"ஹலோ தலைவரே, ரொம்பவும் பரபரப்பாக எதிர்பார்க் கப்பட்ட ஈரோடு கிழக்குத் தொகுதிக் கான இடைத் தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது.''”

"ஆமாம்பா, கடைசி நேரம் வரை, தேர்தல் ரத்தாகுமோங்கிற குழப்பம் அங்கே நிலவுச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த வெற்றி மூலம் ஆட்சியின் இமேஜைத் தக்கவச்சிக்கணும்னு தி.மு.க. கூட்டணி பரபரத்த நிலையில், எந்த வழி யிலாவது கைச்சின்னத்தை மண் கவ்வ வச்சிட ணும்னு அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியும் வரிஞ்சி கட்டுச்சு. அதனால் கடைசி நேரத்தில் ஏதாவது கலவரம் வரலாமோங்கிற அச்சம் எல்லாத் தரப்பிலும் இருந்தது. ஆனால், எந்தவித பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் ஒருவழியா இடைத்தேர்தல் நடந்து முடிஞ்சிருக்கு. முதல்வர் ஸ்டாலினின் கடைசி நேரப் பிரச்சாரம், கைத்தரப்புக்கு அசுரபலத்தைக் கொடுத்திருப்பதா, அவர்கள் தரப்பிலேயே சொல்றாங்க. அந்த அளவுக்கு அவர் போன இடமெல்லாம் மாநாடு மாதிரி மக்கள் திரண்டிருந்தாங்க. 25-ந் தேதி அங்குள்ள சக்தி சுகர்ஸ் நிறுவன கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த அவர், அந்த நள்ளிரவு நேரத்திலும் களவேலை பார்த்த அமைச்சர் களை அழைத்து, "எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் அங்கே காங்கிரஸ் கரையேறும்?'ன்னு விசாரிச்சிருக்கார். அதுக்கு அவர்கள் "குறைந்த பட்சம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும்'னு சொல்ல, ஸ்டாலினோ, "எனக்கு வந்த ரிப்போர்ட் வேறு மாதிரி இருக்கு. ஆனாலும் உங்கள் பேச்சை நம்புகிறேன்'னு பஞ்ச் வைத்திருக்கிறார்.''”

Advertisment

rang

"இடைத்தேர்தல் நடந்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி மீது, முதல் முதலாக லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்கைப் பதிவு செய்யத் தயாராகுதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தி.மு.க. ஆட்சி வந்த பிறகு எடப்பாடி மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாயும்னு எதிர்பார்க்கப்பட்ட போதும், ஒரு துரும்பும் அவருக்கு எதிராக இதுவரை அசைக்கப்பட வில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சம்பவ காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடியிடம் சிறு விசாரணை கூட நடத்தப் படவில்லை. அவரது வலது கரம் போன்ற சேலம் இளங்கோவன் தொடங்கி, அவருடைய செக்யூ ரிட்டி அதிகாரி வரை, குடையப்பட்ட நிலையிலும், எடப்பாடி மட்டும் விசாரணை வட்டத்தில் வராமலேயே இருந்தார். இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கு தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் கூட, லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்ப தால் பணம் புரட்ட முடியவில்லைன்னு கைபிசைந்த நிலையிலும், எடப்பாடி எளிதாக பெரிய அளவில் பணத்தை அங்கே கொண்டுவந்து தாராளம் காட்டி னார். இந்தத் தகவல்கள் கோட்டைக்குச் சென்றதால், அங்கிருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு க்ரீன் சிக்னல் காட்டப்பட்டிருக்கு. அதன் எதிரொலியாகத்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை எடப்பாடி மீது வழக்கைத் தொடுக்கும் மும்முரத்தில் இருக்கிறதாம்.''”

"தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணனை கவர்னர் ரவி சந்தித்திருக் கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அரசியல் பிரமுகர்கள் பலரையும் கவர்னர் ரவி தொடர்ச்சியாக சந்திச்சிக் கிட்டு இருக்கார். அந்த பட்டியலில் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் கே.எஸ். ராதா கிருஷ்ணனையும் கவர்னர் ராஜ்பவனுக்கு அழைத்திருக்கிறார். இவர்களின் சந்திப்பை மாநில உளவுத்துறை மட்டுமல்லாமல், ம.தி.மு.க. தரப்பும் கூர்மையாகக் கவனிச்சிருக்கு. கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ராதாகிருஷ்ணனை, தங்களின் ஆதரவுப் பத்திரிகையாளர்கள் மூலம், உள்ளே என்ன பேசப்பட்டது என்று தி.மு.க.வும் அறிய முயன்றது. ஆனாலும் முழுமையான தகவல் கள் தி.மு.க.வுக்கே கிடைக்கவில்லையாம். உளவுத் துறையாலும் கூட முழுத் தகவல்களையும் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். இந்த சந்திப்பின் போது கவர்னருக்கு, திருக்குறள், நாலடியார் ஆகிய நூல் களின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகளைக் கொடுத்த ராதாகிருஷ் ணன், தான் தொகுத்திருக்கும் பாரதி பற்றிய நூல் ஒன்றையும் ரவியிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.''”

rr

"கவர்னர் மற்றும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சந்திப்பு குறித்து மற்றவர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுவது எதற்காக?''”

"பழ.நெடுமாறன் அண்மையில் கொளுத்திப் போட்ட அணுகுண்டுதான் அதுக்குக் காரணம். புலித்தலை வர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நெடுமாறன் அறிவித்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், புலிகள் தரப்புடன் நல்ல நட்பில் இருந்தவரான ராதாகிருஷ்ணனை, கவர்னர் அழைத்திருப்பதால், ஏதேனும் முக்கிய விசயம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பி லும் ஏற்பட்டது. நாம் நமது சோர்ஸ் மூலம் விசா ரித்தபோது, அந்த சந்திப்பின் போது, கே.எஸ். ராதாகிருஷ்ணனிடம் பிரபாகரன் பற்றி கவர்னர் ரவி விசாரிக்கவே இல்லையாம். அதே நேரம், ஈழ விவகாரம் குறித்து நிறையவே அவர் கேட்டிருக் கிறார். ஈழ இறுதி யுத்தத்தின்போது, தமிழகத்திலும் இந்திய அளவிலும் எந்த மாதிரியான பாதிப்பை அது ஏற்படுத்தியது என்று கவர்னர் ஆர்வமாக விசாரித்தாராம். அதுபோல் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ஈழ விவகாரத்தில் அவர்கள் செய்யத் தவறியது என்ன? என்றும், அப்போது இங்கே நடந்த அரசியல் நடவடிக்கைகள் என்ன? என்றும் கேட்ட அவர், மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும் முழுதாகக் கேட்டறிந்தாராம். கடைசியாக, ஈழச் சிக்கலுக்கு பா.ஜ.க. ஒன்றிய அரசால் என்ன மாதிரியான தீர்வை ஏற்படுத்த முடியும்? என்றும், அதில் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொண்டாராம்.''”

"கவர்னரின் இவ்வளவு கேள்விகளுக்கும் ராதாகிருஷ்ணன் விளக்கம் கொடுத்தாரா?''”

"முடிந்தவரை கவர்னரின் கேள்விகளுக்கு பதில் சொன்ன கே.எஸ்.ராதாகிருஷ் ணன், ஈழ விவகாரம் குறித்துத் தான் ஏற்கனவே தொகுத்து வைத்திருந்த ஒரு பெரிய ஃபைலை கவர்னரிடம் கொடுத் திருக்கிறார். இதன்பின் அரசியல் ரீதியாக அவர்களின் பேச்சு திரும்பிய தாம். அப்போது, தி.மு.க.வின் உள் வட்டாரங்களில் நடப்பது குறித்து கவர்னர் அவருடன் விவாதித்தாராம். அப்போது, கலைஞர் காலத்தில் இருந்த தி.மு.க.வை விட, தற்போது ஸ்டாலின் காலத்தில் இருக் கும் தி.மு.க. எப்படி இருக் கிறது? அதன் பலம்லிபல வீனம் என்ன என்பதை பல சம்பவங்கள் ரீதியாக விவரித்திருக்கிறார் ராதா கிருஷ்ணன். மேலும், முதல்வர் ஸ்டாலினிடம் ஆதிக்கம் செலுத்துபவர்கள் குறித்தும், எல்லை மீறும் அமைச்சர்கள் பற்றியும் அவர் கவர்னரிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டி ருக்கிறார். கூடவே தி.மு.க.வுக்கு எதிரான ஒரு சீக்ரெட் ஃபைலை யும் கவர்னரிடம் அவர் கொடுத்திருக்கிறார். அப்போது அவர் விவரித்த விவகாரங்கள், கவர்னரையே திகைக்க வைத்துவிட்ட தாம். விடைபெறும்போது, "உங்களை இவ்வளவு நாள் சந்திக்காமல் மிஸ் பண்ணிவிட்டேனே' என்று கவர்னர் சொன்னதாகவும் ராஜ்பவனின் சோர்ஸ்கள் சொல்கின்றன.''”

rr

"இதேபோல் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியையும் கவர்னர் சந்தித்திருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, இவர்களின் சந்திப்பின் போது, கே.சி.பழனிச்சாமியிடம், அ.தி.மு.க.வின் உள்விவகாரங் கள் குறித்தே கவர்னர் அதிகம் விசாரித்திருக்கிறார். அப்போது, எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா ஆகிய மூவரின் கடந்த காலங்கள் குறித்தும், தற்போது அவர்களின் அரசியல் நிலை குறித்தும் பல தகவல்களை பழனிச்சாமி கவர்னரிடம் சொல்லியுள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்த பிறகு, தி.மு.க.வை விட வாக்கு வங்கி அதிகமாக அ.தி.மு.க.விடம் இருக்கக் காரணமானவர் ஜெயல-தாதான் என்றும், அதன் பிறகு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் அதைச் சிதைத்துவிட் டார்கள் என்றும் கே.சி.பழனிச்சாமி கவர்னரிடம் குறைபட்டுக் கொண்டாராம். இப்படியாக தி.மு.க., அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசியல் பிரபலங்களை தேடிப்பிடித்துச் சந்தித்து கண்டதையும் கவர்னர் விசாரித்து வருகிறாராம். இது ராஜ்பவனுக்கு டெல்லி கொடுத்திருக்கும் அசைன்மெண்டுகளில் ஒன்று என்கிறார்கள்.''

"காங்கிரஸ் கட்சியின் ராய்ப்பூர் மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதே?''”

"சத்தீஷ்கர் மாநில ராய்ப்பூரில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது மாநாடு நடந்தது. இதில் பேசிய சோனியாகாந்தி, ’பாரத ஒற்றுமை யாத்திரையின் வெற்றியோடு என் இன்னிங்ஸ் முடிந்து விட்டது. இனி இளம் தலைமுறையினர் மூலம் காங்கிரஸை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். மோடி தலைமையில் நாடு மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. அதனால், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப, நாம் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும். அதற்காக, காங்கிரஸ் தலைமையில் ஒரு வலிமையான மெகா கூட்டணியை கார்கே கட்டமைப்பார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பைத் தரவேண்டும்‘ என்றெல்லாம்’ உணர்ச்சிவயப் பட்டவராகப் பேசினார். கட்சிப் பதவிகளில் 50 சதத்தை இளைஞர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும், விரைவில் ஆன்லைன் மெம்பர்ஷிப் மட்டுமே என்ற நிலை யைக் கொண்டு வருவோம் என்றும் பல்வேறு தீர் மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.”

"சென்னை காவல்துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"தமிழ்நாடு அரசின் செய்தித்துறையில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன், பாலமுருகன், விஜய், ஜெயபால் ஆகிய 4 பேரும், கடந்த 22ஆம் தேதி, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலை ஓரத்தில் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அந்தப்பகுதிக்கு ரோந்து வந்த போலீஸ்காரர் ஸ்டாலின், அவர்களிடம், இப்படி பப்ளிக் பிளேசில் குடிக்காதீர்கள் என்று சொல்ல, மப்பில் இருந்த அந்த நால்வரும் அவ ரிடம் தகராறு செய்ததோடு, அவரின் யுனிஃபார் மைக் கிழித்துத் தாக்க முயல, தகவல் அறிந்துவந்த போலீஸ் டீம் அவர்களை மடக்கிக் கைது செய்து, சிறைக்கும் அனுப்பிவைத்தது. இந்தத் தகவல் செய்தித்துறை இயக்குநர் மோகன் காதுவரை போயும் கூட, அவர்கள் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் துறையைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நால்வரையும் ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக் கிறார்களாம். முதல்வரின் கீழ் இயங்கும் காவல் துறையினராகிய எங்களைத் தாக்க முனைந்தவர் களுக்கு அரசுத் துறையினரே, ஆதரவாக இருக்க லாமா? என்று குமுறுகிறார்கள் காக்கிகள். இது மாநகர காவல்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தி யையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.''”

"நானும் ஒரு முக்கிமான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அரசின் உணவுத் துறைக்கு சப்ளை செய்வதற்காக, மலேசியாவிலிருந்து 100 கோடி ரூபாய் மதிப்பில், பாமாயிலை இறக்குமதி செய்ய, சென்னையைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் தலைமையிலான டீம் களமிறங்கியுள்ளது. அவர் அதிகாரப் புள்ளிகளுக்கு மிக நெருக்கமானவர். இதற்கான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது. இந்தத் தகவல், பா.ஜ.க. அண்ணாமலையின் காதுக்குப் போக, அவரோ,’அவர்கள் காரியத்தை நடத்தும் வரை, சைலண்டாக இருந்து, அதன்பின் ஆதாரத்தோடு, நம்ம கச்சேரியை ஆரம்பிப்போம் என்றாராம்.

_____________

இறுதிச் சுற்று!

முதல்வர் அறிவிப்பு! உற்சாகமாய் வாக்களித்த பெண்கள்!

தமிழகத்தையே கடந்த ஒருமாதமாக திரும்பிப் பார்க்க வைத்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 27-ஆம் தேதி திங்கள் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாகத் தொடங்கியது. ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வாக் களித்தார்கள். 32 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு அங்கு கூடுதலாக காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.

ff

சில இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெரிய அளவில் சச்சரவுகள் நிகழவில்லை.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வின் ஒட்டுமொத்த அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும், முழுமையாக ஈரோட்டில் குவிந்து அர்ப்பணிப்போடு பணியாற்றினார் கள். அ.தி.மு.க.வினரும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் என சளைக்காமல் பெரும்படையோடு எதிர்கொண்டார்கள்.

25-ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை வாக்காளர்களை வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக மகளிர்க்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என கூறியது பெண்களை ஈர்த்துள்ளது. வேட்பாளர்களான காங்கிரஸ் இளங்கோவன், அ.தி.மு.க. தென்னரசு, நாம் தமிழர் மேனகா, தே.மு.தி.க. ஆனந்த் ஆகியோர் காலையிலேயே தங்களது வாக்கைச் செலுத்தினார்கள். பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பதில் அதிக ஆர்வத்தைக் காணமுடிந்தது.

-ஜீவாதங்கவேல்

______________

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி இந்த இதழில் கூடுதல் 16 பக்கங்களுடன் விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. வரும் இதழில் வழக்கம்போல் செய்திகள் அதிக அளவில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

(-ஆர்.)