க்கீரன் இதழின் சர்வே வெளியான நிலையில், மார்ச் 23-ஆம் நாள் மத்திய உளவுத் துறை டெல்லி மேலிடத்திற்கு அளித்த ரிப்போர்ட்டிலும் தி.மு.க. கூட்டணி 178 முதல் 199 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் அ.தி.முக. கூட்டணிக்கு அதிகபட்சம் 42 இடங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, ஆளுங்கட்சிகளான அ.தி.முக.-பா.ஜ.க கூட்டணி கடைசி நேர வியூகங்கள் மூலம் வெற்றி பெறுவதற்கு ஆயத்தமாகி வருகின்றது.

admk

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அ.தி.மு.கவின் மாவட்ட -மண்டல பொறுப்பாளர்களிடம் சூட்கேஸ்கள் ஒப்படைக்கப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று நக்கீரன் தொடர்ந்து சொல்லிவந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்புகூட, தேர்தல் நிதி தொடர்பான செட்டில்மெண்ட்டு களுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டது என சர்ச்சை எழுந்தது. இதுபோல பல அமைச்சர்களிடமும்-மண்டலப் பொறுப்பாளர்களிடமும் கடைசிக்கட்ட பணிகளுக்கான அஸ்திரங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றை வெளியே எடுக்க ஆயத்தமாகிவிட்டது அ.தி.மு.க.

வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 10+1 சி என்ற அடிப்பைடையில் 11 சி வழங்க வேண்டும் என்றும், அது தொகுதிவாரியாக தேர்தல் பணியில் உள்ள கட்சிக்காரர்களுக்கும் வாக்காளர்களுக்கும் பிரித்துத் தரப்படவேண்டும் எனவும் மண்டல பொறுப்பாளர்களுக்கு அ.தி.மு.க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்களுக்கு 11 சி வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

முதலில் 10 அப்புறம் 1 என இது விநியோகிக்கப்படும் நிலையில், ஒரு தொகுதிக்கான முதல் 10 சி கவனமாகக் கொண்டு சேர்க்கப்பட்டது. மறுநாள் கொண்டு வந்த 1 சியுடனான அ.தி.மு.க கொடி போட்ட கார், பெட்டவாய்த்தலை சோதனைச்சாவடியில் சிக்கியது. அதுபற்றி சோதனைச்சாவடியினர் விசாரித்தபோது, அ.தி.மு.க. முசிறி வேட்பாளர் செல்வராஜுக்குச் சொந்தமான கார் எனத் தெரியவர, அதிகாரிகள் சோதனையிட ஆரம்பித்தனர். 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் சாக்குமூட்டையில் இருந்ததைப் பார்த்த அதிகாரிகள், அவற்றைப் பறிமுதல் செய்ய முயன்றபோது சாலையில் உள்ள குப்பையில் வீசிவிட்டு காவல்துறையினரோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் காரில் வந்தவர்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் இந்த சோதனை நடைபெற்றதால் ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அலுவலரும், சார்ஆட்சியரு மான நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பணம் கொண்டு வரப்பட்ட காரையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜன், சார் ஆட்சியாளர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால், எதிர்க்கட்சியினர் தரப்பிலிருந்து புகார்கள் பறக்க, தலைமை தமிழகத் தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு 3 அதிகாரிகளையும் தேர்தல் பணியல்லாத இடத்திற்கு பணியிடை மாற்றம் செய்தார்.

Advertisment

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை இடத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்ததில், "உங்களுடைய சர்வேயும், உளவுத்துறை அறிக்கையும் எங்களுக்கு சவாலாக இருந்தாலும், அதெல்லாம் தேர்தல் களத்தில் எங்களை எதுவும் செய்யாது, நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில், வேட்பாளர்களுக்கு தலைமையில் இருந்து 11 சி கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு சராசரியாக 2 லட்சம் பேருக்கு முதல்தவணையாக ஆயிரமும், தேவைப்பட்டால் அடுத்த தவணையாக இன்னொரு ஆயிரமும் பக்காவாக விநியோகிக்க ப்ளான் போடப்பட்டுள்ளது. அதனால் சர்வே முடிவுகளை கரன்சி மாற்றிவிடும்' என்றார்.

அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, ""ஓட்டுக்கு முதல்கட்டமாக ஆயிரம் ரூபாய் என்பதை உறுதி செய்தனர். அமைச்சர் துரைக்கண்ணு மறைந்தபோது அவருடைய உடலை உடனடியாக கொடுக் காமல் வைத்திருந்து, அவரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த 300 சி தகவல் கிடைத்து, அதில் ஒருரூபாய் கூட குறையாமல் எடுத்த பிறகுதான் அவருடைய உடலையே கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக வலம்வந்து கொண்டிருந்ததையும் மீண்டும் நினைவுபடுத்தினர்.

admk

இந்தத் தேர்தலில் வாக் காளர்களுக்குப் பணம் கொடுப் பதில் ஒரு முறையை கையாள அ.தி.மு.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. தி.மு.க. எவ்வளவு கொடுக்கிறதோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்றும், அதற்காகவே தான் தலைமை எங்களுக்கு 11 சியை கொடுத்து இந்தத் தேர்தலைச் சந்திக்கச் சொல்லியுள்ளது. எனவே நாங்கள் மிகவும் தைரியமாக இருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்குப் புடவை என பரிசளித்து அதற்குள் இந்த நோட்டு வைக்கப்படும். இரண்டாம்கட்ட விநியோகம் என்பது பூத் ஸ்லிப் கொடுக்கும்போது நடக்கும்'' என்றனர்.

மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம், விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் தீவிரகவனம் செலுத்தவேண்டிய அளவுக்கு தி.மு.க. சைடிலிருந்து போட்டியை சந்தித்து வருகின்றனர். அதனால், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வைத்திலிங்கத்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான பட்டுவாடா விவரங்களை கவனிக்க முடியவில்லை. அதுபோலவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கராலும் விராலிமலை தொகுதியைத் தாண்ட முடியவில்லை.

விஜயபாஸ்கர் பொறுப்பில்தான் சிவகங்கை மாவட்டம் வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கான செலவுப் பொறுப்புகளை கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி என்ற முறையில் அ.தி.மு.க. ஏற்றாக வேண்டும். அந்தப் பொறுப்பில் இருப்பவர் விஜயபாஸ்கர்தான். ஆனால், உரிய பங்கீடு நடக்கவில்லை என பா.ஜ.க. தரப்பில் டெல்லி மேலிடத்திற்குத் தெரிவிக்கப்பட்டதால், விஜயபாஸ்கரின் கல்லூரி ஊழியர் உள்ளிட்டோரின் இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தி நெருக்கடி கொடுத்தது.

கருத்துக் கணிப்புகளின் தாக்கத்தை கரன்சியால் மாற்ற முடியும் என நினைக்கிறது அ.தி.மு.க. தலைமை. அதற்கேற்ப கூட்டணிக் கட்சிகளிடமும் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. நெருக்கடியான சூழலுக்கிடையே, திட்ட மிட்டபடி, பண விநியோகத்தை நடத்தி முடித்தாக வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் தற்போதைய வியூகம்.

-துரை.மகேஷ்

________

admk

தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டி.என்.சி. இளங்கோவனின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் 7 கோடி சிக்கியுள்ளது. இளங்கோவனுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களில் பள்ளிகள் உள்ளன. இதில் தர்மபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளில், 500 தனியார் பள்ளி களுக்கான அங்கீகாரம் தருவது தொடர்பான ஆலோசனை தேர்த லுக்கு முன் நடை பெற்று, அது தொடர் பாக வெயிட்டான கைமாறுதல்கள் நடந்துள்ளன. மீதியை தேர்தல் நேரத்தில் கொடுங்க என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு வேண்டிய அரூர் அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத் தரப்பினர் இதனைக் கையாண் டுள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த கைமாறுதல்களைப் பற்றி ஸ்மெல் செய்து, மார்ச் 27 மாலை 5 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள், போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படை யினர் 25 பேர் 6 வாகனத்தில் வந்து சோதனை செய்தனர். தர்மபுரி, சென்னை தி.நகரில் டி.என்.சி. நிதி நிறுவன அலுவலகங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அரூர் திரு.வி.க. நகர் பகுதியில் குமாருக்கு சொந்தமான கே.கே. இல்லத்தை இரவு 11:00 மணிக்கு பறக்கும்படை சுற்றி வளைத்தது.

அந்த வீட்டில் இருந்த அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பசு பதி, வந்து "சோதனை பண்ணிக்குங்க' என அதிகாரிகளிடம் காட்டமாக சொல்லிக் கொண்டே உள்ளே சென்று, ஜன்னல் வழியாக பணக்கட்டுகளை தூக்கி வீச... 20 லட்சம் பிடிபட்டது. கொலகம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய உறுப்பினர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இளங்கோவன் சிட்பண்ட் நடத்திவரும் மெயின் அலுவலகமான டி.என்.சி. லாட்ஜ் கீழ்தளத்தில் 3 கோடி பிடிபட்டதாக தகவல் வந்தது. "வெயிட்டான மந்திரிகளைத் தன் பிடிக்குள் கொண்டு வரும் டெல்லியின் நடவடிக்கை இது' என்கிறார்கள் மேலிடத் தொடர் புடையோர்.

-அ.அருண்பாண்டியன்