"அரசு நிறுவனங்கள் நலிவடையக் காரணம், வேலை செய்யாம ஏமாற்றும் ஊழியர்கள்தான்''’-என்று புதுவை முதல்வர் பேசிய பேச்சு, அங்கே புயலை ஏற்படுத்திவருகிறது.

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி கடந்த நவம்பர் 19ஆம் தேதி, காந்தி திடலில் நடைபெற்றது. அந்த விழாவில் மைக் பிடித்த ரங்கசாமி "ஒரு காலத்தில் புதுச்சேரியில் பாண்டெக்ஸ் தயாரிப்புப் பொருட்களுக்கு தனி மவுசு இருந்தது. கூட்டுறவுத் துறைகள் லாபகரமாக இயங்கியதால் தனியார் அதிக லாபம் ஈட்டக்கூடிய பெட்ரோல் பங்க், மதுபானக் கடைகள் ஆரம்பிக்க பாப்ஸ்கோ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தனியார் மதுபானக் கடைகள் அதிக அளவில் லாபம் ஈட்டுகின்றன. ஆனால் அருகில் உள்ள அரசு மதுபானக் கடை கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது. லாபமாக இயங்கிய கூட்டுறவு நிறு வனங்கள் தற்போது பெரும் நஷ்டத் துக்குச் சென்றுள்ளன''’என்றவர், "அதற்குக் காரணம் தொழிலாளர் கள்தான்' என்று குற்றச்சாட்டை அவர்கள் பக்கம் திருப்பினார்.

ff

Advertisment

"இந்த நட்டத்துக்குக் காரணம், ஊழி யர்கள் தங்கள் பணியினைச் சரிவர செய்யா தது தான். ஒவ்வொருவரும் வேலை பார்த்தால்தான் நிறுவனம் சரியாக செயல்படும். பல நிறுவன ஊழியர்கள் இப் போது ‘ஏதாவது ஊதியம் கொடுங்கள்’ எனக் கேட் கிறார்கள். இன்று பலருக்கு பசியில் வயிறு காயும் போதுதான் வேலை செய்யவேண்டும்’ என்ற எண் ணம் வருகிறது. அரசு நிதி ஒதுக்கி லாபத்தில் இயங்கிய போதே நன்றாக வேலை செய்திருந்தால் கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்திருக்காது. அவற்றிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்காது''’ என்று அட்வைஸ்களை அடுக்கிக்கொண்டே போனார்.

"யாரும் சரியாக ஒழுங்காக வேலை செய்வ தில்லை... அதனால்தான் நஷ்டம்' என்று அவர் ஊழி யர்கள் மீதே குற்றச்சாட்டை வைத்தது, கூட்டுறவு ஊழியர்கள் மத்தியிலும் அரசு ஊழியர்கள் மத்தி யிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து "நாம் தமிழர்' தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.இரமேஷ் நம்மிடம், "அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தியதற்காக முதல்வர் ரங்கசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். பாசிக், பாப்ஸ்கோ, பாண் டெக்ஸ், சர்க்கரை ஆலை, பாரதி, சுதேசி பஞ்சாலை களுக்கு, வாரிய தலைவர் பதவியினை முதல்வர் ரங்கசாமி, தன்னுடைய அடிவருடிகளுக்கு, தகுதி யற்றவர்களுக்கு வாரி வழங்கிய தன் விளைவு தான் அரசு சார்பு நிறுவனங்கள் நலிவடைந்தன. இன்றைய ஆட்சியில் புதுச் சேரி மாவட்ட ஆட்சியர், நக ராட்சி ஆணையர், பாண்ட்லே நிர்வாக அதிகாரி, மேலாளர்கள், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் என அனைத்து துறைகளிலும் ரங்கசாமி யின் விசுவாசிகளான அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். அரசு நிறுவனங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தன்னுடைய முதல்வர் பதவிக்காக பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையினை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்திக் கொள் கிறார். தொழிலாளர்களின் கடும் உழைப்பினால் உரு வாக்கப்பட்ட பாண்ட்லேவின் நிர்வாக சீர்கேடுகளுக் கும், கூட்டுறவு நிறு வனங்கள் நலிவடைந் ததற்கும் பொறுப் பேற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ரங்கசாமி உடனே பதவி விலக வேண்டும்'' என்றார் ஆவேசமாக.

oo

Advertisment

ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வ மோ, "முதல் வர் ரங்கசாமி தனது பொறுப்பை உணராமல் பேசு வது கண்டனத்துக்குரியது. தன்னுடைய தொகுதியைச் சார்ந்தவர்களை உரிய தொழில் திட்டம் இல்லாமல் அவர் வேலைக்கு அமர்த்தி அந்த நிறு வனங்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி னார். அலுவலகத்தில் இடம் இல்லாமல் மரத் தடியிலும், படிக்கட்டு களிலும் உட்காரவைத்து சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. நீதிமன்றம் தலையிட்டதால் கூடுதலாக பணியிலிருந்தவர்கள் நீக்கப்பட்டனர். பால் கொள்முதல் விலையை விட குறைவாக விற்பனை செய்ததால் பால் சப்ளை செய்த வர்களுக்கு ரூ.15 கோடி வரை பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் பால் சப்ளை செய்வதை நிறுத்திக் கொண்டனர். பால் தட்டுப் பாட்டால் பாண்ட்லே பார்லர்கள் மூடப் பட்டு, தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். அமுதசுரபி பெட்ரோல் பங்குகளில் அரசு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட்டுவிட்டு பணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், கட்டிட தொழிலாளர்களுக்கும் தீபா வளிக்கு இலவச பரிசு கூப்பன் வழங்கி அமுதசுரபியில் பொருட்களை வாங்கச் செய்து, கொடுத்த பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் உள்ளது. அதே போல் பான்டெக்ஸ், பாண்பேப் நிறு வனங்களின் மூலம் மக்களுக்கு இலவச கைலி, புடவை, துண்டு போன்றவைகளை வாங்கி கொடுத்துவிட்டு அதற்கான பணமும் கொடுக்கப்படவில்லை. இந் நிலையில் மீண்டும் அடுத்த ஆண்டுக் காக உற்பத்தி செய்த துணி வகைகளை வாங்காததால் ரூ.1.5 கோடி அளவுக்கு துணிகள் தேங்கி வீணாகியுள்ளது. இப்போது துணிகளுக்கு பதில் பணமாக வங்கி கணக்கில் செலுத்துகிறார்கள்.

இப்படி பொறுப்பில்லாமல், திட்டமிடல் இல்லாமல் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பல்வேறு வகையிலும் ஆட்சியில் இருப்பவர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவைகளை எல்லாம் மறைப்பதற்கு ஊழியர்களின் மீது குற்றம் சுமத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது''” என்றார் ஆவேசமாக.

po

ரங்கசாமியின் பேச்சுக்கு கூட்டணிக் கட்சியான அ.தி.மு.கவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான வையாபுரி மணிகண்டன் கூறுகையில், ‘"ஆடு நனைகிறதே என ஓநாய்’ பரிதாபப்பட்ட கதையாக கூட்டுறவு நிறுவனங்கள் மீது முதல்வருக்கு திடீர் கரிசனம் ஏற்பட்டுள்ளது. மனசாட்சி இருந்தால் அவர் தனது நெஞ்சில் கை வைத்து கூட்டுறவு நிறுவனங்களின் நஷ்டத்திற்கு தொழிலாளர்கள்தான் காரணம் என கூற முடியுமா? புதுச்சேரி அரசின் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட, ரூ.500 கோடி மதிப்புள்ள மதுபானக் கடைகளை ரூ.150 கோடிக்கு தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக தாரை வார்க்க தயாராகி வருகின்ற னர். அரசு மதுபானக் கடைகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும். எனவே கூட்டுறவு நிறுவனங் களை வைத்து பின்னப்படும் அரசியல் சதிவலைகளை முறியடிக்க தொழிலாளர் கள் ஒற்றுமையுடன் போராடவேண்டும்'' என்றார்.

இதனிடையே புதுச்சேரி கூட்டுறவு நிறுவனங்கள் ரூபாய் 99 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி கூறும்போது, "புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் அளித்த தகவலின்படி புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை 2011-ஆம் ஆண்டு கரும்பு நிலுவைத் தொகை வழங்க என ரூபாய் 10 கோடி கடன் பெற்றுள்ளது. இதேபோல் ஏ.எஃப்.டி ஆலை ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ். தொகை வழங்க பட்டானுர் நிலத்தை விற்பனை செய்து தருவதாக உறுதியளித்து 2016-ம் ஆண்டு 10 கோடி கடன் பெற்றுள்ளது. அமுதசுரபி நிறுவனம் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்குவதற்கு நிதிப் பற்றாக்குறை எனக்கூறி 3 மாத காலத்தில் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்து ரூபாய் 30 கோடி கடன் பெற்றுள்ளது. அமுதசுரபி வட்டியுடன் சேர்த்து ரூபாய் 55 கோடி, சர்க்கரை ஆலை 34 கோடி, ஏ.எஃப்.டி மில் 10 கோடி என இந்த 3 நிறுவனங்களும் பொது நிறுவனங்களிடம் சுமார் 99 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளன. ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தவறான கொள்கை முடிவு களால், செயல்பாடுகளால்தான் லாபத்தில் இயங்கிவந்த பல அரசு நிறுவனங்கள் தற்போது மூடும் நிலைக்கு வந்துள்ளன''’ என்றார்.

"சிறிய மாநிலமான புதுச்சேரி கடன் சுமையாலும், நிர்வாகக் கோளாறுகளாலும் நிலைகுலைந்துள்ள நிலையை மாற்றுவதற்கு ரங்கசாமி முன்னெடுப்பாரா அல்லது ஊழியர்கள் மீது பழி போட்டு நிர்வாகத்தை மேலும் சீர்குலைப்பாரா?' என்பது போகப் போகத்தான் தெரியும்.