தமிழக காவல்துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கப் போவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிபி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக இருப்பவர் சகில் அக்தர். அவர் இந்தமாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அவர் இடத்தை பிடிப் பதற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியில் முன்னணியில் நிற்பவர் மகேஷ்குமார் அகர்வால். இவர் ஏற்கனவே சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்தவர். ஏ.கே.விஸ்வநாதன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தபோது ஒரு கட்டத்தில் அவரை மாற்ற வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி விரும்பினார். அதுகுறித்து அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை செய்தார்.
அந்த ஆலோசனையில், அடுத்த வாரம் ஏ.கே.விஸ்வநாதனை மாற்றலாம் என முடிவு செய்துவிட்டு எடப்பாடி வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டுக்குப் போன எடப்பாடி மறுபடியும் சத்தியமூர்த்தியை தொடர்புகொண்டு ஏ.கே.விஸ்வநாதனுக்கு பதில் மகேஷ்குமார் அகர்வாலை சென்னை கமிஷனராக நியமனம் செய்யுங்கள். இதற்காக உள்துறை செயலாளரிடம் உடனடியாக உத்தரவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என கூறினார்.
திடீரென எடப்பாடிக்கு வந்த ஒரு அழுத்தத்தின் காரண மாகத்தான் அவர் இவ்வாறு கூறியிருந்தார். எடப்பாடிக்கு அழுத்தத்தை தந்ததே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மகேஷ் குமார் அகர்வாலின் அண்ணன் பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி.விங்கில் முக்கியப் பொறுப்பிலிருப்பவர். சென்னை நகர கமிஷனர் பொறுப்பில் மாற்றம் வருகிறது எனத் தெரிந்த வுடன் மகேஷ்குமார் தனது சகோதரரை தொடர்புகொள்ள, அவர் அமித்ஷாவிற்கு நெருக்க மான வட்டாரத்தை தொடர்புகொண்டு, மகேஷ்குமார் அகர்வாலை சென்னை மாநகர கமிஷனர் பதவியில் நியமிக்க வேண்டுமென பேசவைத்தார்.
அதன் எதிரொலியாக ஒருவாரம் கழித்து முடிவெடுக்கலாமென நினைத்த எடப்பாடி உடனடியாக மகேஷ் குமார் அகர்வாலை சென்னை நகர கமிஷனராக அமர வைத்தார். எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரி என்றதால் தி.மு.க. அரசு எந்தப் பதவியும் தரவில்லை. தி.மு.க.வின் அதிகார மட் டங்களில் "நான் அமித்ஷாவுக்கு மிக நெருக்கமான ஆள்' என பேசிவரும் மகேஷ்குமார் அகர்வால், சி.பி.சி.ஐ.டி. தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அவர் மூலம் தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள கொடநாடு கொள்ளை வழக்கு மற்றும் ஸ்ரீமதி மரண விவகாரம் ஆகியவற்றில் நேரடியாக பா.ஜ.க. தலையிட்டு ஆபரேட் செய்யும் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.
உளவுத்துறையில் ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள், கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த கலவரத்தினால் அங்கிருந்து மாற்றப் பட்டார்.
ஆசியம்மாளும் உளவுத்துறை தலைவரான டேவிட்சன் ஆசிர்வாதமும் இணைந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தார்கள். இதனால் கடுமையான கண்காணிப்புக்குள்ளான அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் இப்பொழுது வெடித்துக் கிளம்பியிருக்கிறார்கள். அதனால்தான் இஷ்டம் போல அவர்கள் பேசி வருகிறார்கள்.
இதே நிலைமை நீடித்தால் இன்னும் இரண்டு வருடங்களில் கட்டுப்பாடு என்பதே இல்லாமல் போய்விடும். எனவே உளவுத்துறை தலைவராக இருக்கக்கூடிய டேவிட்சன் ஆசிர்வாதத்தை மாற்ற வேண்டும் என குரல் காவல்துறை வட்டாரங்களில் பொதுவாகவே எழுந்துள்ளது. இதை முதல்வர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவும் ஆதரிக் கிறார்கள்.
எனவே தமிழக காவல்துறையில் விரைவில் பெரிய மாற்றம் நிகழும். இந்தச் செய்தி கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
________________
இறுதிச்சுற்று
தி.மு.க.வில் 15-வது உட்கட்சித் தேர்தல் முடிவடைந்து, புதிதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம், 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக் கான அரங்க அமைப்புப் பணிகளை, அக்டோபர் ஆறாம் தேதி, வியாழனன்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். வெள்ளிக் கிழமையன்று தி.மு.க.வின் தலைவர், பொதுச்செய லாளர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுவதால் தி.மு.க. நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சென்னை நோக்கி குவிந்தவண்ணம் இருக்கிறார்கள்.
படம்: அசோக்