ர்நாடகா தேர்தல் தோல்விக்கு பிறகு "மீண்டும் மோடி! வேண்டும் மோடி!!' என்கின்ற அஜெண்டாவை முன்வைத்து, கோவையில் மாநில செயற்குழுவினை நடத்தியிருக்கிறது பா.ஜ.க.

கோவை ஈச்சனாரியிலுள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநில செயற்குழு நடந்தது.

aa

"கட்சியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவிருக்கின்றது அண்ணே! அவசியம் வந்துடனும்னே. ஏதும் சாக்கு போக்கு சொல்லி வராமல் இருந்துடாதீங்க. அவர நீங்கதான் கூட்டிட்டு வரனும்'' என கர்நாடகா தேர்தல் தோல்விக்குப் பிறகு தன்னுடைய கெத்தைக் காட்ட தனித்தனியாக அழைப்புவிடுத்தார் அண்ணாமலை. "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவையை எப்படியாவது தனக்கு தக்கவைத்துக் கொள்வதுதான் அவரது விருப்பமாக இருக்கின்றது' என்கிறார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர்.

Advertisment

சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, கேசவ விநாயகம், தேசிய செயலாளரான சந்தோஷ், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னனி தலைவர்கள் கலந்து கொண்ட மாநில செயற்குழுவில் தன்னுடைய காளை மாட்டோடு வந்து சேர்ந்தார் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை. அடுத்ததாக கட்சி நிர்வாகிகள் கொடுத்த பூர்ணகும்ப மரியாதையை ஏற்றவர், கட்சி நிர்வாகிகள் தங்கள் பங்கிற்கு கொண்டு வந்த காளை மாடுகளோடு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.

பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, " பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்துவிட்டு, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதை வருகின்ற மே 30 ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதிவரை ஒருமாத காலத்திற்கு பா.ஜ.க. கொண்டாடவுள் ளது. பிரதமரின் சாதனைகள், அதனால் தமிழகத்திற்கு கிடைத்த பயன்கள், மக்கள் எப்படி முன்னேறி உள்ளார்கள், அரசின் திட்டங்கள் பட்டி, தொட்டி எல்லாம் எவ்வாறு சென்றுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒருமாத காலம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும். வருகின்ற 21-ஆம் தேதியன்று ஆளுநர் ஆர்என். ரவியை ராஜ்பவனில் சந்தித்து, கள்ளச் சாரயத்திற்கு ஆளுநர் நேரடியாக தலை யிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் மனு அளிக்கவுள் ளோம். அதுபோல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என்றார் சிரிக்காமலேயே. கர்நாடக தேர்தல் தோல்வி, யாருடன் கூட்டணி என்கின்ற கேள்விகளுக்கு மட்டும் சிரித்துவிட்டு பதிலளிக்காமலேயே பத்திரிகையாளர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றினார்.

aa

Advertisment

இது இப்படியிருக்க தானும் இருக்கிறோமே.! தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே என தன் பங்கிற்கு, பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் உடனிருக்க பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்து தன் இருப்பை உறுதி செய்தார் ஹெச்.ராஜா.

செயற்குழுவில் அண்ணாமலைக்கு அடுத்து சி.டி.ரவி, சுதாகர்ரெட்டி பேசி வைக்க, அடுத்ததாக மைக் பற்றிய பொன்னார், "தினசரி 5 பூத்களில் கவனம் செலுத்தவேண்டும். வருகின்ற 30 நாட்கள் முக்கியமானவை நமக்கு. முழுநேர ஊழியர்களுடன் இப்பொழுது மாநிலத்தில் 60 ஆயிரம் நபர்களை நியமிக்கவுள்ளனர். வீடுதோறும் சென்று மோடியின் சாதனைகளை எடுத்துக் கூறவேண்டும், ஒவ்வொரு வீட்டிலும் "மீண்டும் மோடி! வேண்டும் மோடி!!' என்கின்ற ஸ்டிக்கரை கண்டிப்பாக ஒட்டவேண்டும். அப்பொழுதுதான் நாடாளுமன் றத் தேர்தலை நினைத்துப் பார்க்க வேண்டும்'' எனக் கூறிவைத்தார். அதன்பின் தேசிய செயலாளரான சந்தோஷ் ஆங்கிலத்தில் பேசி வைக்க, என்ன பேசுகிறார் எனத் தெரியாமலேயே நெளிந்தனர் கூட்டத்தினர். மீண்டும் மைக்கை பற்றிய அண்ணாமலை, "என்னைய கை வைக்க முடியாது! உங்களைத்தான் டார்கெட் செய்யும் இந்த தி.மு.க. அரசு. ஆதலால் கவனமாக இருக்கவேண்டும். நான் சப்போர்ட் செய்வேன்'' என பேச... அங்கிருந்த பா.ஜ.க.வினர் பீதியில் நெளிந்தனர்.

" வழக்கமாக 250 செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் தான் மாநில செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். இந்த முறை திட்டக்குழு எனும் பெயரில் மாவட்டத்திற்கு 9 நபர்கள் வீதமும், கட்சியில் ஊதியம் வாங்கும் முழுநேர ஊழியர்கள் 200 நபர்கள் என மொத்தம் 1000த்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அது போல் டீ டைம், லஞ்ச் டைம் என தனித்தனியாக நேரம் கொடுப்பார்கள். அதுவும் இல்லை. டீயும், போண்டாவும் நேரடியாக இருக்கைக்கே வந்தது. 11 மணிக்கு மைக்கை பிடித்தவர்கள் 3 மணிக்குத்தான் முடித்தனர். வீடு வீடாக போகனும்ணு சொல்லியிருக்காங்க.! 30 நாட்கள் வேலையை விட்டுப் போகமுடியுமா என்ன? செலவிற்கு யார் பணம் கொடுப்பார்கள் என கேட்டால், மாவட்ட தலைமையை கைக் காட்டுகிறார்கள். அவங்களைப் பார்த்தோம் என்றால் முகத்தை வேறு பக்கம் திருப்புறாங்க. இதில் அண்ணாமலை பேசியதுதான் கொடூரம்! "கவனமாக இருங்க... உங்களை நான் பாத்துக் குறேன்' என்றார்.

"நாங்க ஏன் சார் நடுராத்திரியில் சுடுகாடு போகணும்? கோவையில் இந்த மாநில செயற்குழு மூலம் ஹீரோவாகணும்னு ஆசைப்பட்டு ஜோக்க ராகிட்டார் அண்ணாமலை'' என்றார் கோவை பா.ஜ.க. திட்டக்குழுவினை சேர்ந்த புள்ளி ஒருவர்.