அதுதான்... ரொம்பக் கொடும! தலைமைக் கழகம், நக்கீரனால ஜெ.வுக்கு சாதகமா தீர்ப்பாச்சு. அ.தி.மு.க. தலைமைக் கழகம் நக்கீரனாலத்தான் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பானதுங்கிறது பெரிய கத. அத முன்னாடியே சொல்லிட்டேன்.
ஜெயலலிதா அனுமதியோட அ.தி.மு.க. தலைமைக் கழகத்துலயே கனரா பேங்க் கவுன்ட்டர் ஓப்பன் பண்ணு னாங்க. அப்போ ஒரே தொகுதிக்கு பல பேரு பணம் கட்டு வாய்ங்க. தலைக்கு 5 லட்ச ரூபாய் மினிமம்.
"எலெக்ஷன்ல, நீங்க எவ்வளவு செல வழிப்பீங்க?''ன்னு கேண்டிடேட்கிட்ட கேப்பாங்க. ஒருத்தரு 5 லட்ச ரூபாய் செல வழிக்கிறேன்னு சொன்னா... உடனே அந்த அமௌண்ட்ட அங்க வாசல்லயே இருந்த கனரா பேங்க் கவுன்டர்ல டெபாசிட் பண்ணணும். இப்போ லட்சத்த தாண்டி பல கோடி ஆயிடிச்சின்னு வச்சுக்கங்க...! ஒண்ணு, ரெண்ட தவிர, எல்லாக் கட்சியுமே அதப் பண்ணுது. அதுல கட்சி பேதம்லாம் கிடையாது.
ஆனா அந்த நேரத் துல தலைக்கு 5 லட்சத்துல இருந்து 6 லட்சம் வரைக் கும் கட்டித் தொலைச்சுருக் காய்ங்க. குறைஞ்சது 200 தொகுதி இண்ட்டு (ல) 5 லட்சம். கூட்டிக் கழிச்சுப் பாருங்க... உங்களுக்கே தலை சுத்தும். லம்ப்பா ஒரு அமௌண்ட் தேறுதுல்ல.
இப்படி... தமிழ்நாட் டுல இருக்கிற 234 தொகுதி யில, 200 தொகுதியில சேவல் சின்னம் நின்னுச்சு. பாக்கி 34 தொகுதிகள்ல சி.பி.ஐ. மற்றும் முஸ்லிம் கட்சிகள் சில நின்னாய்ங்க. மேப்படி 200 தொகுதியிலயும் சேவல் சின்னத்துல நிக்கிறதுக்கு சீட் கேட்டு பணம் கட்டுனாங்களா..., ஒரு தொகுதிக்கு 5 பேரு பணம் கட்டுவாய்ங்க. ஆனா ஒரு ஆளுக்குத்தான் சீட். அப்ப... மிச்சம் இருக்கிறங்க 4 பேரும் எலெக்ஷன் முடிஞ்சவுடன கட்டுன பணத்த கேக்க ஆரம்பிச்சாய்ங்க.
அப்போ 27 சீட்டு அந்தம்மா ஜெயிச்சுச்சு. மருங்காபுரி, மதுரை மேற்கு இந்த இரண்டு தொகுதியில தேர்தல் நடக்கல. மீதமுள்ள 232 தொகுதியில தி.மு.க. பெரும்பான்மை இடங்கள்ல ஜெயிச்சு ஆட்சியமைச்சது. வரலாறு தெரிஞ்சவய்ங் களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கும்.
நான் எதுக்கு வர்றேன்னா...?
இந்தம்மா (ஜெ.) ஒரு தொகுதியில ஒருத்தருக் குப் பதிலா 5 பேருகிட்ட காசு வாங்கிச்சு இல்லியா? அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துலயே கனரா பேங்க் கவுன்ட்டர் போடச் சொல்லி காசு கலெக்ட்டும் பண்ணுச்சுல்லியா...? சீட் வாங்குனவரத் தவிர, மிச்சம் சீட் கிடைக்காதவய்ங்களுக்கு நல்ல திருநெல்வேலி அல்வா குடுத்துட்டாய்ங்க. அப்போ... சீட்டு கிடைக்காதவன் எல்லாருமா போய் காச திருப்பிக் கேட்டுருக்காய்ங்க. இது நடந்தது 89-ல.
அப்பவே அந்தம்மா யாரையும் மதிக்காது. எம்.ஜி.ஆரையே மதிக்காதப்ப, வேற யார மதிக்கும்? யாரையும் பாக்கமாட்டேன்னுடுச்சு. போயஸ்கார்ட னப் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே...!
கம்ப்ளைண்ட் குடுக்குறதுக்கு முன்னாடி, பணம் குடுத்தவங்க கும்பலா போய் தலைமைக் கழகத்துல அப்போ முக்கிய பொறுப்புல இருந்த டாக்டர் ஹண்டே சட்டையப் புடிச்சி கிழிச்சு... பணத்த திருப்பிக் குடுக்கச் சொல்லுன்னு ரகள பண்ணி... நெலமை தகதக...ன்னு உஷ்ணம் கூடிருச்சு.
ரூபாய் கட்டி ஏமாந்த முக்கியஸ்தர்கள்ல ஒருத்தர் தேனி ஸ்ரீதர்ங்கிற பழைய அ.தி.மு.க.காரர். பர்ஸ்ட் கம்ப்ளைண்ட்ட ஜெயலலிதா மேல குடுக்குறாரு. காசு தராததுனால கடுப்பான ஒருத்தரு முதல் கம்ப்ளைண்ட் குடுத்தவுடனே, அங்கங்க எல்லா இடத்துலயும் சர...சர...ன்னு கம்ப்ளைண்ட் குடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.
எப்படி?
நம்ம பேருல 261 எஃப்.ஐ.ஆர். போட்டாய்ங் கள்ல... அதே மாதிரிதான். நான் சொல்றது 89-லயே ஜெயலலிதா மேல 42 கம்ப்ளைண்ட் இருந்தது.
என்ன கம்ப்ளைண்ட்? சாதாரண கம்ப்ளைண்ட் இல்ல.
பணத்தை வாங்கி ஏமாற்றிய குற்றம்... சீட்டிங்!
இப்போ அந்தம்மா மிரண்டுபோச்சு. என்ன இருக்கட்டும்... வாய்தான் தெரு அளவுக்கு நீளமா இருக்கும், பேச்சுல திமிரு எல்லாம் அதவிட நீளமா இருக்கும். போலீஸ் கம்ப்ளைண்ட் ஒண்ணுல இருந்து 42 வரைக்கும் வந்தவுடனே... மிரண்டு "நமக்கு அரசியல் பொழப்பு போதும்டா'ன்னு நெனைச்சிது.
இந்தம்மா மிரண்டு... "நான் இந்த ஆட்டைக்கே வரல்ல, ஆள விடுங்க சாமி'ன்னு சொல்லிட்டு... "நான் ராஜினாமா பண்ணிர்றேன்'னு முடிவெடுத்து ஒரு அறிக்கை ரெடி பண்ணுது.
அப்படியே ஷாட்ட கட் பண்ணி சட்டமன்றத்துக்குப் போறோம்.
தி.மு.க. ஆளுங்கட்சி. தமிழ்க்குடிமகன் அப்போ சட்டப்பேரவைத் தலைவர். தமிழ்க் குடிமகன எல்லாருக்கும் தெரியும். அவரு மதுரையில ஒரு கல்லூரிப் பேராசிரியரா இருந்தாரு. ஜெயலலிதா அப்போ போடி தொகுதியில எம்.எல்.ஏ.வா ஜெயிச்சு வந்திருக்கு.
ஜெயலலிதா அணி 27 எம்.எல்.ஏ.க்கள் நின்னுபோன மருங்காபுரி, மதுரை மேற்குன்னு 2 தொகுதியும் ஜெயிச்சு 29 எம்.எல்.ஏ.வோட இருந்தாய்ங்க. காங்கிரஸ், மூப்பனார் தலைமைல 25 எம்.எல்.ஏ. ஜெயிச்சாய்ங்க. கலைஞர் முதல்வர். 29 வச்சுருக்கிற ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர்.
அந்தம்மமா மேல 42 கம்ப்ளைண்ட் விழுந்துச்சுல்லியா... அதனால பயந்துபோய் என்ன பண்ணுது, ராஜினாமான்னு ஒரு ஸ்டேண்ட் எடுக்குது. போடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா பண்ணீரணும்னு லெட்டர் எழுதி தமிழ்க்குடிமகனுக்கு அனுப்புறதுக்காக போயஸ் கார்டன்ல இருந்த சுந்தரமூர்த்திங்கிறவர்ட்ட குடுத்து அனுப்பியிருக்கு. அவரு நடராஜனுக்கும் தெரிஞ்சவரு. நடராஜனும் சசிகலாவும் அப்போ போயஸ் கார்டன் லிங்க்ல வந்துட்டாய்ங்க.
ராஜினாமா பண்ணிட்டு, அரசியல விட்டு விலகுறேன்ங்கிற கடிதத்த சுந்தரமூர்த்திகிட்ட குடுத்துச்சா... இந்த விஷயமெல்லாம் நடராஜனுக்குத் தெரியவருது. மனுஷன் பதறிட்டாரு. ஏன்னா... ஜெயலலிதாங்கிற பெண், பொன் முட்டையிடுற வாத்துங்கிறத முதன்முதலா கண்டுபுடிச்சதே சசிகலாவும் நடராஜனும்தான். மத்த தலைவர்கள் கணிக்காம, கவனிக்காம விட்டத சரியா கணிச்சதும், கவனிச்சதும் இந்த நடராஜனும் சசிகலாவும்தான். "ஜெ.' சாகுறவரைக்கும் பொன்முட்டை சாகுபடிய சரியா அறுவடை செஞ்சதும் சசி கோஷ்டிதான்.
அப்ப நடராஜன் என்ன பண்ணிர்றாரு? போயஸ் கார்டன் ஜெ. வீட்டு கார்னர்ல போய் நின்னு, அந்தம்மா சுந்தரமூர்த்திங்கிறவர்ட்ட குடுத்த கடிதத்த வாங்கிட்டு "நீ போ, நான் பாத்துக்கிறேன்'னு சொல்லிட்டாரு.
இப்ப ஜெயலலிதாவோட ராஜினாமா கடுதாசி எம்.என். கையில வந்துருச்சு. அத அவரோட வீட்டுல வச்சிருக்காரு.
ஒருகட்டத்துல... அந்தம்மா கோவப்பட்டு ராஜி னாமா பண்ணிடுச்சுங்கிற தகவல் அப்போ ஆட்சி யில இருக்கிற கலைஞர் காதுக்குப் போயிருச்சு.
இந்த மாதிரி... இந்த மாதிரி... ஜெயலலிதா ராஜினாமா பண்ணிட்டாங்க. ராஜினாமா செஞ்ச லெட்டர குடுத்து அனுப்பியிருக்காங்க. அந்த லெட்டர் சட்டமன்ற சபாநாயகருக்குப் போகல... நடராஜன் அத குடுக்க விடாம தடுத்துட்டாருங்கிற செய்தியும் இன்டலிஜென்ஸ் மூலமா போகுது.
அப்போ உள்துறை செயலாளரா நாகராஜன்னு ஒரு அண்ணாச்சி இருந்தாங்க. துரைங் கிறவர் சிட்டி போலீஸ் கமிஷனரா இருந்தாரு.
அதேநேரம் ஜெயலலிதா ராஜினாமா பண்ணிட்டு அரசியலுக்கே முழுக்கு போட்டு ஊர விட்டே போகுதுன்னா... தி.மு.க.வுக்கு அல்வா கிடைச்ச மாதிரி. ஏன்னா, ஜெயலலிதா ராஜினாமா பண்ணிட்டு, ஊரவிட்டே ஜுட் விட்டுச்சுன்னா... கொஞ்சம் பிரச்சினை இல்லாம ஆட்சிய கொண்டு போகலாம். இல்லைன்னா, ஒரு புள்ளப்பூச்சிய வயித்துல கட்டுன மாதிரி ஏதாவது நொம்பலம் பண்ணி, ஆட்சி செய்யறதுக்கு இடைஞ்சல் குடுத்துக்கிட்டே இருக்கும் இந்த மேதாவி பொம்பள அதனாலதான்.
சரி... சரி... சம்பந்தப்பட்ட அந்தக் கடிதத்த நடராஜன் கைப்பத்திட்டாரு. இந்தச் செய்தி ஜெய லலிதாவுக்கும் போகுது. எப்படிப் போகுதுன்னா...?
ராஜினாமா பண்ணி அனுப்புன கடிதம், அறிக்கை எதுவும் பத்திரிகைகள்ல வரல. என்ன, ஏதுன்னு ஜெயலலிதா, சுந்தரமூர்த்திய கூப்புட்டு "என்னாச்சு?''ன்னு கேக்கும்போது, அவரும், "இந்த மாதிரி... இந்த மாதிரி... நான் லெட்டர கொண்டுபோனேன். போகையில நம்ம தெரு முனையிலயே நின்னுக்கிட்டிருந்த நடராஜன் சார், எங்கிட்ட இருந்த கடிதத்த பிடுங்கிட்டு... "போய்யா, இந்த நேரம் கடிதத்த குடுக்கக்கூடாது. அம்மா அரசியல்ல இருக்கணும். அவசரப்பட்டு அவங்க முடிவெடுத்துருக்காங்கன்னா... நாமளும் அதையே செய்யக்கூடாது'ன்னு சொல்லி என்ன திருப்பி அனுப்பிட்டாரு''ன்னு சொல்ல...
உடனே இந்தம்மா...?
(புழுதி பறக்கும்)