தூத்துக்குடி அரசியல் வரலாற்றில் ஒரு முன்னணி கட்சியின் மா.செ.வை எதிர்த்து அக்கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்த சரித்திரம் இல்லை.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான எம்.எல்.ஏ. சண்முகநாதன், பொறுப்புக்கு வந்தவுடன் தூத்துக்குடி நகரிலுள்ள கட்சியின் பல முக்கிய புள்ளிகளும் சீனியர் களுமான 42 பேர்களின் வட்டச் செயலாளர் பதவியைப் பறித்து தனக்கு வேண்டப்பட்ட, கட்சிக்கு அறிமுகம் இல்லாதவர்களை அந்த பொறுப்பில் அமர்த்தியபோது கிளம்பிய எதிர்ப்பும் கொதிப்பும் இன்றுவரை அணையவில்லை. இதையடுத்து நகரின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரண்டு போய் கட்சித் தலைமையிலும், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோரிடம் தெரிவித்ததோடு, அ.தி. மு.க.வினர் கடும் அதிருப்தியில் இருப்பதையும் முன்வைத்தனர். தலைமையும் உடனே நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றரை வருடங்கள் கடந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பறிக்கப்பட்ட பதவியும் திரும்ப அவர்களுக்குத் தரப்படவில்லை. எல்லாம் காற்றோடு போய்விட்டது. மேலும், அவர் கட்சியை வளர்க்கவில்லை, தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவில்லை. இதனால் தொண்டர்கள் வெறுப்பால் மிகவும் சோர்வடைந்து போனார்கள்.

admk

அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தனக்கு ஈடாக எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது, வந்துவிட்டால் அவர்கள் வளர்ந்து விடுவார்கள், மா.செ. பதவி கேட்பார்கள். தனக்கு அது பாதகமாகிவிடும் என்பதால் கட்சியளவில் உள்ளடி வேலைகளை வெளியே தெரியாமல் டெக்னிக்கலாகவே வைத்துக் கொண்டார் சண்முகநாதன். எம்.பி. தேர்தல் வந்தபோது அ.தி.மு.க.வைச் சேர்ந்த எக்ஸ் எம்.பி. நட்டர்ஜி, செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் சீட் கேட்டனர். வாய்ப்பு, கட்சியினருக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக மா.செ. சண்முகநாதன் தொகுதியை நைசாக கூட்டணியான பி.ஜே.பி.க்கு ஒதுக்கும்படி ஏற்பாடுகளைச் செய்து விட்டார். விளைவு... எம்.பி. தேர்தலில் களம்கண்ட பி.ஜே.பி. தோல்வியைத் தழுவியது. அது சமயமே தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. அடுத்து வந்த எம்.எல்.ஏ. தேர்தலில் கட்சியின் சார்பில் செல்லப் பாண்டியன், ஏசாதுரை, அமிர்த கணேசன், ஜோதிமணி உள்ளிட்ட 30 பேர்கள் சீட் கேட்டனர். ஆனால் மா.செ. வாக்குபலமே இல்லாத கூட்டணிக் கட்சியான த.ம.கா.விற்குத் தொகுதியைத் தாரை வார்த்துக் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார். தலைமையும் தொண்டர்களின் கருத்துக்களை, உணர்வுகளை அறியாமல் மா.செ. முடிவிற்குக் கட்டுப்பட்டது. ஆனால் கண்ட பலன் என்ன? த.மா.கா. தோல்வியடைந்தது.

Advertisment

இந்த இரண்டு தேர்தலிலுமே கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன. அ.தி.மு.க.வின் உரிமையே பறிபோனது. அதே போன்று வருகிற மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலிலும் தூத்துக் குடி மாநகராட்சி கூட்டணிக் கட்சிக்குப் போய் விடக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. மாறாக தற்போது தூத்துக்குடி மாநகராட்சியை பி.ஜே.பி.க்கு ஒதுக்கவும் அதன் சார்பில் சசிகலா புஷ்பாவை மேயர் தேர்தலில் நிறுத்துவதற்கான பேரங்கள் நடப்பதையும் அறிந்துதான் நாங்கள் தொகுதியை இழந்துவிடக்கூடாது என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். மா.செ.வை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடிப்படை யில்தான் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஏசாதுரை, இணை செயலாளர் ஜோதிமணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் ஆறுமுக நயினார் மற்றும் தலைமைக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர் கருணாநிதி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் மா.செ.வுக்கு எதிராக பெருங்கூட்டமாக திரண்டுள்ளோம். கூட்டம் திரண்டுவிடக்கூடாது என்பதற்காக மா.செ. சண்முகநாதன் மற்றும் அவர் தரப்பினர் ஒவ்வொரு வட்டக்கழகச் செயலாளர், பிரதிநிதிகள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோரைத் தொடர்புகொண்டு யாரும் கூட்டத்திற்குப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார், முடியவில்லை. ஆனால் அதையும் மீறி அனைத்துப் பகுதியிலிருந்தும் தன்னார்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர் என்கிறார்கள்.

செப்.11 அன்று தூத்துக்குடியின் கனி பேலஸில் நடந்த அந்த கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருக்கிறார்கள். மண்டபத் தின் கொள்ளளவையும் தாண்டியிருந்தது கூட்டம். மா.செ.வுக்கு எதிரான குரல்களும் கோஷங்களும் வலுவாக எதிரொலித்தன. கூட்டத்தில் பேசிய அனைவருமே மா.செ.வின் கட்சி தொடர்பான நடவடிக்கைகளையும் செயல் பாடுகளையும் கண்டனம் செய் திருக்கின்றனர்.

aaa

Advertisment

தலைமை உரையில் பேசிய ஏசா துரை, தொண்டர்கள் சோர்ந்து விட்ட னர். அது நீடித் தால் கட்சிக்கு நல்லதில்லை. மா.செ. சண்முக நாதன், மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. கட்சி வேலையும் நடக்கவில்லை. மாவட்டத்துல கட்சி அதல பாதாளத்திற்கு போய்க்கிட்டிருந்தது. முக்கிய நிர்வாகி களான நாங்களெல்லாம் சேர்ந்து ஏதாவது செய்ய ணும்னு பல நாட்களாக யோசனை பண்ணிட்டிருந் தோம். தொண்டர்களும் அதைத்தான் வலியுறுத்தி னாங்க. அதனால்தான் இந்தக் கூட்டம் போடப்பட்டது. நாம் கடந்த இரண்டு முக்கியமான தேர்தலிலும் நமது உரிமையைப் பறிகொடுத்துவிட்டோம். இனிவரும் உள் ளாட்சித் தேர்தலான மாநகராட்சித் தேர்தலில் தலை நகர் தூத்துக்குடியை கட்சிக்கு ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்திப் பெறவேண்டும்'' என்றார் குரலை உயர்த்தி.

தொடர்ந்து பேசிய அமைப்புச் செயலாளர் சி.த. செல்லப்பாண்டியனும் மா.செ.வின் நடவடிக்கைகளை குற்றம் சாட்டியதோடு, "நாம் அத்தனைபேரும் ஒன்றாக இணைந்து ஒரே அணியாகச் செயல்பட வேண்டும். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் உரிமையை விட்டுவிடக்கூடாது'' என்றார் அழுத்தமான குரலில்.

பின்னர் பேசிய ஆறுமுக நயினாரோ, "கட்சியில தொய்வு ஏற்பட்டுருச்சி. கட்சியின் தொண்டர்களும் சோர்ந்து போய் விட்டார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வெற்றி பெற வேண்டி நாம் அனைவரும் முனைப் புடன் இப்போதே தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்தார். மற்ற நிர்வாகிகளும் இதையே பேசினர்.

admk

அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தலைநகர் தூத்துக் குடியை அ.தி.மு.க.வுக்கே ஒதுக்க வேண்டும். எந்தக் காலத்திலும் எக்காரணம் கொண்டும் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு தரக்கூடாது என்பதை வலியுறுத்தி, தலைமையை வற்புறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இது குறித்து நாம் மா.செ. சண்முகநாதனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, "கட்சியின் அணியின் சார்பில் போடப்பட்ட கூட் டம் அது. தொகுதியைத் தொண்டர்கள் கேட்பது இயல்பு தானே. என்னைப் பிடிக்காதவர்கள் கூட்டத்தில் அப்படித் தான் பேசியிருப்பார்கள்'' என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

இந்தக் கூட்டம் குறித்து தலைமைக் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளரான கருணாநிதியிடம் கேட்டபோது, "மா.செ. பல தவறுகள் செய்துள்ளார். தொகுதியைக் கட்சிக்கு ஒதுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தொண்டர்கள் திரண்டுபோய் நகரிலுள்ள எம்.ஜி.ஆர். சிலையின் முன்பு சாகும் வரை உண்ணாவிரம் இருப்பார்கள்'' என்றார் காட்டமாக.

மாவட்டத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

______________________________________________

விக்டோரியா மன்றம் - விளக்கம்!

2021, செப்டம்பர் 04- 07 நக்கீரன் இதழில், "உரிமைப் போரில் 2 ஆயிரம் கோடி சொத்து'’ கட்டுரையில் குறிப்பிட்டி ருப்பதுபோல் மீட்பு இயக்கம் வெறும் லெட்டர்பேட் குழுவல்ல. விக்டோரியா மன்றத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் விடுதலைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் இயக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இணைந்து மன்றத்தை மீட்கப் போராடி வருகின்றன.

இஸ்மாயில் கூறுவதுபோல், எங்களுடைய புகார்கள் மாவட்ட ஆட்சியராலோ, உயர்நீதிமன்றத்தாலோ தள்ளுபடி செய்யப்படவில்லை. கட்டுரையில் கருத்துச் சொல்லியுள்ள நிரந்தர ஆயுட்கால உறுப்பினர் சம்பத், விதிகளுக்குப் புறம்பாக சில ஆண்டுகளுக்கு முன் ஆயுட்கால உறுப்பினரானவர். இஸ்மாயிலின் மீது ஊழல், பாலியல் குற்றச் சாட்டுகள் உண்டு. தவிரவும் விக்டோரியா மன்றம் அரசிடமிருந்து மானியம் எதுவும் பெறவில்லை. எனவே இதை அரசு எடுத்துக் கொள்ளமுடியாது என முத்தமிழ்ச்செல்வன் கூறுவதும் தவறானது. 1972-லேயே கொடுத்த நிலத்தில் ஒரு பகுதியை அரசு எடுத்துக்கொண்டது. தவிரவும் நகர்ப்புற நிலவரியிலிருந்து இம்மன்றம் விலக்குப் பெறுகிறது. எனவே மன்றத்தை எடுத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்தும் மக்களிடம் சென்றடைய எங்களுடைய விளக்கத்தை பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

விக்டோரியா எட்வர்ட் மன்ற மீட்பியக்கம்