றுமுகசாமி கமிஷன், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சில முக்கியமான விவரங்களை கேள்வி எழுப்பியுள்ளது. அதில் குறிப்பாக சிக்குபவர்கள் சசிகலாவும், டாக்டர் சிவக்குமாரும். போயஸ் கார்டனில் ஒரு வருடமாக ஜெ.வுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் என்னென்ன மருந்துகள் உட்கொண்டார். அவர் இனிப்புகள் சாப்பிட்டார், சர்க்கரை மிக அதிகமாக இருக்கக்கூடிய ஜெயலலிதா எப்படி மருத்துவர்களால் அதிகளவு இனிப்பு உட்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அவருக்கு போயஸ் கார்டனில் இருக்கும்பொழுது என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மிக மோசமாக பராமரிக்கப்பட்டது. அது ஏன்? அதில் சந்தேகம் இருக்கிறது என அடிப்படையான கேள்வியை ஆறுமுகசாமி எழுப்பியுள்ளார்.

ff

அதற்கு அடுத்தபடியாக அப்பல்லோவில் அவர் சிகிச்சை பெறும்பொழுது காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் அவர் பங்கெடுத்தார் என ராம்மோகன் ராவ் அறிவித்தார்.

Advertisment

சுயநினைவில்லாத ஜெயலலிதா காவிரி நதிநீர் ஆணையத்தில் பங்கேற்பதும் அப்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வேட்புமனுக்களில் கையெழுத் திட்டதும் எப்படி நடந்தது? இது ஜெ.வுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சையை சந்தேகப்பட வைக்கிறது என ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மீது தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

அதேபோல ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக விவாதம் எழுந்தது. அந்த சிகிச்சை ஏன் ddஅளிக்கப்படவில்லை? அதை யார் தடை செய்தார்கள்? அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளில் சந்தேகமிருக்கிறது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி.

ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக எய்ம்ஸ் அறிக்கை வந்தபிறகு ஆறுமுகசாமி தனது கமிஷன் அறிக்கையை மாற்றியமைத்துள்ளார். அதில் எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளில் கொடுத்த அறிக்கைகளை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனை குற்றம் சாட்டவில்லை. அதேபோல் ஓ.பி.எஸ்.சையும் குற்றம்சாட்டவில்லை.

Advertisment

சசிகலா மிகநீண்ட விளக்கத்தை அளித் திருந்தாலும், போயஸ் கார் டனில் இருந்து சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஜெ. மரணமடை யும் வரை சசிகலாதான் பொறுப்பு என் பதால் சசிகலா வை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி குறிப்பிட்டுள்ளார்.

நன்றாக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, ஜெ. எப்போது வேண்டுமென்றாலும் வீட்டுக்கு போகலாம் என்று கூறினார். இறந்து போகும்பொழுது ஜெ.வின் உடலில் பொட்டாசியம் அதிகமாக இருந்தது. ஒருவர் உடலில் பொட்டாசியம் அதிகமாக இருந்தால் அவருக்கு மாரடைப்பு வரும். ஜெ.வின் உடலில் பொட்டாசியம் எப்படி அதிகமாக வந்தது என கமிஷனில் விசாரணை நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போதே ஜபருல்லாகான் என்கிற கமிஷனின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

அதே கேள்வியை ஆறுமுகசாமியும் எழுப்பி யுள்ளார். தனது அறிக்கை முழுக்க அப்பல்லோ செய்த சிகிச்சைகள் பற்றி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார் ஆறுமுகசாமி. அதில் உள்ள தவறுகளின் காரணமாகத்தான் ஜெ. இறந்து போனார் என தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆகவே ஜெ.வின் இறப்பிற்கு உறவினர் என ஜெ.வின் சிகிச்சைகளுக்கு கையெழுத்திட்ட சசிகலா, அவருக்கு உதவியாக இருந்த டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செய லாளர் ஆகியோரை ஒரு குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என ஆறுமுகசாமி பரிந்துரைத்துள்ளார்.

அமைச்சரவையில் மேலெழுந்தவாரியாக தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில் இவர்களை காவல்துறையின் தலைமையில் ஒரு குற்ற விசாரணைக்கு உட்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. அதன் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் ஜெ.வின் மரணம் புதிய விசாரணைக் களத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இது பல புதிய தகவல்களை பெற்றுத்தரும் என எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

____________________

இறுதிச்சுற்று!

பொங்கலூராருக்கு நம்பிக்கை ஊட்டிய முதல்வர் ஸ்டாலின்

rr

கோவை கொடீசியாவில், 1-9-2022 வியாழன் காலை நடைபெற்ற தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி யின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்...

"சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு 1972ல் தலைவர் தலைமை ஏற்க பொங்கலூர் பழனிச்சாமி யின் திருமணம் நடைபெற்றது. பொங்கலூரார் மகன் பைந்தமிழ் பாரியின் திருமணமும் மீண்டும் தலைவர் தலைமையில் நடைபெற்றது. தலைவர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் அவரே நடத்தி வைத்திருப் பார். கட்சிக்கு சோதனை ஏற்பட்டபொழுது கோவை மாவட்டத்தில் அரணாக நின்று கட்சியை காப் பாற்றியவர் பொங்கலூரார். அவரின் செல்வாக்கை அன்றே கண்டேன். இன்றும் காண்கின்றேன்'' என மணமக்கள் மீதான வாழ்த் துரையில் முதல்வர் பேச... பொங்கலூரார் தரப்பு குஷியில் மூழ்கியுள்ளது.

-நாகேந்திரன்