"பொங்குகின்ற காமமென்ன சிவத்தின் கூறு

பொல்லாத ஆசையென்ன மாலின் கூறு

மயங்குகின்ற மோகமென்ன பிரம்மன் கூறு

மருவியந்த மூன்றாலும் உலகம் பாழாம்.''

Advertisment

(சட்டைமுனி சித்தர்)

(மனிதர்களுக்கு உண்டாகும் கோபம், லோபம், குரோத குணங்கள் சிவனின் குணம் தன்மைகளாகும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்தப் பூமியிலுள்ள அனைத்தையும் நான் ஒருவனே அனுபவிக்கவேண்டும். தன்னை எதிர்ப்பவர்களை அழித்துவிட வேண்டுமென்ற சுயநல எண்ணமும், ஆசையும் திருமாலின் குணங்களாகும். எப்போதும் மோக உணர்வுடன், எப்படியாவது உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவேண்டும் என்ற குணம் படைப் பிக்கும் பிரம்மனின் குணமாகும். இந்த மூன்று குணங்களைக்கொண்ட மூன்றுவித மனிதர்களால் இந்த உலகம் பாழாகி தர்மம் நியாயம் மறைந்து அழியும்.)

அகத்தியர்: காகபுசுண்டரே, ஒரு மனிதன், தனது ஒவ்வொரு பிறவி வாழ்விலும், செய்யும் நன்மை- தீமைகளை கணக்கீடுசெய்து, அதற்குரிய பலன்களை, நிர்ணயித்து அவனின் அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கச் செய்யும் கர்மவினை பதிவுகளைப் பற்றிக் கூறிவருகின்றீர்கள். இன்று எந்த வினை பதிவைப் பற்றிக் கூற விரும்புகின்றீர் களோ அதைக் கூறுங்கள்.

Advertisment

காகபுசுண்டர்: அனைத்து ஞானமும் பெற்ற பூரண ஞானியே, உடல், உயிர், ஆன்மாவைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிந்தவரே, சுவாசக் காற்றையே, கடவுளாக வணங்கி, வாசி யோகம் செய்து, அதன்மூலம் அனைத்து சக்திகளை யும், சுயமுயற்சியால் அடைந்த அகத்தியரே, சித்தர் களின் ஆசானே, உங்கள் திருவடிக்கு என் பணிவான வணக்கங்கள்.

ஆசானே இன்று குடும்ப உறவுகளில் கூடிக் கலந்து, உறவாடி, பின் வெறுத்து, உறவுகளைப் பிரித்துவைத்து, அவர்களுக்கு செய்த கொடுமை களால், பாவங்களால், அடுத்த பிறவியில் அனுபவிக் கப் போகும் பலன்களைப் பற்றிக் கூறுகின்றேன்.

மனிதர்களின் குடும்ப வாழ்வில், இரண்டு உறவுகள் மட்டும், கூடிக்கலந்து, ஒட்டி உறவாடி வாழ்கின் றன. ஒன்று ஒரு தாயின் வயிற்றில், சகோதர உறவுகளாக கூடிப்பிறப்பவர்கள். இந்த உறவு வாழ்க்கையின் முற்பகுதி வரைதான். வாலிப வயதையடைந்து, தனக்கென்று ஒரு வாழ்க்கையை தொடங்கும்போது, ஒரு ஆண், ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஒரு ஆணையும், திருமணம் புரிந்து, வாழ்வின் இறுதிவரையில், கூடிக்கலந்து, கணவன்- மனைவி என வாழும் உறவு மற்றொரு உறவாகும்.

ஒரு பெண், எங்கேயோ ஓரிடத்தில் பிறந்து, வளர்ந்து, தன்னைப் பெற்றவர்கள், உடன்பிறந்தவர்களுடன் பாசத்தில் வாழ்ந்தவள், பருவம் அடைந்தவுடன், பெற்றவர்களையும், சகோதரர்களையும் பிரிந்து, பிறந்த வீட்டில் உரிமைகளைத் துறந்து, தனக்கு சம்பந்தமேயில்லாத, ஒரு ஆணை மணந்து, இனி தன் வாழ்க்கை இறுதிவரை அவன் மட்டுமே நமக்கு உறவு, பாதுகாப்பு, என அவனை கணவனாக, மனப் பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அவளுக்கு உடல் சுகம் தந்து, அவன் விந்தை கர்ப்பத் தில் தாங்கி, தன்னுள் வளர்ந்து, பிள்ளை யாகப் பெற்றுத் தந்து, அவன் வம்சத்தை விருத்திசெய்து, வாழவந்த குடும்பத்தில் உண்டாகும் நன்மை- தீமைகளை அனுபவித்து மறைகின்றாள்.

ss

குடும்ப நிர்வாகம், பாதுகாப்பு, உயர்வு, தாழ்வு என அனைத்திற்கும் மனைவியே காரணமாவாள். இதனால்தான், நாம் வாழும், மனையை ஆள்பவள் மனைவி' இல்லத்திற்கு ஆட்சி, அதிகாரம் உள்ளவள் "இல்லாள்' என்று மனைவிக்கு முக்கியத் துவம் கொடுத்து கூறுகின்றோம். மனைவி யின் அறிவும், அவளின் திறமையான நிர்வாகமும்தான், ஏழ்மையான குடும்பத் தையும், செல்வச் சிறப்புடன், ஏற்றமிகு குடும்பமாகச் செய்வதும், அதேபோன்று அறிவுள்ள, அகங்காரமும், ஆணவம், அலட்சியமான குணம்கொண்ட பெண் களின் செயலால், செல்வ வளமான குடும்பத் தில், இவள் வாழ வந்தபின்பு, செல்வ நிலையை சீரழித்து, வறுமையான நிலைக்கு கொண்டுசெல்வதும் மனைவிதான். ஒரு பெண்ணின் அறிவும், நிர்வாக திறனும், சிக்கன செலவும், சேமிக்கும் சக்தி மட்டுமே குடும்பத்தையும் குலப்பெருமையையும் உயர்த்தி வைக்கும்.

ஒரு குடும்பத்தில், உத்தியோகம், தொழில் செய்து, பணம், பொருள் சம்பாதிப்பது மட்டுமே, கணவனின் கடமையாகும். அந்தப் பணத்தை கொண்டு, வருமானத்தின் அளவினை அறிந்து, தேவையான செலவுகளை மட்டும் செய்து சிக்கனத்துடன் வாழ்ந்து, பணம், சொத்து களைச் சேர்த்து, தன் குடும்பத்தில் செல்வ நிலையை உயர்த்துவது நல்ல மனைவியின் கடமையாகும். பொதுவாக ஒரு குடும்பம் செல்வ சிறப்பு பெறுவதற்கும், வறுமை நிலையை அடைவதற்கும் மனைவியே காரணமாவாள்.

பெருமைமிக்க பெண்ணை மணந்து, உறவு கொண்டு, உடல் சுகம் தந்து, வம்சத்தை வளர்த்து, குடும்பத்தைக் காப்பாற்றும் மனைவியை மதிக்காமல், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, உணவு, உடை, இருக்க இடம் கொடுக்காமல், அவளை துன்பம் அடையச் செய்வதால், மனம் வெறுத்து, மனைவி விட்ட வாக்கு சாபமே, பாவ- சாப- தோஷமாகி, அவனின் அடுத்த பிறவியில் பாதிப்பை தரும்.

ஒரு ஆண், மனைவிக்கு செய்த துரோகத் தால், உண்டான களத்திர பாவ- சாப- தோஷம், அடுத்த பிறவியில், ஒரு கன்னியை கரம்பற்ற அளவு கடந்த காலதாமத்தை, திருமண தடையை உண்டாக்கும். குடும்ப வாழ்வில் கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடு, பிரிவு, இழப்பு, தாம்பத்திய சுக குறைவு, மனைவி யின் வெறுப்பிற்கு ஆளாவது, இன்னும் இதுபோன்ற பல நிகழ்வுகளைத் தந்து, இல்லற வாழ்வின் இனிமையைக் கெடுத்து, நிம்மதி இல்லாத நிலையை அனுபவிக்கச் செய்யும்.

அகத்தியர்: புசுண்டரே, ஆண் தவறு செய்வதால், அனுபவிக்கும் பலன்களைப் பற்றிக் கூறினீர்கள், பெண்கள் தவறுகள் செய்து, கணவன் பாதிக்கப்பட்டால், அவளுக்கு பாவ- சாப- தோஷப் பாதிப்புகளால் தண்டனை கிடையாதா? காகபுசுண்டர்: ஒரு ஆண், ஒரு பிறவியில், தன் மனைவிக்குச் செய்யும் துரோகச் செயல் களால், அடுத்த பிறவி வாழ்வில் எவ்வாறு குடும்ப வாழ்வில் நிம்மதியை இழக்கின்றானோ, அதேபோன்று, பெண்கள் செய்யும், தவறு களுக்கு உண்டான தண்டனையை அந்தப் பெண் தன் அடுத்த பிறவியில் அனுபவிப்பாள்.

ஒரு மனைவியானவள், தன் கணவனுக்கு, மனமறிந்து துரோகம் செய்வதாலும், பெற்ற குழந்தைகளைக் கவனித்து நல்ல முறையில் வளர்க்காமலும், தேவையற்ற செலவு களைச்செய்து, பணம், பொருளை சேமிக்காம லும், தன் மனம் போனபோக்கில் வாழ்ந்து, குலப்பெருமையை குலைப்பது போன்ற இன்னும் பல ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வாழ்வது.

வாழவந்த வீட்டில், மாமனார், மாமியாரின் முதுமைகாலத்தில், அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தராமல், நோய்க்கு மருத்துவம் பாராமல், தன் வம்சவாரிகள் சுகமாக வாழ, அவர்கள் சம்பாதித்து வைத்த சொத்துகளை, அபகரித்துக்கொண்டு, அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி கஷ்டப் படச் செய்வது, கணவனுடன் பிறந்த சகோதர- சகோதரிகளுடன் வெறுத்து ஒதுக்கி உறவை துண்டித்துக்கொள்வது, தன் குடும்ப வருமானம், பொருளாதார நிலையளவு அறியாமல், பிறர்மதிக்க வேண்டும் என்பதற்காக, பூர்வீக சொத்துகளை அழிப்பது என இதுபோன்ற இன்னும் பல செயல்களைச் செய்து, குடும்பத்தினர் மனம் நோகச் செய்வதால், கணவனும், அவன் குடும்பத்தினரும், மனம் வெறுத்துவிட்ட சாபம், அடுத்த பிறவியில், உறவற்ற தோஷமாகி பாதிப்பைத் தந்து, அந்தப் பெண்ணை அனுபவிக்கச் செய்துவிடும்.

முற்பிறவியில், ஒரு பெண் பெற்ற இந்த பாவ- சாப- தோஷப் பாதிப்பு இந்த பிறவியில், அந்தப் பெண், ஒரு கணவனைத் திருமணம் புரிந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அளவுகடந்த காலதாமதமாகும். திருமணம் பருவவயதில் நடைபெறாமல் தடை, தாமதமாகும். குடும்ப வாழ்வில், கணவனால் பெரிய சுகம் அடைய முடியாமல் செய்துவிடும். கணவனின் சம்பாதிக்கும் திறமை குறைந்துவிடும். பொருளாதார குறை இருக்கும். இவள் உழைத்து சம்பாதித்து கணவனையும், குழந்தைகளையும் காப்பாற்றவேண்டிய சூழ்நிலை அமைந்துவிடும்.

கணவன், சன்னியாசிபோல், பொறுப் பற்றவனாக இருப்பான். கணவன்- மனைவியி டையே கருத்து வேறுபாடு உண்டாகும். இத னால் விவாகரத்து வழக்கு, பிரிவு, கணவனை இளம்வயதில் இழத்தல், தாம்பத்தியத்தடை, தாம்பத்தியசுகம் குறைதல் என்ற நிலையில் வாழ்க்கை அமையும்.

கணவன் வீட்டு உறவுகள் ஆதரவு இல்லாமல் போகுதல், கணவனுக்கு முறையாக கிடைக்கவேண்டிய, முன்னோர் தேடி சேர்த்துவைத்த பூர்வீக சொத்துகள் கிடைக் காமல், அதனை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும். மாமனார்- மாமியார் என கணவன் வீட்டாருடன் ஒற்றுமையாக, கூட்டுக் குடும்பமாக, ஒரே வீட்டில் வாழமுடியாமல், தன் கணவன் குழந்தைகளுடன், தனியாகச் சென்று வசிக்கநேரிடும். கணவனின் உடன்பிறந்தோர் ஆதரவு இல்லாமல், உறவுகள் பகையாகிவிடும். வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையால், தவறான செயல்களைச்செய்து, பொருள்தேடி சம்பாதிக்கச் செய்துவிடும். முற்பிறவியில் செய்த பாவம், இப்பிறவியில் இதுபோன்ற இன்னும் பல சிரமங்களைத் தந்து அந்தப் பெண்ணை அனுபவிக்கச் செய்துவிடும்.

அகத்தியர்: முற்பிறவிகளில் செய்த, பாவ- சாப தாக்கத்தை இப்பிறவியில் நிவர்த்திசெய்ய, தடுத்துக்கொள்ள ஏதாவது வழிமுறை உண்டா? இல்லை ஆயுள் முழுவதும் அனுபவித்துதான் வாழவேண்டுமா?

காகபுசுண்டர்: அகத்தியர் பெருமானே, முற்பிறவியில் ஒருவர், பிறருக்குச் செய்த பாவச் செயல்களே, அடுத்த பிறவியில், விதியாக செயல்பட்டு அனுபவிக்கச் செய்கின்றது.

இந்த விதியின் விளையாட்டை எந்த சக்தி யாலும் மாற்றமுடியாது, தீர்க்கமுடியாது, தடுக்கமுடியாது. ஆனால் அவரவர், தன் வாழ்வின் நடைமுறை செயல்கள்மூலம், இந்த பாதிப்புகளைத் தடுத்துக்கொண்டு நல்ல வாழ்வை அவரவரே அமைத்துக் கொள்ள முடியும். இந்த நடைமுறை நிவர்த்திப் பற்றியும் கூறுகின்றேன்.

முற்பிறவியில், ஆண்கள், தன் மனைவிக்குச் செய்த பாவங்களை இந்த பிறவியில், தனக்கு மனைவியாக வாழவந்தவள், என்ன சீர்வரிசை கொண்டுவந்தாள்? எவ்வளவு வரதட்சணை பணம் கொண்டுவந்தாள்? மனைவிமூலம் சொத்து கிடைக்குமா? மனைவி உத்தியோகம், தொழில் செய்து பணம் சம்பாதித்து தருவாளா? மனைவி வீட்டார் நமக்கு என்ன செய்தார்கள்? எவ்வளவு செய்வார்கள்? என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கவேண்டும்.

இந்த பிறவியில் மனைவிக்கு, பசிதீர்க்க அன்ன தானம், மானம் காக்க ஆடை தானம், அவள் அழகாக இருக்க, அணிந்து மனம் மகிழ சொர்ண நகை தானம், மழை, குளிர், வெயில் பாதிப்பில்லாமல் வாழ, வீடு, கிரகதானம், மனைவியின் சரீரம், ஆன்மா, அவதியுறாமல் இருக்க கர்ப்பதானம் இவற்றை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நடைமுறை செயல்கள்மூலம், குடும்ப வாழ்வில் செய்து, மனைவியை மனநிறைவுடன் வாழச் செய்தால், இந்த பாவ- சாபத்தால் உண்டாகும் தீமைகளை நாமே தடுத்துக் கொள்ளமுடியும்.

முற்பிறவியில், பெண்கள், தன் கணவனுக்கும், கணவன் வீட்டாருக்கும் செய்த பாவங்களை, இப்பிறவியில் யார்? கணவனாக அமைந்துள்ளானோ, அவனுக்கும் அவனைப் பெற்றவர்களுக்கும், மரியாதைசெய்து, அவர்கள் துன்பப்படாமல் காப்பாற்றி, பாதுகாத்து, பணம், பொருளை சிக்கனமாக செலவுசெய்து, சேமித்து வாழவேண்டும். பிறரைப் பார்த்தும், பிறர் சொல்வதைக் கேட்டும் எதையும் செய்யக்கூடாது. பூர்வீகத்தில் முன்னோர் தேடிய சொத்துகளை விரையம் செய்து, அழித்துவிடக்கூடாது. நடைமுறை வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், முற்பிறவி பாவச் செயலால் உண்டாகும் தீமையான பலன்களை தடுத்துக்கொள்ளலாம். பாவ- சாபம் தீர்க்க இது அறிவுரை அல்ல நடைமுறை வழிகள்.

அகத்தியர்: காகபுசுண்டரே, இன்று சபை கலையும் நேரம் வந்துவிட்டது இன்று சபை கலையலாம்.

"தன்னுடன் பிறவா சகோதரம்

தன்னைப் பெறாத தந்தை தாய்

அன்னிய ரிடத்து செல்வம்

மருவும் பொருள் வேசியாசை

மண்ணிய ஏட்டின் கல்வி

மாற்றான் மனையாட்டி வாழ்க்கை

இன்னவாங் கருமம் எட்டும்

இடுக்கத்துக்கு உதவாது அன்றோ'.

-விவேகசிந்தாமணி

உடன்பிறவா சகோதரன், தன்னைப் பெறாத, தந்தை- தாய், மற்றவரிடம் உள்ள செல்வம் பொருளாசை கொண்ட வேசியர் நேசம், புத்தகத்தில் படிக்கும் ஏட்டுக்கல்வி, மற்றவன் மனைவியோடு, கூடிவாழும் வாழ்க்கை, இந்த எட்டும் ஆபத்துக் காலத்தில், தக்க சமயத்தில் உதவாது.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)